மான்சிக்காக – பாகம் 24 – மான்சி கதைகள்

FB_IMG_1466872651080சத்யனுக்கு என்ன சொல்வது என்றே புரியவில்லை,, இப்படி மாற்றி மாற்றி குற்றம் கண்டுபிடிக்குறவ கிட்ட எதை பேசமுடியும்…. மவுனமாக எழுந்து பாலை மேசையில் வைத்துவிட்டு அலமாரியில் இருந்து தனது கைலியை எடுத்து மாற்றிக்கொண்டு வெளியே போக கதவை நெருங்கினான்…

“ பார்த்தியா நான் சொன்னது சரியாபோச்சு,, நீ வெளிய போய் கட்டில்ல படுத்துக்க.. அப்புறமா எல்லாரும் தூங்கினதும் நைசா எந்திருச்சு எவ வீட்டுக்காவது போய் படுத்துக்க” எதை பேசுகிறோம் என்று புரியாமல் கொதிப்புடன் பேசினாள்

சத்யனுக்கு ஆத்திரம் தாங்கவில்லை.. வேகமாக கட்டிலை நெருங்கி அவள் தோள்களைப் பற்றி உலுக்கி “ ஏன்டி இவ்வளவு கேவலமா பேசுற… நான் தப்பு பண்ணேன் தான்.. அதுக்கு நீ குடுத்த தண்டனையெல்லாம் போதாதா? இன்னும் என்னை என்னதான்டி செய்யச்சொல்ற?” என்று ஆத்திரமாய் கேட்க..



தனது அன்பான மாமனின் கோபம் மான்சியை மிரள வைத்தது… மிரட்சியுடன் விழித்தவளைப் பார்த்ததும் தான் சத்யன் கோபப்பட்டு விட்டோம் என்பதே புரிந்தது.. தன்னைப் பார்த்து மிரண்டவளை நெஞ்சோடு அணைத்து “ உனக்கு என்னதான் வேனும்மா?” என்றான் கனிவுடன்…

அவன் நெஞ்சில் சுகமாக சாய்ந்தவள் “ மாமா எனக்கு ஒன்னுமே முடியலையே… தலையெல்லாம் சுத்துது… வயிறு பசிக்குது.. வாந்தியா வருது… நெஞ்சுக்குள்ள எரியுது மாமா” என்று சோர்வுடன் சொன்னவளை விலக்கி விட்டு….

மறுபடியும் பால் டம்ளரை எடுத்து வந்து “ கொஞ்சம் இந்த பாலை குடி மான்சி நெஞ்சுக்குள்ள எரியுறது சரியாயிரும்” என்று அன்புடன் சொன்னதும்…

“ அய்யோ வாந்தி வருமே?” என்று பயந்தாள்..

“ பரவாயில்லை குடி வாந்தி வந்தா நான் க்ளீன் பண்றேன்”

கண்களை விரித்து அவனைப் பார்த்து “ நீயா க்ளீன் பண்ணுவ ” என்றவள் வாயில் பால் டம்ளரை வைத்து “ ம் நான்தான் பண்ணுறேன்.. இப்ப இதை குடி” என்று கொஞ்சம் கொஞ்சமாக குடிக்க வைத்தான்…

பால் டம்ளரை வைத்துவிட்டு மீண்டும் கதவை நெருங்கியவனை மான்சியின் குரல் தடுத்தது “ இப்பதான் நான் பார்த்துக்கிறேன் சொன்ன இப்ப வெளியப் போற பார்த்தியா?” என்றாள் மான்சி..



அவளைத் திரும்பி பார்த்து ” கதவை தாழ் போடத்தான் போனேன்” என்று கூறிவிட்டு கதவை லாக் செய்துவிட்டு வந்தான் சத்யன்…

இப்போது அவனுக்கு புது குழப்பம்… கட்டிலில் படுப்பதா? அல்லது கீழே படுத்துக்கொள்வதா? எதை செய்தாள் அவளுக்குப் பிடிக்கும் என்று அவன் யோசிக்கும் போதே… ” நீ என்கூட படுத்தாத்தான எனக்கு எப்ப வாந்தி வரும்னு உனக்கு தெரியும்” என்று மான்சி தன் புருவத்தை உயர்த்தவும், மறுப்பேச்சின்றி சரியென்று தலையசைத்து கட்டிலில் படுத்துக்கொண்டான்…

அவனை நெருங்கி “இப்போ நீ என்னை எதாச்சும் பண்ணுவியா?” என்றவளைப் பார்த்து சத்யனின் நெஞ்சே வெடிக்கும் போல இருந்தது..

” இல்லம்மா நல்லா தூங்குடா?” என்றவன் அவளை இழுத்து தன் நெஞ்சோடு அணைத்து கூந்தலை ஒரு கையாலும்,,, முதுகை மறுகையாலும் மென்மையாக வருடி தூங்க வைத்தான்…

கனாக்காணும் கண்கள் மெல்ல
உறங்காதோ பாடல் சொல்ல
நிலாக்கால மேகம் எல்லாம்
உலாப் போகும் நேரம் கண்ணே
உலாப்போகும் நேரம் கண்ணே

குமரி உருவம் குழந்தை உள்ளம்
ரெண்டும் ஒன்றான மாயம் நீயோ
தலைவன் மடியில் மகளின் வடிவில்
தூங்கும் சேயோ

நொடியில் நாள்தோறும் நிறம் மாறும் தேவி
விடைதான் கிடைக்காமல் தடுமாறும் கேள்வி
விளக்கு ஏற்றி வைத்தால் கூட
நிழல் போல தோன்றும் நிஜமே
நிழல் போல தோன்றும் நிஜமே




{ நான் உன் நிஜத்தை நேசிக்கிறேன்
உன் நிழலையோ பூஜிக்கிறேன்
அதனால்தான் உன் நிழல் விழுந்த நிலத்தின்
மண்ணை கூட என் நெற்றியில்
நீறு போல், திரு நீறு போல் இட்டுக் கொள்கிறேன்}

கனாக்காணும் கண்கள் மெல்ல
உறங்காதோ பாடல் சொல்ல
நிலாக்கால மேகம் எல்லாம்
உலாப் போகும் நேரம் கண்ணே
உலாப்போகும் நேரம் கண்ணே

புதிய கவிதை புனையும் குயிலே
நெஞ்சில் உண்டான காயம் என்ன?
நினைவு அலைகள் நெருப்பில் குளிக்கும்
பாவம் என்ன?

கிழக்கு வெளுக்காமல் இருக்காது வானம்
விடியும் நாள் பார்த்து இருப்பேனே நானும்
வருங்காலம் இன்பம் என்று
நிகழ் காலம் கூறும் கண்ணே!
நிகழ் காலம் கூறும் கண்ணே!

கனாக்காணும் கண்கள் மெல்ல



உறங்காதோ பாடல் சொல்ல
நிலாக்கால மேகம் எல்லாம்
உலாப் போகும் நேரம் கண்ணே
உலாப்போகும் நேரம் கண்ணே

நன்றி:- சத்யன்

Leave a Comment

Ads Blocker Image Powered by Code Help Pro

Ads Blocker Detected!!!

We have detected that you are using extensions to block ads. Please support us by disabling these ads blocker.

Powered By
Best Wordpress Adblock Detecting Plugin | CHP Adblock
error: read more !!