மனசுக்குள் நீ – பாகம் 13 – மான்சி தொடர் கதைகள்

மான்சியும் விடாமல் “ ஏன் தெரியாது,, எல்லாம் தெரியும்,, ஆனா அவங்க மட்டும் சந்தோஷமா இருக்காங்கன்னு உங்களுக்கு தெரியுமா,, அவங்களுடைய இழப்பு உங்களுக்கு புரியுமா,, நீங்க பட்டதைவிட அவங்களுடைய அவமானம் பலமடங்கு,,

வீட்டுக்கு ஒரே மகனை வீட்டைவிட்டு விரட்டிட்டாங்கன்னு ரஞ்சனா ஆன்ட்டியை எவ்வளவு பேர் இன்னும் கேவலமா பேசுறாங்கன்னு தெரியுமா உங்களுக்கு,, அனிதாவை பார்க்க ஹாஸ்டலுக்கு வரும்போதெல்லாம் அவங்க அழுத அழுகையை நேரில் பார்த்தவ நான்,, எனக்கு தெரியும் அந்த கண்ணீர் பொய்யில்லைன்னு” என்று மான்சி ஆவேசமாக பேசிக்கொண்டு இருக்கும்போதே,, பியூன் கதவை தட்டிவிட்டு காபியுடன் உள்ளே வந்து மேசையில் வைத்துவிட்டு வெளியேறினான்



பியூன் வந்ததும் இருவரும் அமைதியானார்கள்,, சத்யன் காபியை அவளிடம் நகர்த்தி “ எடுத்துக்கோ” என்று சொல்லிவிட்டு தனது காபியை ஸ்பூனால் கலக்கினான்

மான்சி காபியை தொடாமல் “ காலையில அனிதா போன் பண்ணாளா?” என்று சத்யனைப் பார்த்து கேட்க

அவளை ஆச்சர்யமாக பார்த்த சத்யன் “ ம்ம் பண்ணா” என்றான்

“ அதைப்பத்தி என்ன முடிவு பண்ணியிருக்கீங்க” என்று கேட்டாள் மான்சி
அதற்க்கு என்ன பதில் சொல்வது என்று அமைதியாக இருந்த சத்யன் பிறகு “ முடிவுகள் எல்லாம் ஏற்கனவே எடுத்ததுதான்,, நான் அந்த வீட்டுக்குள்ள கால் வைக்கமாட்டேன்” என்றான் உறுதியாக

மான்சி எதுவும் பேசவில்லை பட்டென்று எழுந்துகொண்டாள்,, “ நேரமாகுது நான் கிளம்புறேன்” என்று சொல்லிவிட்டு கதவை நோக்கி நகர்ந்தாள்

பட்டென்று அவள் கிளம்புவாள் என்று எதிர்பார்க்காத சத்யன் அவசரமாக “ இரு மான்சி இந்த காபியை குடிச்சுட்டு போ மான்சி” என்றான்

திரும்பி அவனை பார்த்த மான்சி “ எனக்கு வேண்டாம்,, இந்த நேரத்தில் காபி குடிச்சு எனக்கு பழக்கமில்லை” என்று கூறிவிட்டு கதவை அனுகினாள்

“ அதை ஆர்டர் பண்ணும்போதே சொல்ல வேண்டியதுதானே,, ச்சே நேஷனல் வேஸ்ட்” என்றான் குரலில் எரிச்சலுடன்

கதவருகே சென்று நின்று திரும்பிய மான்சி “ எனக்கா காபி சொன்னீங்க,, நான் உங்களுக்கும் பியூனுக்கும்ல நெனைச்சேன்,, சரி ரெண்டயும் மிக்ஸ் பண்ணி நீங்களே குடிங்க,, எதுவும் நேஷனல் வேஸ்ட் ஆகாது ” என்று சொல்லிவிட்டு கதவை திறக்க குமிழில் கைவைத்தாள்

அவள் தன்னை நக்கல் செய்கிறாள் என்று சத்யனுக்கு புரிந்தது,, “ கொஞ்சம் இரு மான்சி” என்று கூறி எழுந்தவன் அவளிடம் சென்றான்



அவளை நெருங்கிய சத்யன் கதவின் குமிழை பற்றியிருந்த அவளின் கையை தனது கையால் பற்றி விலக்கினான், பற்றிய கைகளை விடாமல் தனது நெஞ்சில் வைத்து,,அவள் முகத்தை நேரில் பார்த்து “ நீ இவ்வளவு பேசுவியா,, இங்கே எல்லாரும் என்கிட்ட பேசவே பயப்படுவாங்க,, நீ என்னையே எதிர்த்து பேசுற,, ம்ம் ரொம்பத்தான் தைரியம்” என்று குறும்பான குரலில் கேட்க

See also  சுவாதி என் காதலி - பாகம் 44 - தமிழ் காமக்கதைகள்

அவன் கைகளில் இருந்த தனது கையை விடுவிக்க முயன்றபடி “ அது ஒன்னும் பயம் இல்ல ,, உங்களுக்கு எல்லாரும் குடுக்குற மரியாதை” என்று மான்சி அவனுக்கு பதில் கூறினாள்
“அப்போ உனக்கு என்மேல மரியாதை இல்லையா”என்று சத்யன் அவள் விரல்களை தன் கையால் நெரித்துக்கொண்டே கேட்டான்

அடப்பாவி இப்படி மடக்குறானே,, இதுக்கு என்ன பதில் சொல்றது என்று குழம்பி தவித்து அவன் முகத்தை பார்த்த மான்சி “ இப்படி மடக்கி மடக்கி கேள்வி கேட்டா என்ன பதில் சொல்றது” என்று சினுங்கிய மான்சி “ வெளியே இருக்கிறாவங்க மரியாதையினால எதிர்த்து பேசமாட்டாங்க,, எனக்கு ஓரளவுக்கு நீங்க அறிமுகமானவர் என்ற உரிமையில இப்படி பேசிட்டேன்,, தவறா இருந்தா மன்னிச்சிடுங்க” என்று மான்சி அவனிடம் மன்னிப்பு கோரும் குரலில் பேச

“ அப்படின்னா நான் உனக்கு அறிமுகமானவனா மான்சி?, ஆனா நான் உன்னை நேத்து காலையில தானே பார்த்தேன்” என்று மறுபடியும் அவளை மடக்கினான்

அவன் வார்த்தைகளால் அவளை மடக்கினாலும் ஒவ்வொரு வார்த்தையும் அவளை சிவக்க வைத்தது,, இவன் இன்று தன்னை அதிகமாக பேச வைக்கிறான் என்று மனதில் எண்ணியவாறு “ நீங்க என்னை நேத்துதான் பார்த்தீங்க ஆனா நீங்க எனக்கு கிட்டத்தட்ட மூனு வருஷமா அறிமுகமானவர் தான்,, உங்களோட வளர்ச்சி ஒன்னொன்னா எனக்கும் தெரியும்,, இது போதுமா இல்ல இன்னும் ஏதாவது தெரிஞ்சுக்கனுமா” என்று பார்வையிலும் குரலிலும் கோபத்தை தேக்கி மான்சி கேட்க



“ போதாதே இன்னும் நிறைய தெரியனுமே,, ஆனா அதெல்லாம் போகப்போக தெரிஞ்சுக்கிறேன்,, இப்போ ஒரேயொரு விஷயம் மட்டும் நீ தெரிஞ்சுகிட்டு போ மான்சி,, அனிதா,, அபிநயா, வசு இவங்க யார் மேலயும் எனக்கு எந்த கோபமும் இல்லை,, என் கோபமெல்லாம் என் அம்மா உயிரோட இருக்கும்போதே தனக்கு மற்றொரு துணையை தேடிக்கிட்ட என் அப்பா மேலயும்,, திருமணமானவர் ஒரு பிள்ளைக்கு தகப்பன்னு தெரிஞ்சும் எங்கப்பாவை தன்வசப்படுத்தின அனிதாவோட அம்மா மேலயும் தான் என் கோபமெல்லாம்,, அது நீ மட்டும் இல்ல வேற யார் சொன்னாலும் மாறாது மான்சி,, அதனால வீனாக என் மனதை மாற்றும் முயற்சியை விட்டுடு” என்று சத்யன் தீர்மானமாக சொன்னான்

பட்டென்று அவன் கையை உதறி விலகிய மான்சி,, சற்றுத்தள்ளி நின்று தன் மார்புக்கு குறுக்கே கைகட்டி பக்கவாட்டில் தலைசாய்த்து “ அப்போ உங்களுக்கு என்ன வயசு இருக்கும் சார்” என்று கேட்டாள்

அவள் நின்ற ஸ்டைல் மேலும் அவளிடம் அவனை ஈர்த்தது,, அவள் கைகளை மார்புக்கு குறுக்கே கட்டியதால் மேல் நோக்கி பிதுங்கிய மார்புகளை அவளின் சுடிதார் துப்பட்டாவால் மறைக்க முடியவில்லை ,, அந்த இளமை கலசங்கள் பொங்கி வழிய,, சத்யன் அங்கிருந்து தனது பார்வையை திருப்ப முடியாமல் திணறினான்

See also  மான்சிக்காக - பாகம் 50 - மான்சி கதைகள்

அவன் பார்வை சென்ற இடத்தை கவனித்து சட்டென்று கட்டியிருந்த கைகளை விலக்கி தனது துப்பட்டாவால் முடிந்தவரை மூடினாள்,, அவன் பார்வை அவளை சிவக்க வைக்க தலையை குனிந்துகொண்டாள்

அவள் கவனித்து விட்டாள் என்று தெரிந்ததும் சத்யனுக்கு சங்கடமாக இருந்தது ,, இருந்தாலும் அவள் கேள்விக்கு பதில் சொல்ல வேண்டும் என நினைத்து “ அப்போ எனக்கு வயசு பனிரெண்டு இருக்கும்” என்று சத்யன் சொன்னான்

இதை கேட்டதும் அவனை நிமிர்ந்து பார்த்தவள் “ அந்த வயசுல மனுஷங்களை புரிஞ்சுக்குற பக்குவம் உங்களுக்கு வந்துருச்சா? ஒரு கணவன் மனைவிக்குள்ள என்னன்ன நடக்கும் , அல்லது நடந்தது,, என்று உங்களுக்கு புரியக்கூடிய வயசா அது,,ஒரு மனிதனின் இளமைத் தேவைகள் என்னன்னு உங்களுக்கு அந்த வயசுல தெரியுமா” என்று மான்சி சரமாரியாக கேள்வி கேட்க

அவள் கேட்ட அத்தனைக்கும் சத்யனின் பதில்,, தெரியாது என்ற தலையசைப்பு தான்



“ அப்படின்னா நீங்க ஒரு சுயநலவாதி சார்,, அந்த பெரிய வீட்டில் உங்களுடைய இடம் பறிபோய் விடக்கூடாது என்ற ஒரே காரணத்துக்காகவே நீங்க மற்றவர்களை ஒதுக்கி வச்சுட்டு வந்துருக்கீங்கன்னு நான் சொல்றேன்” என்று மான்சி அவனுக்கு எதிராக வாதம் செய்தாள்

இதை கேட்டதும் சத்யனின் முகம் இறுகிவிட்டது,, “ அப்படின்னா என் அம்மா உயிருடன் இருக்கும் போதே இன்னொரு பொண்ணு கூட வாழ்ந்த என் அப்பா நியாயவாதி,, நான் சுயநலவாதியா? உன்னால எப்படி இதுபோன்ற தவறுகளை நியாயப்படுத்தி பேசமுடியுது மான்சி? ” என்று சத்யன் கேட்டான்

“ நான் நியாயப்படுத்தலை சார்,, எதுவுமே புரியாத வயசுல அவங்க பண்ணது தப்புன்னு முடிவெடுக்கும் உரிமை உங்களூக்கு கிடையாது,, அவங்க பக்கத்தில் என்ன நடந்ததுன்னு உங்களுக்கு இன்னும் தெரியாது,, அப்படியிருக்க எந்த விசாரனையும் இல்லாமல் அவங்களுக்கு ஆயுள் தண்டனை குடுத்திருக்கீங்க சார் நீங்க” என்று மான்சி தீர்க்கமாக கூறினாள்

அவளை எரிச்சலாக பார்த்த சத்யன் “ ஆமாம் இந்த அசிங்கத்தை விசாரணை வேறு பண்ணனுமா,, அந்த லேடி எங்கப்பா கிட்ட ஸ்டெனோவா வேலை செய்தாங்களாம்,, எங்கம்மா படுத்த படுகையா ஆனதும் ஆபிஸ்ல வச்சே எங்கப்பாவை மயக்கி கைக்குள்ள போட்டுக்கிட்டாங்க,, எங்கம்மா போனதும் பணக்காரி ஆகும் ஆசையில வீட்டுக்கு வந்துட்டாங்க, அவ்வளவுதான் விஷயம்” என்றான் சத்யன் அலுப்பாக



அவனுக்கு எப்படி புரியவைப்பது என்று யோசித்த மான்சி “ ஏன் சார் நானும் நீங்களும் இந்த அறைக்குள்ள வந்து கிட்டத்தட்ட இரண்டு மணிநேரம் ஆகப்போகுது,, வெளியே இருக்கிறவங்களுக்கு நாம என்ன செய்கிறோம் என்ற கற்பனை எக்கச்சக்கமா வரத்தான் செய்யும்,, ஆனா மூடிய அறைக்குள்ள நாம என்னப் பண்றோம்னு நமக்கு மட்டுமே தெரியும்,, அதனால எதுவும் தெரியாமல் எந்த முடிவும் எடுக்காதீங்க சார்,, ஏதோ எனக்கு தெரிஞ்ச விஷயங்களை பேசினேன், உங்கள் பர்ஸனல் பேசினது தப்புன்னா என்னை மன்னிச்சுடுங்க” என்று கூறி திரும்பினாள்

See also  மான்சிக்காக - பாகம் 65 இறுதி - மான்சி கதைகள்

பின்புறமாக அவள் தோளைத் தொட்டு தன்புறமாக திருப்பிய சத்யன்,, அவள் முகத்தையே உற்று பார்த்தான் “ என்னை எதிர்த்து பேசிய இந்த உதடுகளை அப்படியே கடிச்சு துப்பனும் போல ஆத்திரமா வருது,, ஆனா அதுக்கப்புறம் நான்தானே சிரமப்படனும் அதனால சும்மா விடுறேன்,, இல்லேன்னா அவ்வளவுதான்” என்று போலியாக மிரட்டி காதலாக அவளின் தேன் சிந்தும் இதழ்களை பார்த்தான் சத்யன்



மான்சி வெட்கத்துடன் அவனிடமிருந்து விலக திமிறினாள்,, அவன் முரட்டு கரங்களை விலக்கமுடியாமல் திண்டாடியவளை பார்த்து சிரித்த சத்யன் “ என்னை பேச்சில் மட்டுமே நீ ஜெயிக்க முடியும் மான்சி” என்று கூறி அவளின் ஈர இதழ்களை நெருங்கினான்

Leave a Comment

error: read more !!