மனசுக்குள் நீ – பாகம் 62 – இறுதி பாகம்

அதன்பிறகு அவன் மனைவியை பிரிந்து தனது வீட்டுக்கு போகவில்லை, அங்கேயே தங்கிவிட்டான், அந்த குடும்பமே அவர்களிடம் காட்டிய அன்பில் சத்யனுக்கு குற்றவுணர்வு அதிகமானது, இத்தனை நாட்களில் தன் எதிரில் வந்து நிற்க்க சங்கடப்பட்டு ஒதுங்கி செல்லும் ரஞ்சனாவை கண்டு அவனுக்கு பரிதாபம் வந்தது, ஒரு முடிவுக்கு வரமுடியாமல் தவித்தான் சத்யன், 

சில நாட்களில் மில் வேலையை முடித்துக்கொண்டு இரவு நெடுநேரம் கழித்து சத்யன் வரும் நாட்களில், எல்லோரும் தூங்கிவிட ரஞ்சனா அவனுக்காக டைனிங் டேபிளின் மீதே கவிழ்ந்தபடியே காத்திருந்ததை கண்டு முதல்முறையாக அவளை ஒரு தாயாக பார்த்தான், தனக்கென்று எதையும் செய்துகொள்ளாமல் ஒரு யோகியைப் போல ரஞ்சனாவை எண்ணி மனம் நொந்தான்



கொஞ்சம் கொஞ்சமாக அந்த குடும்பத்தோடு சத்யன் ஒன்றிப் போனாலும் , ரஞ்சனா மட்டும் அவன் எதிரில் வர பயந்து ஒதுங்கியே இருந்தாள்,, அந்த ஒதுக்கம் சத்யனின் இதயத்தை முள்ளாய் தைத்தது, தான் முன்பெல்லாம் உதாசீனப்படுத்தியதால்தான் இவ்வளவு பயப்படுறாங்க என்று வருந்தினான்

மான்சிக்கு மாதங்கள் கடந்து பிரசவநாள் நெருங்க நெருங்க அவளை கண்போல் பாதுகாத்த ரஞ்சனா அவனுக்கு தன் தாய் வசந்தியாகவே தோன்றினாள், இளம் வயதில் இந்த தாயின் அன்பை இழந்து தனியாக வாழ்ந்துவிட்டோமே என்று முதன்முறையாக ஏங்கினான் சத்யன்

மான்சிக்கு வலி வந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டபோது, கண்ணீரும் பிரார்த்தனையுமாக நின்ற ரஞ்சனாவை பார்த்து சத்யனின் உள்ளம் கறைந்து போனது, மான்சியின் அலறல் உள்ளே கேட்டபோது, சத்யன் கலக்கத்துடன் கிருபாவை பார்க்க கிருபா வேகமாக வந்து சத்யனின் தோளில் ஆறுதலாக தட்டி, “ என் வசந்தி மறுபடியும் வரப்போறா சத்யா எனக்கு பேரக்குழந்தையா” என்று கூறிவிட்டு அவரும் கண்கலங்கினார்

இவர்கள் இருவரிடமும் நெருங்க முடியாமல் ரஞ்சனா ஒதுங்கியிருந்து கண்ணீர் விட்டாள், அப்போது மான்சியின் அலறலை தொடர்ந்து குழந்தையின் அழுகுரல் கேட்க, ரஞ்சனாவிடம் எப்படித்தான் அவ்வளவு உற்சாகம் வந்ததோ தெரியவில்லை வேகமாக ஓடிவந்து அறையின் கதவை நெருங்கினாள், பிறகு எதையோ நினைத்துக்கொண்டு அங்கிருந்த பெஞ்சில் போய் அமர்ந்துகொண்டாள்



சற்று நேரத்தில் ஒரு நர்ஸ் டவலால் சுற்றப்பட்ட குழந்தையுடன் வெளியே வந்து சத்யனிடம் குழந்தையை கொடுத்து “ உங்க மனைவிக்கு பெண் குழந்தை பிறந்திருக்க சார்” என்றாள்

சத்யன் புன்னகையுடன் குழந்தையை வாங்கினான், குனிந்து அந்த பூக்குவியலுக்கு முத்தமிட்டவன் திரும்பி ரஞ்சனாவை பார்த்தான், குழந்தையை பார்க்கவேண்டும் என்ற தவிப்பு அவள் கண்களில் கண்ணீரை வெளிவந்தது

சத்யன் குழந்தையுடன் அவளை நெருங்கி சில வினாடிகள் அவள் முகத்தை உற்று பார்த்தான் பிறகு “ அம்மா இந்தாங்க உங்க பேத்தி” என்று அவளிடம் குழந்தையை நீட்டினான்.

ரஞ்சனாவுக்கு என்ன சொல்வது என்றே புரியவில்லை, கண்கள் விரிய மகனை பார்த்தாள், “ என்னம்மா பார்க்கிறீங்க, பிடிங்க உங்க பேத்தியை, எனக்கு சின்ன வயசுல கிடைக்காத உங்களோட அன்பு என் மகளுக்காவது கிடைக்கட்டும், இனிமேல் அவளை நீங்கதான் பார்த்துக்கனும், அப்பத்தான் அடுத்து உடனே ஒரு பேரனுக்கு எங்களால ஏற்பாடு பண்ணமுடியும்” என்று சிரிப்பும் குறும்புமாக சத்யன் கூற ..

அதற்க்கு மேல் ரஞ்சனாவால் தாங்க முடியவில்லை, “ சத்யா என் மகனே” என்று சிறு கதறலுடன் சத்யனை அணைத்துக்கொண்டாள்,



சத்யன் தன் மகளை ஒரு கையாலும் தன் தாயை மறுகையாலும் அணைத்துக்கொண்டான், அவனுக்கும் தாங்கவில்லை கரகரவென கண்ணீர் வழிந்தது “ அம்மா என்னை மன்னிச்சிடுங்க அம்மா, இவ்வளவு நாளா உங்களை ரொம்ப நோகடிச்சிட்டேன், உங்களோட அன்புக்கு முன்னாடி என்னோட வரட்டு கவுரவம் தோத்துப் போச்சும்மா ” என்று தன் தாயிடம் மனதார மன்னிப்பு கேட்டான் சத்யன்

சுபம்

Leave a Comment

Ads Blocker Image Powered by Code Help Pro

Ads Blocker Detected!!!

We have detected that you are using extensions to block ads. Please support us by disabling these ads blocker.

Powered By
Best Wordpress Adblock Detecting Plugin | CHP Adblock
error: read more !!