பொம்மலாட்டம் – பாகம் 06 – மான்சி கதைகள்

img_75745530874572வாசுகியின் சொந்தங்கள் சிலர் ” என்ன வாசு … விதவைப் பொம்பளையா இருக்காங்க … அவங்களைப் போய் கூடவே உட்கார வச்சிருக்கயே ?” என்று பெரும் குறையாகக் கேட்க …

” அந்த விதவை வளர்த்த தேவதை தான் எங்க வீட்டுக்கு மருமகளா வரப்போறா …. அது எப்படி தோஷமில்லையோ அதேபோல இதுவும் தோஷமில்லை ” என வெடுக்கென்று கூறியவள் ” இன்னும் ஏன் இந்த மூடத்தனத்தை விடாம பிடிச்சுக்கிட்டு இருக்கீங்களோத் தெரியலை ” என்று சலிப்புடன் கூறினாள் ….



ஐயர் கூறியவற்றை செய்யும்படி அம்மா சொல்ல … அதை அப்படியேக் கேட்டுச் செய்தாள் மான்சி …. தாலி கட்டும் தருவாயில் திரும்பி சத்யனைப் பார்த்தாள் ….அவனும் பார்த்துச் சிரித்தான் …. பதிலுக்குச் சிரிக்கவில்லை மான்சி ….. நைட் சிரிச்சுக்கிட்டே இருந்தா ….. இப்போ பதிலுக்குக் கூட சிரிக்க மாட்டேங்குறாளே? என்று குழம்பியவனை ஆதியின் குரல் கலைத்தது ” மிஷினை யார் ஆப் பண்ணதுன்னு தெரியலையே ?” என்று ஆதி கூற … திரும்பிப் பார்த்த சத்யன் ” மிஷினா ? என்னதுடா ?” என்று கேட்டான் …

” ஒன்னுமில்லை … நீ அங்கப் பாரு… ஐயர் கூப்பிடுறார் …. ” என்று நண்பனை திருப்பி அமர வைத்தான் ஆதி …. மந்திரங்கள் முடிந்து மாங்கல்யம் ஆசிர்வாதம் பெற்று வந்தது … ஐயர் எடுத்துக் கொடுக்க திருமாங்கல்யத்தைக் கையில் வாங்கினான் சத்யன் … ” அப்பாவையும் அம்மாவையும் மனசுல நினைச்சுக்கோ அப்பு …. ” என்று அக்கா காதருகே கூறவும் நிமிர்ந்துப் பார்த்தவனின் கண்களில் நீர் ….



குனிந்த மதி தனது கைக்குட்டையால் சத்யனின் கண்களைத் துடைத்து ” உன் மனசுக்கு நல்லா இருப்படா மாப்ள ….” என்று கலங்கினான் …. இங்கே பவானியின் விழிகளிலும் நீர் …. மகளுக்கு கிடைத்த நல்வாழ்வு நிலைத்திருக்க வேண்டி மனதாரப் பிரார்த்தனை செய்தவள் ” ம் திரும்பி உட்கார்ந்து அவர் பக்கமா கழுத்தை நீட்டும்மா ” என்று மகளின் காதில் கிசுகிசுத்தாள் …. மான்சி அதேபோல் செய்ய ….தான் கட்டப்போகும் தாலிக்காகக் காத்து கழுத்தை நீட்டியிருக்கும் அவளைக் கண்டு சத்யன் மகிழ்ந்து போனான் ….

அவளை மேலும் காக்க வைக்காமல் வேகமாக மாங்கல்யத்தை அந்த மங்கையின் கழுத்தில் முடிந்தான் … மதியும் வாசுகியும் கண்கலங்கி நிற்க … ” அக்கா அட்சதைப் போடுங்க ” என்று அவசரப்படுத்தினான் ஆதி …. பிரம்மையிலிருந்து விடுபட்டவர்களாக கையிலிருந்த அட்சதையை மணமக்களின் மீது தூவினார்கள் …. தாலிக் கட்டி முடிந்ததும் வேகமாக எழுந்த சத்யன் உணர்ச்சிப் பெருக்கில் தனது அக்காவையும் மாமாவையும் ஒருசேர அணைத்துக் கொள்ள …..



தம்பியின் கேசத்தை வருடிய வாசுகி ” வேணாம் அப்பு…. இப்போ அழக்கூடாது …. பாரு எல்லாரும் இங்கயே கவனிக்கிறாங்க ” என்று கூறி சத்யனை நிதானப்படுத்த முயன்றாள் …. மனைவியிடமிருந்து சத்யனை விலக்கிய மதி கலைந்து கிடந்த கேசத்தை விரல்களால் சரிசெய்து ” வீடியோ எடுக்குறாங்க சத்யா…. அமைதியா இருடா ” என்றவனின் கண்களிலும் துளிநீர் தேங்கி நின்றிருந்தது ….திருமணத்திற்கு வந்திருந்த அத்தனை பேரின் ஆசிர்வாதமும் பெற்று மணமக்கள் வாசுகியின் வீடு வந்து சேரும் போது மாலையாகி விட்டிருந்தது …. மணமக்களுக்கான சம்பிரதாயங்கள் முடிந்து தனது மனைவியை அழைத்துக் கொண்டு பூஜையறைக்குச் சென்று பெற்றோரை வணங்கினான் …..

அருகே நின்றவளுக்கு ” மான்சி ,, இவங்கதான் என் பேரண்ட்ஸ் ” என்று அறிமுகம் செய்து வைத்தான் …. ” ஓ…. இப்போ எங்க இருக்காங்க? ” என்று கேட்டவளை திகைப்புடன் பார்த்தான் …. ” ஒரு ஆக்ஸிடெண்ட்ல இறந்துட்டாங்க மான்சி… உனக்குத் தெரியாதா?” என்று கேட்க ….. ” அது வந்து மாப்ள …. அவளோட அப்பா இறந்தது ஞாபகம் வந்துடும்னு நான்தான் சொல்லலை …மன்னிச்சிடுங்க மாப்ள ” என்று மான்சிக்குப் பின்னாலிருந்து பவானி கூறவும்



” ஓ….. இட்ஸ் ஓகே ஆன்ட்டி ” என்றவன் மான்சியுடன் அங்கிருந்து வெளியே வந்தான் …. ” அப்பு நீ உன் ரூமுக்குப் போய் கொஞ்சம் ரெஸ்ட் எடு …. டின்னர் ரெடியானதும் கூப்பிடுறேன் ” என்றவள் ஆதியிடம் திரும்பி ” டேய் மாப்பிள்ளைத் தோழா … கூட்டிட்டுப் போயேன்டா ” என்றாள் … பயப்படுவது போல் நடித்த ஆதி ” முன்னாடி பரவால்லக்கா …. இப்போ கல்யாணம் முடிஞ்சிப் போச்சு … அவன் கூட தனியா போகவே பயமாருக்குக்கா ” என்றதும் எல்லோரும் முதலில் புரியாமல் விழித்தனர் ….

மதி தான் உடனே தெளிந்து ஆதியின் அருகே வந்து ” டேய் இது வாயா இல்லை வாய்க்காலா? முடியலைடா சாமி …. போய் சேருங்க ரெண்டு பேரும் ” என்று சத்யனுடன் சேர்த்து மாடிப்படிகள் பக்கமாக தள்ளினான் … சத்யன் தனது மனைவியைப் பார்க்க…. அவனருகே வந்த வாசுகி ” அவ கீழ் ரூம்ல ரெஸ்ட் எடுக்கட்டும் …. நைட் உன் ரூமுக்கு வருவா … போ .. போய் கொஞ்ச நேரம் தூங்கு அப்பு ” என்று மெல்லியக் குரலில் கூறியதும் சரியென்று ஒப்புதலாக தலையசைத்துவிட்டுச் சென்றான்



சிரிப்புடன் நண்பனின் கையைப் பிடித்துக் கொண்டு மாடிக்குச் சென்ற ஆதி பாதி படிகளில் சற்று நின்று திரும்பி ஹாலில் அமர்ந்திருந்த மான்சியைப் பார்த்தான் …. வீட்டிலிருந்த அத்தனை பேரும் நடந்துமுடிந்த திருமணத்தின் தாக்கம் மாறாமல் இருக்க … மான்சி மட்டும் தனது அம்மாவின் கையைப் பிடித்துக் கொண்டு சாதாரணமாக அமர்ந்திருந்தாள் …. புருவம் சுருங்க யோசனையாக நின்றிருந்த ஆதியின் தோளில் தட்டிய சத்யன்

” என்னடா நின்னுட்ட ? ” என்று கேட்க… நண்பனை அணைத்த ஆதி … ” ஒன்னுமில்லைடா …. வா போகலாம் ” என்று கூறி அவனை அழைத்துக் கொண்டு அறைக்குச் சென்றான் …. ஹாலில் அமர்ந்திருந்த பவானியிடம் வந்த வாசுகி ” ஆன்ட்டி … அதோ அந்த ரூம்ல உங்க திங்க்ஸ்லாம் வைக்கச் சொல்லிருக்கேன் …. நீங்களும் மான்சியும் அந்த ரூம்ல கொஞ்சநேரம் ரெஸ்ட் எடுங்க ” என்றதும் … ” சரிம்மா ” என்ற பவானி … மகளுடன் வாசுகி காட்டிய அறைக்குச் சென்றாள் ….



அறைக் கதவை மூடி தாழிட்டதும் மகளை இழுத்து அணைத்துக்கொண்டு சத்தமின்றி கதறினாள் அந்தத் தாய் …. ” என் மகளுக்கு இனியும் எல்லாம் நல்லதே நடக்கனும் கடவுளே” என்று கண்ணீருக்கிடையே வேண்டிக் கொண்டாள் …. மகள் பயந்துவிடப் போகிறாளோ என்று எண்ணியவளாக தனது கண்ணீரை அவசரமாகத் துடைத்துக் கொண்டு ” பாத்ரூம் போய்ட்டு வாம்மா ” என்று மகளை அழைத்துச் சென்று குளியலறையின் வாசலில் விட்டுவிட்டு வந்தாள் ….

Leave a Comment

Ads Blocker Image Powered by Code Help Pro

Ads Blocker Detected!!!

We have detected that you are using extensions to block ads. Please support us by disabling these ads blocker.

Powered By
Best Wordpress Adblock Detecting Plugin | CHP Adblock
error: read more !!