மான்சிக்காக – பாகம் 36 – மான்சி கதைகள்

IMG-20160624-WA0034-1மனைவியின் முத்தத்தை ரசித்தாலும் “ ஏய் போன்ல உன் அப்பா.. சும்மாயிருக்க மாட்டியாடி ” என்ற சத்யனின் ரகசியமான காதல் அதட்டல் எதிர்முனையில் இருந்த தர்மனுக்கும் கேட்டுவிட்டது போல…

“ மாப்ள நான் பொறவு போன் பண்றேன் ” என்று சங்கடமாக சொல்லிவிட்டு வைத்துவிட்டார் “ என்ன சொல்ல போன் பண்ணாருன்னு தெரியலையே?,, இப்ப எதுவுமே சொல்லாம போனை வச்சிட்டார்… எல்லாம் உன்னால தான்டி? உன்னை……” என்ற சத்யன் மொபைலை வைத்துவிட்டு முத்தமிட்ட அவள் உதடுகளை விரலால் பிதுக்கி குவிந்த கீழுதட்டை கவ்வி சப்பினான்….



சப்பிய உதடுகளை மனமேயில்லாமல் விட்டுவிட்டு எழுந்த சத்யன் “ ஓய் எந்திருச்சு குளிடி… அடக்கம் ஒடுக்கம் இல்லாம ஏழரை மணிவரைக்கும் எப்படி படுத்துருக்காப் பாரு” என்று கேலி செய்ய… போர்வையை எடுத்து தன் உடலை மூடியபடி “ அய்யோ ஐயா மட்டும் என்னமோ முழுசா உடுத்திக்கிட்டு இருக்குற மாதிரி பேச்சைப் பாரு” என்றாள் மான்சி பதிலுக்கு..

மறுபடியும் அவளை நெருங்கத் தூண்டிய ஆண்மையை கையால் வருடியபடி “ ஏய் சீக்கிரமா குளிச்சிட்டு ரெடியாகு கோயிலுக்குப் போகலாம்” என்று சொல்லிவிட்டு பாத்ரூமுக்குள் நுழைந்தான்.. அதன்பின் இருவரும் குளித்துவிட்டு டிபன் சாப்பிட்டு கோயிலுக்கு ரெடியான போது.. மான்சி மறுபடியும் பாவாடை ரவிக்கையோடு நின்றாள்…

சத்யன் சிரித்தபடி அவள் கையிலிருந்த பச்சைநிறப் பட்டுப்புடவையை வாங்கி “ ம் வா கட்டி விடுறேன்” என்று புடவையை பிரித்தான்…முந்தானையை மார்பில் போட்டு… கொசுவத்தை தனக்கு தெரிந்தார்ப்போல் கொசுவி அவள் பாவாடைக்குள் சொருகியவனின் கை அங்கே எதையோ தேடி வருடி தாமதிக்க..



“ ஸ்ஸ்ஸ் கையை எடு மாமா…. கோயிலுக்கு போறோம் ஞாபகம் இருக்கா?” என்று மான்சி எச்சரிக்கை செய்ய… “ ம்ம்” என்றபடி மெதுவாக கையை உருவியெடுத்து விரலின் நுனியை மூக்கின் அருகே கொண்டு சென்று “ ம்ஹா” என்று ஆழமாய் மூச்சை இழுத்தான் சத்யன் .. அவன் தலையில் நறுக்கென்று குட்டிய மான்சி “ அடச்சீ கருமம்,, மொதல்ல போய் கையை கழுவிட்டு வா?” என்றாள்…

தனது புத்தம்புதிய மனைவியின் வெட்கத்தை ரசித்து “ ஓய் என்னாடி அடிக்கிற? நைட்டு நீ என்னா என்னா ஆட்டம் போட்ட?.. இப்ப என்னமோ நல்ல பொண்ணு மாதிரி நடிக்கிற எல்லாத்தையும் எடுத்து சொல்லவா? ” என்று சத்யன் போலியாக அவளை மிரட்ட… “ அய்யோ வாயை மூடு மாமா?” என்று முகம் சிவக்க திரும்பிக்கொண்டாள்… சத்யனுக்கு மான்சியின் இந்த வெட்கம் புதுமை….



இத்தனை நாட்களாக இல்லாத வெட்கம் இப்போது வந்து அவர்களின் காதலை அதிகப்படுத்தியது… மனைவியின் அழகைப் பார்த்து ரசிக்கும் ஜோரில் தன் மாமனுக்கு போன் செய்யவேண்டும் என்பதை மறந்துபோனான் சத்யன்… அவர் என்ன சொல்ல வந்தார் என்பது சத்யனால் கேட்கப்படாமலேயே போனது வேலைக்கு வந்த செல்வியின் உதவியோடு புடவையை சரி செய்துகொண்டு சத்யனுடன் கோயிலுக்கு கிளம்பினாள் மான்சி…

சத்யன் தனது கார் சாவியை எடுக்க “ ம்ஹூம் பைக்ல போகலாம் மாமா” என்றாள் மான்சி.. அவள் எதற்காக சொல்கிறாள் என்று முகத்தில் கண்டுகொண்ட சத்யன் “ ம் சரி வா” என்று தனது பைக்கை எடுத்து ஸ்டார்ட் செய்ய.. மான்சி அவன் பின்னால் ஒரு பக்கமாக கால்போட்டு அமர்ந்து அவன் இடுப்பில் கைப்போட்டு வளைத்து கொண்டாள் மகன் பட்டுவேட்டி சட்டையில் கம்பீரமாக வண்டி ஓட்ட…



பேத்தி பச்சைப்பட்டில் தங்கத்தாரகையாக அவன் பின்னால் அமர்ந்து போவதை கண்களில் நீருடன் பார்த்து ரசித்த பஞ்சவர்ணம் பக்கத்தில் நின்ற செல்வியிடம் “ ஏ புள்ள செல்வி அவுக ரெண்டு பேரும் வந்ததும் சுத்திப் போட எல்லாம் தயாரா எடுத்து வை புள்ள” என்று உத்தரவிட… ஏற்கனவே அதே யோசனையில் இருந்த செல்வி “ நானும் அதைத்தான் நெனைச்சேன் அப்பத்தா.. இதோ எடுத்து வைக்கறேன்” என்று கூறிவிட்டு சிட்டாகப்பறந்தாள் ..

கோவிலுக்குப் போன சத்யன் மான்சி இருவரையும் ஏதோ திருவிழாவில் ஊர்வலம் வரும் தெய்வங்களைப் பார்ப்பது போல் பார்த்தார்கள் ஊர் மக்கள்… விழுந்து எழுந்து கன்னத்தில் போட்டுக்கொள்ளாதது ஒன்றுதான் பாக்கி…. அன்பு மேலிட்ட சிலர் பைக்கை நிறுத்தி இருவர் நெற்றியையும் கையால் வழித்து திருஷ்டி எடுத்துவிட்டு பிறகு அனுப்பினார்கள்…



கோயில் இருந்த கூட்டம் இவர்களுக்கு வழிவிட்டு நின்றது…. கர்ப்பகிரகத்தில் இருக்கும் அம்மனுக்குப் போட்டியாக வந்து நின்ற மான்சி கண்டு எல்லோரும் வாய்ப்பிளக்க .. சிறிதுநேரம் உள்ளிருந்த அம்மன் யாராலும் கவனிக்கப்படாமல் போனது… சத்யன் கர்வமாக மான்சியை நெருங்கி நின்றுகொண்டான் சாமி கும்பிட்டு முடித்து வெளியே வந்த இருவரும் குளக்கரையில் சிறிதுநேரம் அமர்ந்து எந்த வார்த்தையும் இன்றி ஒருவரையொருவர் காதலாய்ப் பார்த்துக் கொண்டிருந்துவிட்டு எழுந்து வீட்டுக்கு கிளம்பினார்கள்…

வரும் வழியில் ராமையாவின் வீட்டு வாசலில் திண்ணையில் அமர்ந்து தென்னமட்டையில் அருவாளால் விளக்குமாறு கிழித்துக்கொண்டிருந்த அவர் மனைவி இவர்களை ஆர்வமாகப் பார்க்க… பைக்கை நிறுத்தி பின்னால் திரும்பி மனைவியைப் பார்த்த சத்யன் “ மான்சி இது ராமைய்யா அண்ணன் வீடு… அவர் சம்சாரம் வெளிய நிக்கிறாங்க… வா அவங்க வீட்டுக்குப் போய்ட்டு வரலாம்” என்று அழைத்தான்.. ‘கோயிலுக்குப் போனா..



நேரா வீட்டுக்குதான் வரனும்’ என்று அம்மாச்சி சொல்லி அனுப்பியது ஞாபகம் வந்தாலும்.. சத்யனின் அழைப்பை மறுக்கமுடியாமல் “ ம் போலாம் வா” என்று பைக்கிலிருந்து இறங்கினாள்.. இருவரும் ஜோடியாக தன் வீட்டுக்குத்தான் வருகிறார்கள் என்றதும் பதட்டத்தில் தடுமாறி போட்டது போட்டபடி விட்டுவிட்டு “ சின்னய்யா சின்னம்மா வாங்க வாங்க” என்று உள்ளே அழைத்துப் போனாள் செல்வியின் அம்மா…

நன்றி :- சத்யன்

Leave a Comment

Ads Blocker Image Powered by Code Help Pro

Ads Blocker Detected!!!

We have detected that you are using extensions to block ads. Please support us by disabling these ads blocker.

Powered By
Best Wordpress Adblock Detecting Plugin | CHP Adblock
error: read more !!