மான்சிக்காக – பாகம் 01 – மான்சி கதைகள்

roomance-1தங்க நதியும்.. வெள்ளி நதியும் கைகோர்த்துக் கொண்டு வந்து ஒன்றாக கலக்கும் ஒரு பொன்மாலைப்பொழுது… நிலவின் வருகைக்காக சூரியன் ரத்தினக் கம்பளம் விரித்து காத்திருக்க… மலர்ந்த பூக்கள் தங்கள் வாசனையால் நிலவுக்கு வரவேற்புரை வாசித்தது..

அப்போதுதான் வயக்காட்டில் இருந்து வந்த சத்யன் சட்டையை கழட்டி கொக்கியில் மாட்டிவிட்டு, முற்றத்தில் இருந்த பெரிய அண்டாவில் இருந்து தண்ணீரை மொண்டு முகம் கைகால்களை கழுவிட்டு கொடியில் கிடந்த டவலை எடுத்து முகத்தை துடைத்துக்கொண்டு வந்து முற்றத்தை ஒட்டியிருந்த கூடத்தில் இருந்த பிரம்பு சேரில் அமர்ந்தான் சத்யன் வீடு பிரமாண்டமான பழையகாலத்து மச்சு வீடு… அதாவது சதுரக்கட்டு வீட்டின் நாலாபுறமும் ஓடுகள் வேயப்பட்டு, நடுவே காங்க்ரீட் போடப்பட்ட மச்சு வீடு.



பின்புறம் இரண்டு ஏக்கர் பரப்பளவில் தோட்டம், தோட்டத்தின் கடைக்கோடியில் சுமார் முப்பது மாடுகள் கட்டி வைக்கப்பட்டிருக்கும் மிகப்பெரிய மாட்டு கொட்டகை,, சுற்றிலும் இரண்டடி அகலமும் எட்டடி உயரமும் கொண்ட காம்பவுண்ட் சுவர், அதற்கு மரத்தால் ஆன பெரிய கேட்… வீட்டின் தரைதளம் முழுவதும் பெரிய பெரிய கருப்புநிற கருங்கற்கள் பதிக்கப்பட்டு தரையில் நம் முகம் தெரியுமளவிற்கு வழவழவென்று பாலீஷ் செய்யப்பட்டிருந்தது,

நான்கு பக்கமும் ஏராளமான அறைகள் கொண்ட இந்த வீட்டில் தற்சமயம் வசிப்பது சத்யனும் அவன் அம்மா பஞ்சவர்ணமும் தான்,, இந்த இருவருக்கும் எட்டு வேலைக்காரர்கள்.. பின்னால் இருக்கும் மாட்டுக் கொட்டகையில் வேலை செய்ய நான்கு ஆண்களும்… தோட்டக்காரன் ஒருவன்.. சமையலுக்கு சின்னம்மாள், மற்ற வேலைகளுக்கு இரண்டு பெண்கள், என்று மொத்தம் எட்டு ஊழியர்கள்…



வீட்டின் செல்வச்செழிப்பு ஒவ்வொரு இடத்திலும் தெரிந்தது அந்த வீட்டில் வெகு காலமாக சமையல் செய்யும் சின்னம்மாள் கையில் காபி டம்ளரோடு வந்து பணிவுடன் நீட்ட … அதை வாங்கிய சத்யன் “ அம்மா எங்க சின்னம்மா?” என்று கேட்டான் “ நாளைக்கு அறுப்புக்கு ஆள் சொல்ல போயிருக்காங்க தம்பி” என்றுவிட்டு சமையல நோக்கி திரும்பியவள் மறுபடியும் வந்து தயங்கி தயங்கி

“ தம்பி ரெண்டு நாளா நீஙக சரியா சாப்பிடாததால பெரியம்மாவும சரியா சாப்பிடலை தம்பி… இன்னிக்கு ராவைக்காவது அம்மாவை சாப்பிட வைஙக தம்பி” என்று கலங்கிய கண்களுடன் கூறிவிட்டு “ எப்படியிருந்த குடும்பம் நாலு நாளைக்குள்ள இப்படியாருச்சே… எந்த பாவி கண்ணு பட்டுச்சோ” என்று போகிறபோக்கில் சொல்லியபடி முந்தானையால் கண்களை துடைத்துக்கொண்டு போனாள்… சின்னம்மாள் சொல்லிவிட்டு போய்விட்டாள்..

ஆனால் சத்யனுக்கு அதன்பிறகு காபி தொண்டையில் இறங்க மறுத்தது, எப்படியிருந்த குடும்பம்? ஆமாம் எப்படியிருந்த குடும்பம்தான்,, இன்று அத்தனை மரியாதையையும் இழந்து கடைசியாக இருக்கும் கொஞ்சநஞ்ச மானமும் இன்னும் இரண்டு நாட்களில் ஏலம் போய்விடும்,, அதன்பிறகு? எல்லாம் என்னால்தான்…. நான் செய்த தவறு என் குடும்பத்தையே அளித்துவிடும் போலருக்கே? சத்யன் இதை நினைத்த மாத்திரத்தில் நெஞ்சை அடைத்தது….

See also  மனசுக்குள் நீ - பாகம் 04 - மான்சி தொடர் கதைகள்



காபியை குடிக்காமலேயே வைத்துவிட்டு எழுந்து தனது அறைக்கு போனான், மிகப்பெரிய படுக்கையறை, பிரமாண்டமான தேக்குமரக் கட்டிலில், சத்யன் அந்த கட்டிலில் படுத்து பலவருடங்கள் ஆகிவிட்டது,, அவனது தூக்கம் மிக சொற்பமான நேரம்தான், அதுவும் வெளியே வராண்டாவில் கிடக்கும் கயிற்று கட்டிலில் தான்,, பணக்காரத்தனம் இல்லாத எளிமையான கைத்தறி வேட்டியும் காட்டன் சட்டையும் தான் அவனது உடைகள்,

தனது உடைகள் இருந்த அலமாரியை திறந்தான்,, இரண்டு நாட்களுக்கு முன்பு முதன்மை வேலைக்காரன், நீண்டநாள் உண்மை ஊழியன் ராமையா ஒரு லெதர் பேக்கில் சத்யனது உடைகளை எடுத்து வைத்து, அதை இவனிடம் கொடுத்து “ ஐயா கொஞ்ச நாளைக்கு எங்கயாவது போய் தலைமறைவா இருங்கய்யா” என்று காலில் விழுந்து கதறியது ஞாபகத்தில் வந்து மறுபடியும் சத்யனின் நெஞ்சை அடைத்தது…

அந்த பையை அலமாரியில் வீசிவிட்டு கட்டிலில் வந்து தலையைப் பிடித்துக்கொண்டு அமர்ந்தான்,, இரண்டே நாட்களில் அவனை உருக்குலைத்த இந்த பிரச்சனைக்கு முடிவுதான் என்ன? அவனுக்கு எதுவுமே புலப்படவில்லை… இதுவரை எத்தனையோ துன்பங்கள் வந்தபோதெல்லாம் மரணத்தைப் பற்றி யோசிக்காதவன் “ நிம்மதியாய் தற்கொலை செய்துகொண்டு செத்துவிட்டால் என்ன?” என்று யோசித்தான்..



ஆனால் அதன்பிறகு இவனுக்காகவே உயிர்வாழும் எனது அம்மாவின் கதி? சத்யன் பலவாறாக யோசித்து குழம்பிக்கொண்டிருக்கும் போது.. மூடியிருந்த கதவுக்கு வெளியே ராமையாவின் குரல் பதட்டமாக அழைத்தது “ சின்னய்யா இருக்கீங்களா?”.குரல் நடுங்கியது . ராமையாவின் பதட்டம் வித்தியாசமாக இருக்க சத்யன் அவசரமாக கதவை திறந்து வெளியே வந்து “ என்ன ராமையா?” என்றான்

“ தம்பி நம்ம பெரிய வைக்கோல் படப்பு நாலாபக்கமும் தீ பிடிச்சு எரியுதுங்க, ஆளுக தீயை அணைச்சு பார்த்தாக முடியலை, அதான் ஓடியாந்தேன்ங்க ” என்றவர் சொல்லி முடித்துவிட்டு துண்டை எடுத்து வாயைப்பொத்திக் கொண்டு கண்கலங்கினார்… இது ஒரு இடியா என்று யோசித்த சத்யன் சட்டையைப் போட்டுக்கொண்டு வெளியே வந்து தனது புல்லட்டில் அமர்ந்து வயலுக்கு வண்டியை விரட்டினான்…

அவன் போய் சேர்வதற்குள் நாற்பது மாடுகளின் உணவும் தீக்கிரையாக்கியிருந்தது, சுற்றிலும் இருந்த மக்கள் தண்ணீரை ஊற்றி தீயை அணைத்ததில் இரண்டு செமை வைக்கோல்தான் மிஞ்சியது.. காற்றில் சாம்பலாய் பறந்த தனது உழைப்பை கண்டு சத்யனின் வயிறு கலங்கியது… அவனுக்குப் பின்னாலேயே ஓடிவந்த பஞ்சவர்ணத்தம்மாள் எரிந்துபோன வைக்கோல் போரைப் பார்த்து வாயிலும் வயிற்றிலும் அடித்துக்கொண்டு

“ அடப்பாவிகளா வாயில்லா ஜீவனுங்க வயித்துல அடிச்சிட்டானுங்களே.. நல்லாருப்பாங்களா?” என்று கத்தி கதறினார்.. சத்யன் திரும்பி தனக்குப் பின்னால் நின்ற ராமையாவை கூர்மையுடன் பார்க்க … அவர் தலையை குனிந்துகொண்டு “ பொழுதுசாய நம்ம மீனாம்மா பசங்க தானுங்க இந்த பக்கமா வந்தாங்களாம் நம்ம செவலமுத்து பார்த்திருக்கான்” என்றார் மெல்லிய குரலில்..

See also  மான்சிக்காக - பாகம் 40 - மான்சி கதைகள்



“ அய்யோ என் வயிறு எரியுதே… பத்தவச்ச பாவிக குலம் விளங்குமா….” என்று மண்ணை வாரி காற்றில் தூற்றியபடி கூச்சலிட்ட தாயின் வாயைப் பொத்திய சத்யன் “ ஆத்தா உன் வாயால இந்த மாதிரி சொல்லாத.. பத்தவச்சது உன் பேரனுங்க தானாம்” என்ற சத்யன் விரக்தியுடன் பக்கத்தில் இருந்த நெற்களத்தின் சிமிண்ட் மேடையில் அமர்ந்தான் சத்யன் அருகே வந்து அமர்ந்த ஊர் பெரியவர் ஒருவர்

“ ஏலே சத்தி இது அநியாயம்… நேத்து கரும்பு ஏத்திக்கிட்டுப் போன டிராக்டருக்கு தெரிஞ்சே நெருப்பு வச்சானுங்க, யாரு செஞ்ச புண்ணியமோ டிரைவரு எகிறி குதிச்சிட்டான்,, இன்னிக்கு வாயில்லா ஜீவனுங்க தீனியை அழிச்சிட்டானுங்க,, ஊரு சனம் வந்து தீயை அணைக்கலைன்னா நாளைக்கு அறுவடையாகுற நெல் பயிரெல்லாம் தீயில நாசமாயிருக்கும்” நாங்க இத சும்மா விடுற மாதிரி இல்ல, மணியத்துக்கிட்ட சொல்லி அவனுகளை கூப்பிட்டு விசாரிக்களாம் வாப்பா ” என்று அழைத்தார்

Leave a Comment

error: read more !!