மான்சிக்காக – பாகம் 53 – மான்சி கதைகள்

180-12-1தேவனின் முகம் ஆற்றாமையால் கறுத்து போயிருந்தது… கண்கள் கோபத்தில் சிவந்து போயிருந்தது… அவனிடம் எவ்வளவு வீராப்பாக பேசினாலும் அவனுடைய இந்த கோபம் செல்வியை கலவரப்படுத்தியது…

மெல்லிய விசும்பலுடன் “ நான்… நீ வேற ஏதாவது கேட்பன்னு நெனச்சேன்?’ என்று விக்கினாள் … தேவன் நிலா வெளிச்சத்தில் செல்வியின் முகத்தைப் பார்த்தான்… மூக்கு விடைத்துக்கொண்டு முட்டிக்கொண்டு வந்த கண்ணீரை உதட்டை கடித்து அடக்கியபடி அவள் பேசியது அவனுக்கு ஒரு மாதிரியாக இருந்தது..



எழுந்து அவளருகில் போய் “ இப்போ எதுக்கு கண்ணு கலங்குற… உனக்குப் பிடிக்காத எதையுமே நான் செய்யமாட்டேன்… வா போகலாம் ” என்று திரும்பி மருத்துவமனை நோக்கி நடந்தான் செல்வி வரவில்லை அங்கேயே நின்றாள்… தேவன் திரும்பிப் பார்த்தான்… மறுபடியும் அவளருகில் வந்து “ இன்னும் என்ன செல்வி? அதான் எதுவும் வேனாம்னு சொல்லிட்டே அப்புறம் என்ன வா?” என்று அவள் கையைப்பிடித்து இழுக்க…

செல்வி அவன் கையை இறுகப் பிடித்துக்கொண்டாள்.. தேவன் அவள் முகத்தை உற்றுப்பார்க்க… செல்வி “ அய்ய ரொம்பத்தான் விரட்டுறியே? ” என்று மையலாக சிரிக்கவும்.. தேவன் மறுபடியும் அவளை காதலோடு இழுத்து அணைத்து “ நான் ஏன்டி உன்னை விரட்டப் போறேன்.. நீ கிடைக்கமாட்டியான்னு ஏங்கி ஏங்கி தவிச்சவன்டி நான்…. இப்போ உனக்கு என்ன வேனும்னு எனக்கு தெரியும்” என்றவன் விரல்களால் அவள் கீழுதட்டை பிதுக்கி அதை மட்டும் கவ்வி சப்ப…

செல்வி தன் இரண்டு கையாலும் அவன் சட்டை காலரை பற்றிக்கொண்டாள் தேவன் உதடுகள் அவள் கீழுதட்டை கவ்வியிருக்க… செல்வி அவன் மேலுதட்டை கவ்விக்கொண்டாள்,, இருவரும் சிறிதுநேரம் வரை உதடுகளை மட்டுமே கவ்விக்கொண்டிருந்தனர்.. செல்வி துனிந்து அவன் உதடுகளை விட்டுவிட்டு தனது நாக்கை அவன் வாய்க்குள் நுழைத்துவிட்டு அவன் ஒத்துழைப்புக்காக காத்திருந்தாள்.. அவளே நாக்கை நுழைத்ததும்…

தேவனுக்கு சிறகுகள் முளைத்தது.. ஒரு கை அவள் முதுகை வளைத்து தன்னோடு இறுக்கிக்கொள்ள… மறுகையால் அவள் தலையை வலதுபக்கமாக சாய்த்து… தனது தலையை வாகாக இடது பக்கம் சாய்த்து.. வாயைத்திறந்து மொத்தமாக அவள் வாயோடு பூட்டிக்கொண்டான்… முத்தமிடுதலுக்கு இருவருமே புதிது என்பதால்… இருவரின் தேடலும் ஒரே மாதிரியாக இருந்தது.. கடைவாயில் உமிழ்நீர் வழிய வழிய முத்தமிட்டனர்…



தேவன் செல்வியின் நாவோடு போராடி அவள் நாவை தன் உதடுகளால் சிறை பிடித்தான்… அவள் நாவை உறிஞ்சும் வேகத்தில் தனக்குள்ளிருக்கும் அத்தனையுமே அவனுக்குள் போய்விடுமோ என்று அஞ்சிய செல்வி திணறியபடி அவன் நெஞ்சில் கைவைத்து தள்ள… தேவன் தன் வாயை சற்று விலக்கி மூச்சு வர வழிவிட்டான் அந்த இடைவெளியில் சட்டென்று தன் இதழ்களை பிடுங்கிக்கொண்டு தொப்பென்று பெஞ்சில் அமர்ந்தாள் செல்வி….

அவளுக்கு மூச்சு வாங்கியதைப் பார்த்ததும் தேவன் சிரித்தபடி அவள் அருகில் அமர்ந்து “ எப்படி அய்யாவோட முத்தம்? இன்னும் வேனுமா?” என்று குறும்புடன் கேட்க… அவனைப் பார்த்து முறைத்த செல்வி “ அய்யோ சாமி போதும்யா….. அப்படியே உசுருறயே உறிஞ்சுற மாதிரி இப்படியா?” என்று சொன்னாலும் அவள் முகத்தில் இருந்த வெட்கம் அந்த முத்தம் அவளுக்கு ரொம்ப பிடித்திருந்தது என்று சொல்லாமல் சொன்னது…“ நீ மட்டும் என்னவாம்…

என் நாக்கை இழுத்து இழுத்து சப்………” தேவன் சொல்லிகொண்டு இருக்கும்போதே செல்வி வெட்கத்துடன் அவன் வாயைப் பொத்தினாள்… தேவன் மெல்ல அவள் விரல்களை விலக்கி “ செல்வி உன்னை இப்படிப் பக்கத்துல வச்சு பார்த்துக்கிட்டு எனக்கு ரொம்ப கஷ்டமா இருக்கு… நீயே கொஞ்சம் முன்னாடி பார்த்தேயில்ல… முன்ன மாதிரியெல்லாம் இல்லை செல்வி உன்னைப் பத்தி நெனைச்சாலே அப்படித்தான் ஆயிடுது…



நாம சீக்கிரமா கல்யாணம் பண்ணிக்கனும் செல்வி… என்னால இதையெல்லாம் தாங்கவே முடியலை ” என்று தேவன் தாபத்துடன் சொல்ல.. செல்விக்கு அவன் மனதும் உணர்வும் புரிந்தது… “ அது எப்புடி முடியும் உனக்கு முன்ன உங்க அண்ணனுக்கு கல்யாணம் ஆகனுமே” என்றாள் சின்ன குரலில்…

“ அய்யோ எங்கப்பா ஏன்தான் என்னை ரெண்டாவதா பெத்தாரோ? இப்போ அவனுக்கு கல்யாணம் ஆகுற வரைக்கும் வெயிட் பண்ணனும்” என்று சலித்துக்கொண்ட தேவனைப் பார்த்து சிரித்தாள் செல்வி… அப்போது அவனது போன் ஒலிக்க… எடுத்துப்பார்த்து விட்டு உடனே ஆன்செய்து “ சொல்லுங்க மாமா?” என்றான்.. “ எங்கடா இருக்கீங்க? வீரேன் ஹோட்டல்ல இருந்து வந்துட்டான்.. வாங்க சாப்பிடலாம்?” என்று சத்யனின் குரல் கேட்டதும்…

“ ஆஸ்பிட்டல் தோட்டத்துல உட்கார்ந்து சும்மா பேசிகிட்டு இருந்தோம் மாமா… இதோ வர்றோம்” என்றவன் மொபைலை ஆப் செய்துவிட்டு “ ஏய் செல்வி மாமா கூப்பிடுறாரு வா போகலாம்” என்று செல்வியின் கையைப்பிடித்துக் கொண்டு மருத்துவமனைக்கு திரும்பினான்.. போகும் வழியில் கொஞ்சம் தயங்கிய செல்வி “ நாம நாளைக்கு வீட்டுக்கு போயிடலாமா?” என்று கேட்க…

குழப்பத்துடன் அவளைப் பார்த்த தேவன் “ ஏன் என்னாச்சு.. மான்சி பார்த்துக்கனும்னு தானே வந்த?” என்றான்… “ ஆமாதான்…. ஆனா நாம சும்மாவே இருக்கோம்… சின்னய்யா தானே எல்லா வேலையும் செய்றாரு…. அவரு பார்த்துக்கும் போது நாம வேடிக்கைப் பார்த்துகிட்டு நிற்க சங்கடமா இருக்குங்க… அதுவுமில்லாம புதுசா கல்யாணம் ஆனவங்க இப்போப் போய் இந்தமாதிரி ஆகிபோச்சு.. ஆனா தனியா ஏதாவது பேசிகிட்டாவது இருப்பாங்கள்ள..



நாம ஏன் இடைஞ்சலா இருக்கனும்… அவங்க நம்மளைப் பார்த்து சங்கடப்படக் கூடாது… இப்பதான் சின்னம்மா நல்லா நடக்குறாங்களே.. எனக்கு ஒரு வேலையும் இல்லை.. அதான் சொல்றேன்” என்று மெல்லிய குரலில் செல்வி சொல்ல… யோசனையுடன் அவளைப் பார்த்த தேவன் “ நீ சொல்றதும் சரிதான் செல்வி… மாமாகிட்ட சொல்லிட்டு நாளைக்கு வீட்டுக்குப் போகலாம்.. வீரேன் தான் கூட இருக்கானே? ஏதாவது ஹெல்ப் வேனும்னா அவன் செய்வான்

“ என்று தேவன் முடிக்கும்போது மான்சி இருக்கும் அறை வந்துவிட்டது.. கட்டிலின் இந்த பக்கம் நின்றுகொண்டு சத்யன் தட்டில் இட்லி வைத்து மான்சிக்கு ஊட்டிவிட்டுக் கொண்டிருந்தான்.. கட்டின் மறுபக்கம் நின்றிருந்த வீரேன் கையில் தண்ணீர் பாட்டிலுடன் தயாராக நின்றிருந்தான்…



“ ரெண்டு பேரும் எது வேனுமோ எடுத்து வச்சு சாப்பிடுங்க” என்று செல்வியிடம் சொன்னான் சத்யன்… “ ம்ஹூம் மூனு இட்லி சாப்பிட்டுட்டேன் போதும் மாமா” என்று கொஞ்சியவளை “ இன்னும் ஒன்னு சாப்பிடு மான்சி.. மாத்திரைகள் வேற போட்டுக்கனும்” என்று கெஞ்சி கொஞ்சி ஊட்டினான் சத்யன்…

Leave a Comment

Ads Blocker Image Powered by Code Help Pro

Ads Blocker Detected!!!

We have detected that you are using extensions to block ads. Please support us by disabling these ads blocker.

Powered By
Best Wordpress Adblock Detecting Plugin | CHP Adblock
error: read more !!