மான்சிக்காக – பாகம் 09 – தமிழ் காமக்கதைகள்

manka0தர்மன் வெகுநேர அமைதியாக இருக்க… சட்டென்று முன்னால் வந்த வீரேந்திரன் “ அவரு என்னய்யா சொல்றது… நான் சொல்றேன் எல்லாரும் கேளுங்க… என் தங்கச்சி வாழ்க்கையை நாசம் பண்ண இவன் இந்த ஊரைவிட்டே போகனும்… இல்லே நானும் என் தம்பியும் இவனை இந்த உலகத்தை விட்டே அனுப்புவோம்…

இதுதான் எங்க முடிவு” என்று ஆக்ரோஷத்துடன் உறுமினான்.. அவன் சொல்லி முடித்ததும் அங்கே பெரும் அமைதி… தர்மனின் அமைதி அவர் மகன் சொன்னதை அவர் ஏற்பது போல் இருந்தது… தலைகுனிந்து கைகளை பின்னிக்கொண்டு நின்றிருந்தார் சத்யன் நிமிர்ந்து தன் மாமனைப் பார்த்தான்… பிறகு மேடையில் இருந்தவர்களைப் பார்த்து.. “ நான் பொறந்த ஊரைவிட்டு போகமாட்டேன்..



என்னோட உயிர்தான் இவங்களுக்கு வேனும்னா தராளமா எடுத்துக்கட்டும்” என்று நெஞ்சை நிமிர்த்திக்கொண்டு நின்றான்… மேடையில் இருந்தவர்களிடம் மெல்லிய சலசலப்பு….. உடனே மேடையில் இருந்து இறங்கிய மணியம் “ ஏய் என்னப்பா இது உசுர எடுக்குறது என்னமோ மாங்கா புளியங்கா சமாச்சாரம் மாதிரி பேசுறீங்க… ஏலேய் வீரா இன்னிக்கு பேசுறதுக்கு எல்லாமே நல்லா தாம்லே.. ஆனா பழசை நெனைச்சுப் பார்க்கனும்” என்றவர்

தருமனின் பக்கம் திரும்பி “ இதோ பாரு தருமா… உனக்கு விரோதியா நிக்கிறது உன்னோட மச்சான்.. நாங்க பஞ்சாயத்து ஆளுக என்ன சொல்றோம்னா … நம்ம சத்யனுக்கு என்ன கொறைச்சல்… அவன் மகளுக்கு கல்யாணம் பண்ணி பேத்தி பொறந்துட்டாலும் அவனும் எளந்தாரி பயதான், அது நம்ம எல்லாருக்கும் தெரியும்.. அதனால மேல மேல விரோதத்தை வளக்காம உம் மகளை அவனுக்கு கட்டிக்கொடுக்குறது தான் சரின்னு நாங்க நெனைக்கிறோம்,,



உங்க ரெண்டு தரப்புக்கும் நாலுநாள் டைம் தர்றோம் அதுக்குள்ள விரோதம் தனிஞ்சு, அந்தபுள்ளையையும் ஒரு வார்த்தை கேட்டுகிட்டு முடிவெடுங்க… சொந்தபந்தத்துக்குள்ள பகை வேனாம் தர்மா” என்று சொல்லிவிட்டு அவர் மறுபடியும் மேடையில் அமர… இதை கேட்டதும் வீரேனுக்கு ஆத்திரம் பழியாய் வந்தது “ என்னடா என் **** பஞ்சாயத்து, இவன் என் தங்கச்சிய கெடுப்பானாம் இவனுக்கே அவளை கட்டிக்கொடுக்கனுமாம்… ஏன்யா உங்க வீட்டு பொண்டுகளை நான் இதேபோல பண்ணிட்டா எத்தனை பேரை எனக்கு கட்டி வைப்பீங்க? தப்பு பண்ணவனுக்கு தண்டைய சொல்லுங்கய்யான்னா….

அவன் சொகமா வாழ வழி சொல்றீக.. இதெல்லாம் நடக்காது, என் தங்கச்சிய மதுரையில பெரிய மில் ஓனருக்கு பேசி வச்சிருந்தோம், இப்போ எல்லாம் கெட்டுச்சு, நாங்க இந்தாளை சும்மா விடுற மாதிரி இல்ல” என்று கத்தியவனை யாரும் அடக்கவே இல்லை, அவன் ஆத்திரம் எல்லை மீற சத்யனை அடிக்கும் நோக்குடன் அவன் சட்டை காலரைப் பற்றி இழுக்க… அப்போது எங்கிருந்து வந்தாள் என்றே தெரியாமல் மீனா ஓடிவந்து மகனை இழுத்து தள்ளி விட்டு சத்யனின் கன்னத்தில் மாறி மாறி அறைந்து

“ அடப்பாவி உனக்கு ஏன்டா இப்புடி புத்தி போச்சு” என்று அலறியபடியே அவன் முகத்தில் அறைய.. அம்மாவின் ஆக்ரோஷத்தை பார்த்து அதிர்ச்சியுடன் விலகினான் வீரேன் சத்யன் கண்ணீருடன் அசையாமல் நின்று அத்தனை அடிகளையும் வாங்கினான்.. மீனாள் இப்படி திடீரென்று அடிக்கும் காரணம் அவனுக்கு மட்டுமே தெரியும்… எங்கே தன் மகன் தன் தம்பியின் மீது கைவைத்துவிடப் போகிறானோ என்ற பாசம் தான் அவள் அறைகளுக்கு காரணம் என்று சத்யனுக்கு மட்டுமே தெரியும்… இப்படிப்பட்ட அக்காவுக்கு நம்பிக்கை தூரோகம் பண்ணிட்டோமே என்ற குற்றவுணர்வு மேலும் அதிகமாக



“ நான் துரோகி என்னை கொன்னுடு அக்கா” என்று கதறினான் சத்யன்.., அந்த வார்த்தைக்குப் பிறகு மீனாவால் தம்பியை அடிக்க முடியவில்லை, அப்படியே தொய்ந்து சரிந்து தரையில் விழுந்தாள் ..ஊர் மக்கள் கண்கலங்கி அதை வேடிக்கைப்பார்த்தனர்,, சில பெண்கள் வந்து தரையில் கிடந்து கதறிய மீனாவை தூக்கிக்கொண்டு அங்கிருந்து போக… ராமைய்யா சத்யனின் கையைப் பற்றி இழுத்துக்கொண்டு அங்கிருந்து போனார்..

நான்கு நாட்கள் கெடுவில் பஞ்சாயத்து கலைந்துவிட்டாலும்,, அதன்பின் வந்த நான்கு நாட்களில் வீரேனையும் தேவாவையும் யாராலும் கட்டுப்படுத்த முடியவில்லை,, இதில் வீரேந்திரனின் ஆத்திரம் தான் அதிகம்,, அதற்கு காரணம் மான்சிக்கு பார்த்திருந்த மதுரை மாப்பிள்ளையின் தங்கையை வீரேனுக்கு தருவதாக பேசியிருந்தது தான்… இன்று சத்யனால் மான்சியின் எதிர்காலம் மட்டுமல்ல, இவனுக்கு கிடைக்கவிருந்த பணக்காரப் பெண்ணும் கிடைக்காமல் போனதால் ஏற்ப்பட்ட வருத்தம்..

அதனால் சத்யனின் மேல் ஏற்ப்பட்ட வெறிக்கு தம்பியை துணைக்கு சேர்த்துக்கொண்டு சத்யனின் உடைமைகளை அழித்தான்… மான்சி அறைக்குள்ளேயே முடங்கிக்கிடக்க,, அடுத்து என்ன? என்ற கலவரத்துடன் மீனா ஹாலின் மூலையில் சுருண்டு கிடந்தாள்,, தருமன் மகன்களை அடக்க வழிதெரியாமல்,, மகளின் கதி என்ன என்று புரியாமல் சோபாவில் முடங்கிக் கிடந்தார்…



வீரேனும் தேவாவும் சத்யனை அழிக்கமுடியாமல் ஆக்ரோஷத்துடன் சுற்றிக்கொண்டு இருந்தனர் .. சத்யனை அழிக்க முடியாவிட்டாலும், அவன் உடமைகளை திட்டமிட்டு அழித்தனர்,, இன்றும் அப்படித்தான், அறுவடை கழனியை குறிவைத்த நெருப்புக்கு வைக்கோல போர் இரையானது… இதோ நாளை மாலை பஞ்சாயத்து கூடப் போகிறது,, அக்காள் மகன்கள் இருவரும் பஞ்சாயத்துக்கு கட்டுப்பட போவதில்லை என்று சத்யனுக்கு தெளிவாக புரிந்தது ,,

எது நடந்தாலும் அதை ஏற்க்கும் நிலையில் இருந்தான் சத்யன்.. அன்று இரவு முழுவதும் உறக்கம் வராமல் அவன் மனதில் மான்சியைப் பற்றிய எண்ணங்கள் ஓடியது,, அவள் ஏன் என்னிடம் அப்படி நடந்துகொண்டாள்? அவள் வந்த பதினைந்து நாட்களும் பார்க்கும் நேரமெல்லாம் உரசிக்கொண்டும், தொட்டுத்தொட்டு பேசியபடி, சந்தர்ப்பம் கிடைத்தால் அணைத்துக்கொண்டும், ஏன் அப்படி என்னை சபலப்பட வைத்தாள்?



நானும் உணர்ச்சியுள்ள மனிதன் தானே என் ஏன் அவளுக்கு புரியவில்லை? இப்போது அவள் கிளறிவிட்ட தீயை அவளைக் கொண்டே அணைக்கும் படி ஆகிவிட்டதே? என்று யோசித்து யோசித்து எந்த விடையும் தெரியாமல் தவித்து விழித்திருந்தான் சத்யன்… ஊரே எதிர்பார்த்த மறுநாள் மாலையும் வந்தது,, அன்றுபோலவே இன்றும் எல்லோரும் கூடியிருந்தனர், தர்மனின் கார் சற்று தள்ளி நின்றிருக்க, அதற்குள்ளே மான்சி இருந்தாள், கார் கண்ணாடி ஏற்றிவிடப்பட்டிருந்தது “ தருமா என்னப்பா முடிவு பண்ண என்று கேட்க” என்று மணியக்காரர் கேட்க…

வழக்கம்போல் அவருக்கு பதிலாக வீரேன் தான் பேசினான்.. “ நாங்க அன்னைக்கு சொன்னது தாங்க… எங்க தங்கச்சி கல்யாணமே ஆகாம காலம் பூராவும் எங்க வீட்டுலேயே கிடந்தாலும் பராவாயில்லை… இந்த ஆள் ஊரைவிட்டு போகனும்.. எந்த நல்லது கெட்டதுக்கும் இந்த ஊருக்குள்ள கால் வைக்க கூடாது,, இதுதான் எங்க முடிவு” என்று தீர்மானமாய் பேசினான்…

Leave a Comment

Ads Blocker Image Powered by Code Help Pro

Ads Blocker Detected!!!

We have detected that you are using extensions to block ads. Please support us by disabling these ads blocker.

Powered By
100% Free SEO Tools - Tool Kits PRO
error: read more !!