மான்சிக்காக – பாகம் 14 – மான்சி கதைகள்

wthtppமீனா இதுதான் சந்தர்ப்பம் என்பதுபோல் வீட்டுக்குள் ஓடி மான்சியின் துணிகளை ஒரு பையில் அடைத்து எடுத்து வந்து செல்வியிடம் கொடுத்து “ இப்போ இதை உடுத்திக்கட்டும்.. மிச்சத்தை எல்லாம் ஆளுககிட்ட குடுத்தனுப்புறேன்” என்றவள்

“ அம்மா பெரியவன் வர்றதுக்குள்ள உன் பேத்தியை கூட்டிக்கிட்டு போயிடுமா” என்று தன் தாயிடம் சொல்ல… பஞ்சவர்ணம் தன் பேத்தியை அணைத்தவாறு அங்கிருந்து வெளியேறினார்..



செல்வி தேவனைப் பார்த்து ரௌத்திரமாய் முறைத்துவிட்டு மான்சியின் உடைகள் அடங்கிய பையை எடுத்துக்கொண்டு அவர்களுடன் போனாள்…
தேவன் அடங்கிப்போயிருந்தான்.. அவர்களை தடுக்கவில்லை…

மான்சியை தன் வீட்டுக்குள் அழைத்துப் போன பஞ்சவர்ணம் . நேராக பூஜையறைக்கு அழைத்து சென்றார்.. “ உன் தாத்தாவை கும்புட்டுக்க கண்ணு” என்று பேத்தியிடம் சொல்ல.. மான்சி அங்கிருந்த சொர்ணாம்பிகையின் படத்தையும் சேர்த்து கும்பிட்டாள்..

கொஞ்சநேரத்தில் விஷயம் ஊர் முழுக்க பரவிவிட, ஒரு பெண்கள் கூட்டமே சந்தோஷமாக பஞ்சவர்ணத்தின் வீட்டின் முன்பு கூடியது.. அதுவும் மான்சி கர்ப்பிணி என்றதும் எல்லோரும் அவளை கொண்டாடினர்

பஞ்சவர்ணம் தன் பேத்தியின் உடைகளை சத்யனின் அறையில் வைத்துவிட்டு கண்ணு நீ இங்கயே படுத்துக்கம்மா,, துணைக்கு செல்வி இருக்கட்டும்,, உனக்கு என்னா வேனுமோ செல்விகிட்ட சொல்லியனுப்பு நான் செய்து தர்றேன் கண்ணு,, எதையும் மனசுலப் போட்டு கொழப்பிக்காம இரும்மா .. இனிமே நமக்கு நல்லநேரம் தான் ” என்று தன் பேத்தியின் கூந்தலை வருடியவாறு கூறினார்



மான்சிக்கும் உடல் சோர்வாக இருந்தது… “ சரி அம்மாச்சி.. எனக்கு கொஞ்சநேரம் தூங்கனும்” என்று படுக்கையில் படுத்துக்கொண்டாள்…
மான்சியை படுக்க வைத்துவிட்டு பஞ்சவர்ணம் வெளியேறினார்.. அவர் மனமெல்லாம் சந்தோஷம் நிறைந்து இருந்தது… தனது குடும்பத்துக்கு ஒரு வாரிசு வரப்போகிறது என்ற எண்ணமே அவரை சந்தோஷப்படுத்தியது .. இனி மகன் வாழ்வில் நிம்மதியிருக்கும் என்று நினைத்து மகிழ்ந்தார்

ஆனால் அறைக்குள் படுத்திருந்த மான்சியின் மனமோ உலைக்களம் போல் கனன்று கொண்டிருந்தது… சத்யனின் துரோகம் பூவாய் இருந்த அவளை பாறையாக மாற்றியிருந்தது…

அன்று கிணற்று ரூமில் நடந்தது அவள் ஞாபகத்தில் வந்தது.. எவ்வளவு வெறியோட என்னை அந்த மாதிரி பண்ணிட்டு கடைசில பஞ்சாயத்துல தலையை குனிஞ்சுகிட்ட நல்ல பிள்ளை மாதிரி நின்னா விட்டுடுவேனா? பஞ்சாயத்து விடலாம்.. பாதிக்கப்பட்ட நான் விடுவேனா? என்று ஆத்திரத்துடன் எண்ணமிட்டாள்

அன்று சத்யன் சொன்ன வார்த்தைகள் ஞாபகம் வந்தது “ என் உயிரே போனாலும் பரவாயில்லை நீ இப்போ வேனும் மான்சி” என்ற வார்த்தைகளை நினைத்ததுமே அவள் முகம் குங்குமமாய் சிவக்க பக்கத்தில் இருந்த தலையணையை எடுத்து அணைத்துக்கொண்டாள்

மான்சிக்கு தன் வீட்டில் இருக்கும் எல்லோரையும் விட சத்யன் மாமனை ரொம்ப பிடிக்கும்.. அவனது கம்பீரம், வெள்ளை வேட்டி சட்டையில் கத்தையான மீசையாய் முறுக்கிய மீசையுடன் புல்லட்டில் வரும் மாமாவை மான்சிக்கு ரொம்ப பிடிக்கும்..



அதுவும் அவன் இவ்வளவு சிறு வயதில் கட்டுப்பாட்டுடன் எந்த பெண்ணையும் ஏறெடுத்தும் பார்க்காமல் இருப்பதை எண்ணி மான்சிக்கு மனதுக்குள் என் மாமனைப் போல் யாருமில்லை அதிகமான கர்வம் உண்டு..

சிறு வயதில் இருந்தே சத்யனை சுற்றிய வளர்ந்தவளுக்கு படித்து முடித்து வந்ததும் அவனுடனேயே இருக்கவேண்டும் என்று தோன்ற அவனைச்சுற்றியே வந்தாள்.. தனது அருகாமையில் மாமன் தடுமாறுவான் என்பதை மான்சி உணரவேயில்லை… அவளைப் பொருத்தவரையில் மாமாவுடன் இருக்கவேண்டும் என்றுதான் நினைத்தாளே தவிர அது காதலா இல்லையா என்று இன்னமும் தெரியவில்லை…

கல்யாணத்தை நிறுத்தத்தான் கிணற்றில் விழுந்தது… அவளை காப்பாற்றிய சத்யன் அவளுடன் உறவு கொண்டபோது.. முதலில் பதறித்தான் தடுத்து போராடினாள்… ஆனால் அவன் சொன்ன வார்த்தைகள் அவளை கட்டிப்போட்டது மட்டுமில்லாமல்.. எவளையுமே ஏறெடுத்துப் பார்க்காத என் மாமா என் அழகில் மயங்கிப்போனார் என்ற கர்வம் தான் அதிகமானது… இல்லையென்றால் என் மாமனை உதறித்தள்ள என்னால் முடியாதா என்ன என்று இப்போது நினைத்தாள் ..

இவள் அன்று விடுபட போராடிய போது “ நான் மட்டும் நெனைச்சேனா? எவளையுமே ஏறெடுத்துப் பார்க்காம இருந்தேனே, உன்கிட்ட இப்படி விழுந்துட்டேனே” “ என்னை கேவலமா நெனைக்காத மான்சி… உன் அழகுக்கு முன்னாடி நான் தோத்துட்டேன் மான்சி”


“ இல்ல மான்சி இந்த நிமிஷமே என் உயிர் போனாலும் பரவாயில்லை, எனக்கு நீ இப்போ வேனும்” என்று மாமன் தாபத்துடன் அன்று சொன்னதை இன்று நினைததாலும் மான்சியின் நெஞ்சு கர்வத்தில் நிமிர்ந்தது.. யாருக்குமே அசையாத தன் மாமனை தான் அசைத்து விட்ட கர்வம்.. ஆனால் அதன்பிறகு எல்லோரும் இவளைத் தேடி வந்ததும் கோழையைப் போல் தன்னை விட்டுவிட்டு ஓடியதை நினைத்தால் அதே நெஞ்சு ஆத்திரத்தில் கொதித்தது..

அதன்பிறகு பஞ்சாயத்திலும் அவன் அமைதியாக நின்றது மான்சியை மேலும் ஆத்திரப்படுத்தியது.. தன் மாமன் வீரன்.. தைரியமானவன், பெண்களை மதிப்பவன் என்று எண்ணியிருந்த மான்சியின் நினைப்பில் மண் விழுந்தது ன்று இரவு கூடிய பஞ்சாயத்தில் தான்..

‘ ஆமாங்க நடந்தது நடந்து போச்சு,, என் அக்கா மகளை நான் தொட்டேன்.. எனக்கு உரிமையிருக்கு தொட்டேன்,, இதுக்காக நான் யார்கிட்டயும் தலைகுனிய வேண்டிய அவசியமில்லை.. நான் அவ கழுத்துல தாலி கட்டப்போறேன்.. இதை யாரும் தடுக்க முடியாது” என்று தைரியமாக கூறுவான் என்று எதிர்பார்த்து மான்சிக்கு.. அவன் தலைகுனிந்து கண்ணீருடன் நின்றது தலையில் இடி விழுந்தது போலானது…



கோயிலுக்குள் இருந்து அன்றைய பஞ்சாயத்து முழுமையும் கேட்டவளுக்குள்… அப்போ வெறும் உடம்பு சுகத்தை தனிச்சுக்கத்தான் என்னை பயன்படுத்தினானா? என்ற பெறும் கேள்வி பூதகரமாய் எழுந்தது… அம்மா அவரை அடிக்கும் போதுகூட ‘நடந்தது நடந்து போச்சு மான்சியை எனக்கே குடுத்துடு அக்கா’ என்று கேட்பான் என எதிர்பார்தவளுக்கு பெரும் ஏமாற்றம் தான் மிஞ்சியது…

தன்னுடன் உறவு கொண்டதையே அவமானமாக கருதி தலைகுனிந்து நிற்க்கிறான் என்பதை உணர்ந்தபோது.. அவனுக்கு விருந்தான தனது பெண்மையை அழித்துவிட வேண்டும் போல் இருந்தது மான்சிக்கு..

அடுத்த பஞ்சாயத்திலும் செல்வியை பேசவிட்டு சத்யன் கோழையாக நிற்க்க… மான்சியின் உள்ள கொதிப்பு உச்சநிலையை அடைந்தது.. தன்னை திருமணம் செய்துகொள்ள போராடுவான் தன் மாமன் என்று எதிர் பார்த்தவளுக்கு, அவனது மவுனமும் தலைகுனிவும் அவன் மீது வன்மத்தை ஏற்ப்படுத்தியது.. என்னை தன் சுகத்துக்காக மட்டுமே அனுகியிருக்கிறான் என்ற ஆத்திரம் மேலோங்கியது



அதனால்தான் அண்ணன்கள் செய்த அத்தனையையும் வன்மத்துடன் மவுனமாக பார்த்திருந்தாள்… அந்த வன்மம் தான் மாமனை வழக்கு தொடுக்க கையெழுத்துப் போடவும் வைத்தது,, அப்பவும் நான் மான்சியை கல்யாணம் பண்ணிக்கிறேன்’’ என்று ஜாமீனில் வெளியே வருவான் என்று எதிர்பார்த்தவளுக்கு ‘ ஜெயிலில் இருந்தாலும் பரவாயில்லை’ திருமணம் பற்றி பேசாத அவனை எண்ணி குமுறித்தான் போனாள் மான்சி

Leave a Comment

Ads Blocker Image Powered by Code Help Pro

Ads Blocker Detected!!!

We have detected that you are using extensions to block ads. Please support us by disabling these ads blocker.

Powered By
Best Wordpress Adblock Detecting Plugin | CHP Adblock
error: read more !!