பூவும் புண்டையையும் – பாகம் 171 – தமிழ் காமக்கதைகள்

1328662_f520-2ஆற்றில் நிறைய தண்ணீர் ஓடிக்கொண்டிருந்தது. இயற்கைச் சூழல்.. மிகவும் அமைதியாக இருக்க.. சரக்கடிப்பது மிகவும் பிடித்திருந்தது..!!

சரக்கடிப்பதும்.. ஆற்றில் இறங்கி ஆடுவதுமாக.. அன்று மாலைவரை அங்கேயே கழிந்தது.
அங்கிருந்து கிளம்பும் போதே.. அடித்த சரக்கு அதன் வேலையைக் காட்டத் தொடங்கிவிட்டது.
‘தலைவலி.’

அதைப் போக்க.. மறுபடியும்.. திரும்பி வந்து பாருக்குப் போய்.. ஒரு ஆப் வாங்கி மூவரும் குடித்துவிட்டு வீடு போனார்கள்..!!

குமுதா வீட்டில் சாப்பிட்டுவிட்டு சசி.. அவன் வீட்டுக்குப் போனபோது.. இரவு பத்தரை மணியாகிவிட்டது.
புவியின் அம்மா வாசற்படியில் உட்கார்ந்து கொண்டிருந்தாள்.!
வீட்டில் லைட் எரிந்து கொண்டிருக்க.. டிவி சத்தமும் கேட்டுக் கொண்டிருந்தது
”இப்பதான் வரயா..?” எனக் கேட்டாள் புவியின் அம்மா.



” ஆமாக்கா.. ஏன் வாசப்படில உக்காந்துட்டிங்க..?”

” இப்பதான் சாப்பிட்டேன்.. ஒரு கொஞ்ச நேரம் உக்காரலாம்னு..! நீ சாப்பிட்டியா..?”

”சாப்பிட்டேன்க்கா..”

”அம்மாக்கு எப்படி இருக்கு..?”

”இப்ப நல்லாதான் இருக்கு.. ஒன்னும் பிரச்சினை இல்ல..” என்றான்.

”கவி ஏதாவது போன் பண்ணாளாக்கா..?”

”எட்டு மணிக்கு என்னமோ பண்ணா சசி..”

”புவி..?” எனக் கேட்டான்.

”டி வி பாத்துட்டு படுத்திட்டிருக்கா..” என்றாள்.

சாவியை எடுத்து பூட்டைத் திறந்தான் சசி.
புவியின் அம்மாவும் எழுந்தாள்.
”தூங்கலாம் சசி..”



”சரிக்கா.. குட்நைட்..” என்றான்.

அவளுக்கு குட்நைட் சொன்னதற்காகச் சிரித்தவிட்டு பாத்ரூம் போனாள்.

சசி உள்ளே போய்.. பேண்ட்.. சர்ட்டைக் கழற்றிவிட்டு லுங்கியை எடுத்துக் கட்ட…
உள்ளே வந்தாள் புவியாழினி..!!
அவனைப் பார்க்காமல்.. அவள் பாட்டுக்கு வந்து சேரில் உட்கார்ந்தாள்..!!

அவனும் பேசவில்லை..!
அவளும் பேசவில்லை..!!
கட்டிலில் சாய்ந்து படுத்தான் சசி.

”சாப்பிட்டிங்களா..?” என மெதுவாகக் கேட்டாள் புவி.

அவன் பதில் சொல்லவில்லை. கண்களை மூடினான்.!

”ஏதாவது வேனுமா..?” என்று கேட்டாள்.

அதற்கும் அவன் பதில் சொல்லாமல் இருக்க.. ஒரு பெருமூச்சுவிட்டு..
”குட்நைட்..” எனச் சொல்லிவிட்டு சட்டென எழுந்து வெளியே போனாள்……!!!

கண்களை மூடிப் படுத்த.. சசியின் தலை ‘கிர்’ ரெனச் சுற்றியது.
சட்டென கண்களை விழித்து.. தலையை ஒரு உதறு.. உதறிக்கொண்டான்.!
தலையைத் தூக்கிப் பார்த்தான்..




புவி போய்விட்டாள்.
கதவு லேசாகத் திறந்திருந்தது.
எழுந்து போய் கதவைச் சாத்தித் தாழிட்டான்.
அப்போதும் அவனுக்கு தலை சுழல்வது போலிருந்தது..!
லேசான தள்ளாட்டத்துடன் நடந்து போய்.. கட்டிலில் விழுந்து அப்படியே தூங்கிப் போனான்..!!
எத்தனை நேரத் தூக்கம் என்று தெரியவில்லை.
அவனுக்கு தூக்கம் கலைந்தபோது.. அவனது உடம்பு மொத்தமும் ‘குப்’ பென வியர்த்துப் போயிருந்தது.
அவன் கழுத்தும்.. நெஞ்சும் வியர்வையில் குளித்திருந்தது.
பேனைப் பார்த்தான்.
அது சுழன்றுகொண்டுதான் இருந்தது.!
அவனது நெற்றியிலிருந்தும் வியர்வை வழிந்து கொண்டிருக்க.. இரண்டு நிமிடங்களுக்குப் பிறகுதான்… கடுமையான தலைவலியை உணர்ந்தான்..!!
பக்கத்தில் கிடந்த போர்வையை எடுத்து.. அவனது முகம்..உடம்பெல்லாம்.. துடைத்துக் கொண்டு.. புரண்டு படுத்தான்..!
அவனது சுய உணர்வு அதிகமாக.. தலைவலி.. மிகவும் கடுமையாவதை உணர்ந்தான்..!
தலையைப் பிடித்துக் கொண்டு சிறிது நேரம் படுத்திருந்தான்.
அதற்குள் மீண்டும் அவன் உடம்பு வியர்வையில் குளித்துவிட்டது..!!

அவனால் எதையும் நினைக்கக் கூட முடியவில்லை. தலைவலி மண்டையைப் பிளப்பது போலிருந்தது..! எழுந்து போய் சுவற்றில் முட்டிக்கொள்ளலாமா.. என்கிற அளவுக்கு.. அவன் தலைவலியால் துவண்டு கொண்டிருக்க…..



அவனது வயிற்றில் இருந்து.. ஏதோ ஒரு உருண்டையான பந்து.. திடீரென வந்து அவன் தொண்டையைத் தாக்குவது போல் இருக்க… அவனது வாய்…
‘ஓவ்வ்வ்..’ என்கிற ஓங்கரிப்புடன்.. திறக்க…
வாந்தி வருவதை அடக்க முடியாமல் சடாரென எழுந்து.. அப்படியே முன்னால் மடங்கி… கட்டிலுக்குக் கீழே..
‘பொலே ‘ ரென தரையில்.. கக்கினான் சசி..!!

அடுத்தடுத்த தாக்குதலாகத் தொடர்ந்து மூன்று முறை.. அவன் வாந்தியெடுத்த பிறகுதான்.. அவனுக்கு சற்று.. அவகாசம் கிடைத்தது..!
ஆனால் மீண்டும் வாந்தி வரும் என்பதை உணர்ந்த சசி… சட்டென எழுந்து… வாந்தியை மிதித்து விடாமல் தாண்டிப் போய்.. கதவைத் திறக்க…
அங்கேயே.. அவன் வாய் ஓங்கரித்தது..!
கதவைத் திறந்ததும்.. வாசலிலேயே மீண்டும் ஒரு முறை வாந்தி எடுத்தான்.!
அப்படியே பாத்ரூம் ஓடி.. கதவைத் தள்ளிக்கொண்டு போய்.. சத்தமாக ஓங்கரித்தவாறு.. வயிற்றில் இருந்த கசப்பையும்.. சகிக்க முடியாத நாற்றத்தையும்..
‘பொலேர்.. பொலேர்..!!’ என வாந்தியாக எடுத்துத் தள்ளினான்.!
அவனது அடி வயிற்றில் இருந்து.. ஓங்கரித்து.. ஓங்கரித்து.. வாந்தி எடுத்தான்..!!

ஒரு பக்கம் தலைவலி.. மிக மிகக் கடுமையாக இருந்தது. உடம்பிலிருந்து வியர்வையும் கொட்டியது..!
அவன் சுவற்றைப் பிடித்துக் கொண்டு.. ஓங்கரித்துக்கொண்டிருக்க…

” என்னாச்சு..?” என அவனுக்குப் பின்னால் குரல் கேட்டது.



சட்டென திரும்பிப் பார்த்தான்.
புவி.. நின்றிருந்தாள்.
அவன் வாய் மீண்டும் ஓங்கரிக்க… சட்டென முகம் திருப்பி.. வாந்தியெடுத்தான்.!
உள்ளே வந்து.. அவனை அணைத்து நின்று.. அவன் தலையைப் பிடித்தாள் புவியாழினி.!

அவனால் பேச முடியவில்லை. அவள் தலையைப் பிடித்து அழுத்தி விடுவது.. அவனுக்கு சற்று.. ஆறுதல் கொடுத்தது.!
ஓரளவு.. வாந்தி வருவது குறைந்ததும்.. அவன் தலையைப் பிடித்திருருந்த.. அவள் கையை விலக்கிவிட்டான் சசி..!

அவள் விலகி நிற்க… தண்ணீர் எடுத்து வாய் கொப்பளித்தான்.
அவன் எடுத்த வாந்தி மீது அவன் தண்ணீர் ஊற்ற… அவள் பாத்ரூமில் இருந்து வெளியே போனாள்..!
வாயைக் கொப்பளித்தாலும்.. அவனது குமட்டல் ஓய்ந்தபாடில்லை..! வயிற்றில் இருந்து ஒன்றும் வராத போதும்.. ஓங்கரிப்பு இருந்துகொண்டுதான் இருந்தது.! அதனால் அவன் பாத்ரூமிலேயே நின்றுவிட்டான்.!
புவி.. அவன் கண்ணில் தட்டுபடவில்லை..!!

பாத்ரூம் கதவைச் சாத்திவிட்டு.. சிறுநீர் கழித்தான்.! சில நிமிடங்களுக்கு.. தலையைப் பிடித்து அழுத்திக் கொண்டே நின்றிருந்தான்..!!

அவன் நிலமை ஓரளவு சீரடைந்ததும்.. பாத்ரூம் கதவைத் திறந்து வெளியே போனான்.
கதவின் முன்பாக.. அவன் எடுத்த வாந்தியை தண்ணீர் ஊற்றி.. சுத்தம் செய்து கொண்டிருந்தாள் புவி..!

”ஏய்.. என்ன பண்ற..?” எனக் கேட்டான் சசி.

”ம்.. பந்திக்கு ரெடி பண்ணிட்டிருக்கேன்..!!” எனக் கிண்டலாகச் சொன்னாள் புவி.

”நீ எதுக்கு.. இதெல்லாம் பண்ணிட்டு இருக்க..?”



”உங்க பொண்டாட்டி வர்றவரை நான் பண்றேன்.. போதுமா..?” அவள் விளக்கு மாற்றால்.. கூட்டினாள்.

சசி திரும்பி அவள் வீட்டைப் பார்த்தான். கதவு மட்டும் திறந்திருந்தது. லைட் எரியவில்லை.
அவள் அம்மாவும் வெளியில் வரவில்லை. !
புவியைப் பார்த்தான்..!
அவள் சுத்தம் செய்திருந்தாள்..!!

அவன் எதுவும் பேசாமல்.. வீட்டுக்குள் போனான். அவனது வீட்டில் லைட் எரிந்து கொண்டிருந்தது.
கட்டிலுக்குக் கீழே அவன் வாந்தி எடுத்த இடம் ஈரமாக இருந்தது. ஆனால் வாந்தி இல்லை.
‘இவ்வளவு சீக்கிரமாக சுத்தம் செய்து விட்டாளா..?’
வாட்சைப் பார்த்தான்.
மணி.. பணிரெண்டு இருபது..!!

தலைவலி இன்னும் அவன் மண்டையைப் பிளந்து கொண்டிருந்தது.
தலையைப் பிடித்துக் கொண்டு கட்டிலில் உட்கார்ந்தான்.!
அவனிடம் இன்னும் லேசான ஓங்கரிப்பு இருந்தது.. அதனால் அவன் படுக்கவில்லை..!!

உடம்பு வியர்வை மழையைக் கொட்டிக்கொண்டே இருக்க.. எழுந்து பேனை ஸ்பீடாக வைத்துவிட்டு வந்து உட்கார்ந்தான்..!!



ஈரக்கையைத் துடைத்தவாறு உள்ளே வந்தாள் புவி.
அவன் தலையில் இருந்த கையை எடுத்தான்.
அவனையே பார்த்துக்கொண்டு.. சேரில் உட்கார்ந்தாள் புவி.!

Leave a Comment

Ads Blocker Image Powered by Code Help Pro

Ads Blocker Detected!!!

We have detected that you are using extensions to block ads. Please support us by disabling these ads blocker.

Powered By
Best Wordpress Adblock Detecting Plugin | CHP Adblock
error: read more !!