மான்சிக்காக – பாகம் 17 – மான்சி கதைகள்

puka“ மாமா இப்போ ஏன் வெளியப் போற?” என்ற மான்சியின் குரலில் மீண்டும் திரும்பினான்…. “ நீ போய்ட்டா இந்த துணியெல்லாம் யாரு அடுக்குவாங்க.. இதோபாரு மாமா… எனக்கு மயக்க மயக்கமா வருது… கொஞ்சநேரம் நிக்கக்கூட முடியலை, அப்புறம் நான் எப்புடி அடுக்குவேன் ” என்று உடலை நெளித்து வளைத்து ஒயிலாக நின்றவளைப் பார்த்து .

அப்படியே நின்றவன்… “ சரி நீ போய் குளிச்சிட்டு வா உன் டிரஸை எல்லாம் நான் அடுக்கி வைக்கிறேன்” என்றுவிட்டு அலமாரியின் அருகே போனான் சத்யன் ‘ அப்புடி வா வழிக்கு” என்றபடி வெறும் டவலுடன் பாத்ரூமுக்குள் நுழைந்தாள் மான்சி சத்யன் அலமாரியைத் திறந்து மான்சியின் உடைகளை நேர்த்தியாக அடுக்கியவனின் மனதில் புதுவிதமான உணர்வு… இதுவரை இவன் வாழ்க்கையில் இவன்தான் மற்றவர்களுக்கு வேலை சொல்வான்…



இதுபோன்ற வேலைகள் சத்யனுக்கு புதிது.. மனசுக்குள் ஏதோவொன்று குறுகுறுக்க.. மான்சியின் உடைகளை அடுக்கினான்.. சற்றுமுன் வந்த தர்மனும் மீனாவும் மான்சியின் மற்ற உடைமைகளை காரில் எடுத்து வந்திருக்க, அந்த பைகளையும் எடுத்து அடுக்கினான் .. ஒரு பையில் மான்சியின் போட்டோ ஆல்பங்கள் இருந்தது.. அத்தனையிலும் அழகாக இருந்தாள்.. ஒரு படத்தில் பிறந்து சில நாட்களே ஆன சிறிய ஆட்டுக்குட்டியை தூக்கி முத்தமிட்டபடி இருந்தாள் மான்சி…

ஆட்டுக்குட்டியை முத்தமிட்ட மான்சிக்கு இவன் முத்தம் கொடுத்தான் அந்த படத்தை மட்டும் உருவி எடுத்து தன் சட்டைக்குள் மறைத்துவிட்டு மற்றவைகளை அடுக்கி முடிக்கவும் மான்சி குளித்துவிட்டு வெளியே வரவும் சரியாக இருந்தது… திரும்பிய சத்யன் அதிர்ச்சியுடன் நின்றான்…. மான்சியின் உடலில் வெறும் டவல் மட்டுமே இருந்தது, டவல் சற்று அகலமாக இருந்தாலும் கழுத்துக்கு அரையடிக்கு கீழே ஆபத்தான நிலையில் தொற்றிக்கொண்டிருக்க..



சத்யனை முதன்முதலில் மயக்கிய வழவழவென்ற மான்சியின் தொடைகள் வரை ஏறி ஆபத்தை அறிவுருத்திக் கொண்டு இருந்தது அந்த டர்க்கி டவல்… மான்சியின் மனம் எக்காரணம் அடிக்க… தயக்கமின்றி சத்யன் நின்றிருந்த அலமாரியை நெருங்கி கதவைத் திறந்தபடி … “ மாமா என்னோட இன்னர்வேர் எல்லாம் எங்க வச்ச” என்று கேஷுவலாக கேட்க…

சத்யன் அவளையேப் பார்த்தபடி விரல் நீட்டி அலமாரியின் நடுத்தட்டை காட்டினான்,, அதிலிருந்து தனது உள்ளாடைகளை எடுத்துக்கொண்டு திரும்பியவள் அதை உதறிவிட்டு போட்டு கொள்வதற்காக அப்படியே குனிய… சத்யனின் ரத்த ஓட்டம் சூடாகி கொதித்தது.. அவளை பார்க்காமல் அங்கிருந்து அவசரமாக வெளியேறினான்

“ ஓ… ஓடுறியா… ஓடு மாமா ஓடு” எனறு எண்ணி சிரித்தபடி பாத்ரூமுக்குள் நுழைந்தாள் மான்சி சத்யனுக்கு அவள் மனம் தெளிவாக புரிந்தது… அதாவது இந்த மாதிரியெல்லாம் பண்ணிட்டு நான் சபலப்பட்டு தொட்டா அதை வச்சு என்னை இன்னும் கேவலமா பேச ப்ளான் பண்ணிருக்கா.. என்று தெளிவாக தப்புக்கணக்கு போட்டான் சத்யன்..

“ என் மனசு சரியில்லாத போது…

“ உன் முகத்தைப் பார்த்தால்…

“ மனசு உடனே சரியாகிவிடுகிறது…

“ ஆனால் அதுவரை சரியாக இருந்த நான்…

“ சரியில்லாமல் போய்விடுறேன்! 

சமையலறையில் மீனாவின் குரல் கேட்க…. தர்மன் செவலையனிடம் விவசாயத்தைப் பற்றி ஏதோ பேசிக்கொண்டிருந்தார்… செல்வி பரபரப்பாக இங்குமங்கம் ஓடிக்கொண்டிருந்தாள்.. முந்தானையில் கையைத் துடைத்துக்கொண்டு வெளியே வந்த மீனா “ சாப்பாடு ரெடியாயிருச்சு வாங்க சாப்பிடலாம்” என்று பொதுவாக அழைத்துவிட்டு மீண்டும் சமையலறைக்குள் நுழைந்தாள்…

அவளால் தம்பியிடம் இன்னும் சகஜமாக பேச முடியவில்லை.. “ வா சத்யா சாப்பிடலாம்” என்று சத்யனை அழைத்துக்கொண்டு சாப்பாட்டு அறைக்கு போனார் தர்மன்.. மட்டன் குருமா.. விராலமீன் குழம்பு.. மீன் வருவல்.. என்று ஏகப்பட்ட ஐட்டம் செய்திருந்தனர் ஒரு எவர்சில்வர் கேரியரில் சாப்பாடு போட்டு ஒரு கூடையில் வைத்து ஒரு வாழைஇலையும் வைத்து செல்வியிடம் கொடுத்த பஞ்சவர்ணம் “ எலா செல்வி இத எடுத்துட்டுப் போய் வயக்காட்டுல இருக்குற உங்கப்பனுக்கு குடு” என்று கொடுத்தனுப்ப,,



“ சரி ஆத்தா” என்று கேரியரை வாங்கிக்கொண்டு வயக்காட்டுக்கு கிளம்பினாள் … தாவணியில் முடிந்திருந்த பொரியரிசியை அள்ளி வாயில் கொட்டியபடி ஊரைவிட்டு தள்ளி வயக்காட்டுக்கு செல்லும் ஒற்றையடிப்பாதையில் போனவள்.. சத்யனின் சவுக்குத்தோப்பை பாதி தாண்டியபோது “ ஏய் நில்லு ” என்ற ஆண்குரல் கேட்டு அப்படியே நின்றாள்..

‘ அய்யய்யோ யாருமே இல்லாத சவுக்குத் தோப்புக்குள்ள இந்நேரத்துல யாரு? ஒருவேளை கவுச்சி சாப்பாட்டுக்கு ஆசைப்பட்டு பேய் ஏதாவது பின்னாடியே வந்துடுச்சோ’ என்று பயந்தபடி திரும்பியவள் .. அங்கே நின்றிருந்தவனைப் பார்த்ததும் ‘ அடச்சே இவன் தானா?’ என்று மறுபடியும் திரும்பி நடக்க ஆரம்பித்தாள் இரண்டே எட்டில் அவளை அடைந்த தேவன் “ ஏய் கூப்பிக் கூப்பிட வேகமா போற என்னடி திமிரா?” என்று கேட்க..

நின்று அவனைப்பார்த்து முறைத்த செல்வி “ இந்த டீ போட்டு கூப்பிடுற வேலையெல்லாம் என்கிட்ட வேனாம்…. ஆமா சொல்லிப்புட்டேன்” என்று விரல் நீட்டி எச்சரித்தாள் “ ஓ மேடத்தை மேடம்னு கூப்பிடனுமோ? சரி கூப்பிட்டாப் போச்சு” என்று பதிலுக்கு கேலி செய்தவன்…



“ மேடம் இந்த நேரத்துல இந்தப்பக்கமா எங்கப் போறீங்க?” என்று கேட்டான்.. “ நான் எங்கப்போனா ஒனக்கு என்னவாம்? உன் வேலையைப் பார்த்துக்கிட்டு போய்ச்சேரு” என்று ஏளனமாக பேசிவிட்டு அங்கிருந்து நகர்ந்தவளை தேவன் கையைப்பிடித்து சுண்டி இழுக்க தடுமாறிய செல்வி அவன் நெஞ்சிலேயே விழுந்தாள் .

அவள் மேலும் சரியாமல் தேவன் அவள் இடுப்பில் கைவைத்து தாங்கிப்பிடித்து தூக்கி நிறுத்த.. அவன் கையை உதறி விலகிய செல்வி அவனைப் பார்த்து நெருப்பாய் தகித்தப்படி “ யார் மேல கை வைக்கிற?,, இன்னோரு வாட்டி என்மேல கை வச்ச ஒரே சீவா சீவிடுவேன்” என்று சாப்பாட்டுக் கூடையில் இருந்த அருவாளை எடுத்துக் காட்டினாள்..

ச்சே இப்படி பிடிச்சு இழுத்துட்டமே என்று மனதுக்குள் சங்கடப்பட்டு நின்ற தேவன் அவள் அருவாளை எடுத்து காட்டியதும் வீம்பு தலைதூக்க “ ஓஓஓ…. மேடம் அருவாள் எல்லாம் பாதுகாப்புக்கு எடுத்து வந்துருக்கீங்களா?” என்றவன் அருவாள் வைத்திருந்த கையை பிடித்து முறுக்கி அவள் முதுகுப்பக்கமாக வளைத்து அவளையும் திருப்பி தன் நெஞ்சில் சாய்த்து



“ இப்ப என்னடி பண்ணுவ? எங்க என்னை சீவு பாக்கலாம்?” என்று அவளிடம் சவால் விட்டவன்.. அவள் கூந்தலில் இருந்து வந்த ஒருவிதமான மணத்தில் லேசாக சொக்கிப்போ

Leave a Comment

Ads Blocker Image Powered by Code Help Pro

Ads Blocker Detected!!!

We have detected that you are using extensions to block ads. Please support us by disabling these ads blocker.

Powered By
Best Wordpress Adblock Detecting Plugin | CHP Adblock
error: read more !!