மான்சிக்காக – பாகம் 15 – மான்சி கதைகள்

rbgஇறுதியாக மாமனின் வாரிசு தன் வயிற்றில் என்றதும், என்றதும் மகிழ்ந்து போனவளை அண்ணன் வீரேனின் வார்த்தைகள் தான் கலைத்தது.. ‘ அவன் இவ்வளவு கர்வமா எல்லாத்துக்கும் தயாரா இருக்குறப்ப.

நீ அவன் புள்ளைய சுமந்தா எவ்வளவு கேவலம்னு யோசிச்சுப் பாரு மான்சி,, இப்படியொரு கேவலத்துக்குப் பிறகு நாங்கல்லாம் உயிரோட இருக்கனுமா? இந்த குழந்தை வேனாம் கலைச்சிடு மான்சி” என்று கொஞ்சம் கொஞ்சமாக பேசி சம்மதிக்க வைத்தான்…



சத்யன் மீது இருந்த ஆத்திரமும்,, தன் அழகு வெறும் படுக்கைக்கு மட்டும் பயன்பட்டதும் அவளை அரை மனதோடு சம்மதிக்க வைத்தது.. ஆனால் எதற்கும் கலங்காத தன் பாட்டி வந்து ஊரார் முன்னிலையில் காலில் விழுந்ததும் மான்சியின் மனம் உடனே மாறிவிட்டது…

என்னோடு கல்யாணம் வேண்டாம் ஜெயிலே மேல் என்று இருக்கும் சத்யனை கல்யாணம் செய்துகொண்டு பழிவாங்க இது ஒரு சந்தர்ப்பமாக எண்ணித்தான் துணிந்து மாமன் வீட்டுக்கு வந்துவிட்டாள்…

உன் அழகு முன்னாடி தோத்துட்டேன் மான்சி என்று சொன்னவனை கல்யாணம் செய்துகொண்டால் அதே அழகை அருகில் வைத்துக்கொண்டு என்ன பண்ணுறான்னு பார்க்கலாம்… என்ற சவால் மான்சியின் மனதில் எழுந்தது…

இவள் இங்கே இப்படி திட்டம் தீட்டி செயல்பட… அங்கே ஜெயிலில் சத்யனைப் பார்க்கப் போன ராமைய்யாவின் மூலமாக விஷயத்தை கேள்விப்பட்டவன் மனதில் இடியாய் இறங்கியது.. தன் குழந்தையை கலைப்பதற்காக மான்சி மருத்துவமணைக்கு கிளம்பிய செய்தி…

நான் ஜெயிலுக்குப் போகனும்னு விரும்பினவ. இப்போ என் குழந்தையை சுமப்பதைக் கூட கேவலமா நெனைக்கிறாளா? அப்போ மாமா மாமான்னு என்னையே சுத்தி வந்தது.. … அன்னைக்கு முழுமூச்சா போராடியவள் எனக்கு அவள் வேண்டும்னு சொன்னப் பிறகு இறுதியில் என்னை அனுமதித்து விட்டு அமைதியாக கண்மூடியது எல்லாம் பொய்யா? நடிப்பா? அல்லது என்னை வயசானவன்னு ஒதுக்கிட்டாளா? என்று பல கேள்விகள் அவன் மனதை குடைந்தது..



ஆனாலும் அவன் மனசுக்கு ஒரே ஒரு ஆறுதல்.. மான்சி குழந்தையை கலைக்காமல் தன் வீட்டுக்கு வந்துவிட்டாள் என்பதுதான்.. தன் அக்காவின் கணவனும் முழு மனதுடன் மகளை அனுப்பினார் என்ற கூடுதல் செய்தி அவனை கொஞ்சம் அதிகப்படியாக சந்தோஷப்படுத்தியது..

ராமைய்யா சொன்ன … மான்சிக்கும் தனக்கும் கல்யாணம் என்ற செய்தி மனதுக்கு இனிப்பாக இருந்தாலும்,, தன்னைப் பிடிக்காதவளுடன் நடக்கப்போகும் திருமணம் மனதுக்கு கசப்பாகவும் இருந்தது..

கல்யாணம் நடந்தாலும் .. என் குழந்தையைக் கூட வேண்டாம் என்று நினைத்தவளை எந்த சூழ்நிலையிலும் தொடமாட்டேன் என்ற வைராக்கியம் சத்யன் நெஞ்சில் உரமேறியது..

தன்னைப் பிடிக்காதவளுடன் திருமணம் வேண்டாம் என்று மனம் முரண்டினாலும்… அவள் வயிற்றில் இருக்கும் தன் வாரிசை அவள் எதுவும் செய்துவிடாமல் இருக்கவேணும் இந்த திருமணம் அவசியம் என்று நினைத்து அமைதியானான் சத்யன்

அதை ஊர்ஜிதம் செய்வதுபோல் மறுநாள் தர்மன் வக்கீலுடன் வந்த போது, அவர் முகத்தை ஏறெடுத்துப் பார்க்க தைரியம் இல்லாவிட்டாலும்.. மறுத்து எதுவும் சொல்லாமல் மவுனமாக ஜாமீனில் வெளியே வந்தான்…

“இனி வரும் காலங்களில்..

” காதல் என்றால்…

” இப்படித்தான் இருந்திருக்கும் என்றும்…

” காதலர்கள் என்றால்….

” இப்படித்தான் இருக்கவேண்டும் என்பதையும்…

” நம்மைப்பார்த்து கற்றுக்கொள்ளட்டும் உலகம்
.
” அதனால்தான் அழைக்கிறேன்…

” கொஞ்சம் காதலிக்கலாம் வா! “

கோர்ட்டில் அனுமதி வாங்கி ஜெயில் சம்பிரதாயங்கள் அனைத்தும் முடிந்து தேனியில் இருந்து சத்யன் வீட்டுக்கு வரும்போது இரவு மணி பத்தாகியிருந்தது…

தனது காரில் சத்யனை அழைத்துவந்து இறக்கிவிட்டு விட்டு.. டிரைவர் சீட்டில் அமர்ந்து சத்யனைப் பார்க்காமல் கார் ஸ்டேரிங்கை பார்த்தபடி “ வீட்டுக்குள்ள போய் யார்கிட்டயும் எதுவும் சொல்லவேண்டாம்,, எதையும் நெனைச்சு மனசை குழப்பிக்காம அமைதியா படுத்து தூங்கு, நானும் உங்கக்காளும் காலையில வர்றோம்” என்று தர்மன் கூறியதும்…



சத்யனும் அவர் முகத்தைப் பார்க்காமல் வேறெங்கோ பார்த்தபடி சரியென்று தலையசைத்தான்…

கார் கிளம்பியதும் சத்யன் வீட்டுக்குள் நுழைய.. அவனுக்காக வாசலிலேயே காத்திருந்தனர் சில ஊர் பெரியவர்களும், பஞ்சவர்ணமும்… ராமைய்யா தேங்காயில் கற்பூரம் வைத்து ஏற்றி சத்யனை மூன்று முறை சுற்றி அதை வீட்டு வாசலில் சிதறுகாய் உடைக்க.. சத்யன் மவுனமாக வீட்டுக்குள் நுழைந்தான்

கிட்டத்தட்ட ஐம்பதுநாள் தாடியும்.. வெட்டப்படாத தலைமுடியும்.. குழிவிழுந்த கண்களும்.. எலும்புகள் துருத்திய தாடையும்.. உடல் மெலிவால் லூசான உடைகளும்.. யாரையும் பார்க்க திறனற்று கவிந்த தலையுமாக தன் மகனின் தோற்றத்தைப் பார்த்து பெற்ற வயிறு கலங்கினாலும்.. “ சின்னய்யா வந்ததும் யாரும் எதுவும் கேட்டு அவரை சங்கடப்படுத்திடாதீங்க” என்று ராமைய்யா ஏற்கனவே எச்சரிக்கை செய்திருந்ததால் குமுறிய மனதை அடக்கிக்கொண்டு “ வா ராசு” என்று பாசத்தோடு அழைத்தார் பஞ்சவர்ணம்..



கூடத்தில் கால் வைத்த சத்யனின் பார்வை அவனையும் அறியாமல் மான்சியை தேடியது. மகன் மனதை புரிந்த பஞ்சவர்ணம் “ காலையிலருந்து ஒரே வாந்தியா எடுத்துகிட்டு இருந்தா .. அதனால கொஞ்சம் மயக்கமா இருக்குன்னு வேளையாவே போய் படுத்துட்டா ராசு” என்று மகனுக்கு விளக்கம் கொடுத்தார்..

சத்யன் எதுவும் பேசவில்லை.. ‘என் முகத்தைப் பார்க்கப்பிடிக்காம வரமாட்டா’ என்று மனதுக்குள் எண்ணியபடி மவுனமாக முற்றத்தில் இருந்த தண்ணீரில் கைகால் கழுவிவிட்டு உடைமாற்ற தனது அறைக்குள் நுழைந்தான்…

மான்சி தனது அறையில் தங்கியிருப்பாள் என்று அவன் நினைத்துக்கூட பார்க்கவில்லை. தனது கைலியை எடுக்க இயல்பாக நுழைந்தவன் கட்டிலில் படுத்திருந்த மான்சியைப் பார்த்து திகைப்புடன் அப்படியே நின்றான்
நீலநிறத்தில் வெள்ளை கோடுகள் போட்ட லூசான காட்டன் பேன்ட் சட்டையணிந்து, கூந்தலை விரித்துப் போட்டு.. தலைக்கொரு தலையணை, நீட்டியிருந்த வலது காலுக்கு ஒரு தலையணை, மடக்கியிருந்த இடதுகாலுக்கு ஒரு தலையணை வைத்து, அந்த தலையணையை கட்டிக்கொண்டு குழந்தைபோல் உறங்கிய மான்சியைப் பார்த்தது சத்யனுக்கு இத்தனை நாள் பட்ட துன்பமெல்லாம் பறந்து போனது



மான்சி அவனைப் பார்க்க பிடிக்காமல் வராமல் இருக்கவில்லை… உண்மையாகவே உறங்குகிறாள் என்றதும் சத்யன் மனசுக்குள் சிறு நிம்மதி…
வெகுநேரம் அவளையே பார்த்துக்கொண்டு இருந்தவன்…. மெதுவாக கட்டிலின் கால் பகுதியை அடைந்து குனிந்து நீட்டியிருந்த அவளின் வலது காலை மென்மையாக பற்றி அதில் தனது நெற்றியை வைத்தான்,

பிறகு மண்டியிட்டு அமர்ந்து அவள் பாதத்தை தன் முகத்தில் அழுத்திக்கொண்டு தன் கண்ணீரால் அவள் காலை கழுவினான், அவன் மனக் கொதிப்பெல்லாம் கொஞ்சம் அடங்கியது.. அவள் காலில் அசைவு தெரிய ..அவசரமாக உதட்டை அழுத்தி உள்ளங்காலில் முத்தமிட்டு விட்டு நிமிர்ந்தான்

அவளைப் பார்த்தபடியே அலமாறியைத் திறந்து கைலியை எடுத்து பாத்ரூமுக்குப் போய் மாற்றிக்கொண்டு வந்தான், மான்சி அதே நிலையில் உறங்கிக்கொண்டிருந்தாள்



மறுபடியும் கட்டிலருகே வந்து அவளின் வென்பாதத்தை வருடிவிட்டு அறையிலிருந்து வெளியே வந்தான்.. ஊர் பெரியவர்கள் காலையில் வருவதாக சொல்லி விடைபெற்றார்கள்.. சத்யன் தேனியிலேயே சாப்பிட்டுவிட்டு வந்துவிட்டதால் படுப்பதற்காக வெளியே வந்தான் அவனுடைய கயிற்று கட்டில் தயாராக வாசலில் போடப்பட்டிருந்தது அதில் பெட்சீட்டை விரித்துக்கொண்டிருந்தார் ராமைய்யா..

சத்யன் கட்டிலில் அமர்ந்ததும் “ தம்பி படுத்து தூங்குங்க.. நான் இங்கிட்டு கீழ படுத்துக்கிறேன்” என்றவர் சத்யன் கட்டிலுக்குப் பக்கத்தில் தரையில் ஒரு பாயை விரித்து படுத்துக்கொண்டார்…

நன்றி:- சத்யன் (எ) வினோ

Leave a Comment

Ads Blocker Image Powered by Code Help Pro

Ads Blocker Detected!!!

We have detected that you are using extensions to block ads. Please support us by disabling these ads blocker.

Powered By
Best Wordpress Adblock Detecting Plugin | CHP Adblock
error: read more !!