பொம்மலாட்டம் – பாகம் 18 – மான்சி தொடர் கதைகள்

தொண்டையை செருமி சரி செய்து கொண்டு மெல்லத் தொடங்கினான் ஆதி…. திருமணத்தன்றிலிருந்தே மான்சியின் நடவடிக்கைகள் மீது தனக்கு ஏற்பட்ட சந்தேகத்தைக் கூறியவன் அதைத் தொடர்ந்து அவளைக் கவனித்து வந்து தான் கண்டுப்பிடித்தவைகளைச் சொன்னான்….

ஆதிச் சொல்லச் சொல்ல அதிர்ச்சியில் சிலையானாள் வாசுகி…. மதியோ பிரம்மைப் பிடித்தவன் போல் ஆதி சொல்வதைக் கேட்டுக் கொண்டிருந்தான்… இன்று தனது வீட்டுக்கு விருந்துக்கு அழைத்துச் செல்வது போல் மனநல மருத்துவரைச் சென்று பார்த்துவிட்டு வந்ததைக் கூறிய ஆதி…. மான்சியின் நோய் பற்றிய விபரமும்… அதற்கான மருத்துவரின் விளக்கத்தையும் தெளிவாக எடுத்துரைத்தான்….



இமையோடு இமை சேர்ந்தால் கூட இடி இடிப்பது போல் சப்தம் கேட்கும் அளவிற்கு அமைதி….. அந்த அமைதிக்குப் பிறகு வீசப் போகும் புயலை எதிர்கொள்ள முடியாமல் நடுக்கத்துடன் மகளின் கையைப் பற்றிக்கொண்டு நின்றிருந்த பவானி…. எல்லாம் வெட்ட வெளிச்சமாகி விட்டது….. மூக்கை உறிஞ்சியபடி நிமிர்ந்து தனது சகோதரியின் முகம் பார்த்தான் சத்யன்

“நமக்குப் பெரிய நம்பிக்கைத் துரோகம் நடந்திருக்கு அக்கா…. என் வாழ்க்கை இப்படி சீரிழிஞ்சுப் போகும்னு நான் நினைச்சுக் கூட பார்க்கலை…. என் ஆசைகள் கனவுகள் எல்லாம் பொசுங்கிப் போச்சுக்கா….” இரு கைகளாலும் முகத்தை மூடிக் கொண்டான்…. அதிர்ந்து போய் தம்பியைப் பார்த்தாள்…..

‘பெற்ற பிள்ளையை விட அதிக பாசம் காட்டி பாராட்டி சீராட்டி வளர்த்த தம்பியின் வாழ்வு வீணாகிப் போனதா?’ அவளின் மென்மையான இதயத்தால் இத்தனைப் பேரதிர்ச்சியைத் தாங்க முடியவில்லை போல… நெஞ்சில் கை வைத்தபடி சோபாவின் பின்னால் சரிந்தாள்…. பதறிய ஆதி வாசுகியின் தோள் பற்றி



“அக்கா… அக்கா… ப்ளீஸ் ரிலாக்ஸ் அக்கா…. ப்ளீஸ்க்கா..” என்றதும் மதிக்கும் உயிர் வந்தது…. வேகமாய் எழுந்தவன் தன் மனைவியைக் கூட பார்க்காமல் பவானியிடம் திரும்பினான்…. “என்ன காரியம் பண்ணிருக்கீங்கம்மா? மனநிலை சரியில்லாத பொண்ணை எங்கத் தலையில் கட்டியிருக்கீங்க? எப்படிம்மா உங்களுக்கு மனசு வந்தது?” ஆத்திரமாகக் கேட்டான்…

பவானியிடம் பதிலில்லை…. முந்தானையால் வாயை மூடிக்கொண்டு மவுனமாக கண்ணீர் வடித்தாள்…… வாசுகி எழுந்து பவானியின் அருகில் வந்தாள்….. “நீங்க ஏன் அழறீங்க? அழ வேண்டியது நாங்க தான்… ஒரு பெரிய உண்மையை மறைச்சு என் தம்பியோட வாழ்க்கையையே வீணாக்கிட்டீங்க…..

நான் உங்களை சும்மா விடப் போறதில்லை” என்று கத்தியவள் தன் கணவனிடம் திரும்பினாள்…… “இவங்க கூட நமக்கென்னங்க பேச்சு? மெதல்ல வெளிய அனுப்புங்க” என்றாள்….. பவானி கண்ணீருடன் வாசுகியிடம் கைகூப்பி நிற்க… “அவசரப்படாத வாசு….” என மனைவியை சமாதானப்படுத்துவதற்காக முன்னால் வந்தான் மதி… கைநீட்டி தடுத்த வாசுகி….



“யாரும் எதுவும் சொல்லாதீங்க…… இவங்க செய்தது பெரிய நம்பிக்கைத் துரோகம்….. பொண்ணைப் பார்க்கனும்னு எத்தனை முறை இவங்க வீட்டுக்குப் போனேன்? ஒருமுறையாவது ஒரு வார்த்தை என்கிட்ட சொல்லியிருக்கலாம்….. ஒரு பைத்தியத்துக்கு சரியா நடிக்கக் கத்துக் கொடுத்து நம்மளையெல்லாம் முட்டாளாக்கியிருக்காங்க….. இனி இவங்களுக்கு இங்க இடமில்லை….” என்றவள்

“அவங்க மகளோட வெளியேறட்டும்” என்றாள் நிதானமாக…. ஆதியும் மதியும் அதிர்ந்து போய் வாசுகியிடம் வர…. சத்யன் இன்னும் முகத்தை மூடிக்கொண்டு சோபாவில் அமர்ந்திருந்தான்….. “என் மகள் பைத்தியம் இல்லைம்மா….. வார்த்தையைக் கவனமா பேசுங்க… நீங்களும் ஒரு பெண்ணைப் பெத்து வச்சிருக்கீங்க…..” பவானி ஆற்றாமையுடன் பேச….. “வாயை மூடுங்க….. நானும் ஒரு பொண்ணுக்கு அம்மா தான்….

இல்லேன்னு சொல்லலை…. என் பொண்ணுக்கு இப்படியொரு நிலைமை ஏற்பட்டா காலமெல்லாம் என் வீட்டோட வச்சிப்பேனே தவிர உங்களை மாதிரி ஒரு குடும்பத்தையே ஏமாத்தி ஒருத்தனோட வாழ்க்கையை நாசமாக்க மாட்டேன்….” உச்சத்தில் கத்திய வாசுகி….



திடீரென்று முகத்தை மூடிக்கொண்டு கதறியபடி “எங்க அப்பா அம்மா உயிரோட இருந்திருந்தா இப்படியெல்லாம் நடந்திருக்குமா? தன் மகனோட வாழ்க்கைக்கு நல்லா தீர விசாரிச்சு முடிவு பண்ணிருப்பாங்க….

ஆயிரம் இருந்தாலும் நான் வெறும் அக்கா தானே?” என்றவள் “என் தம்பியோட வாழ்க்கையை நானே நாசமாக்கிட்டேனே?” கதறியபடி அப்படியே தரையில் சரிந்தாள்…. அக்காவின் துயரம் புரிந்தவனாய் எழுந்து ஓடி வந்து அவளருகே மண்டியிட்டவன்

“அப்படில்லாம் சொல்லாதீங்கக்கா…. உங்கமேல ஒரு தப்பும் இல்லை… இவங்க ஏமாத்தினதுக்கு நீங்க என்ன செய்வீங்க?” என்றபடி வாசுகியை தன் தோளில் சாய்த்துக் கொண்டு இவனும் கலங்கினான்…ஆதி அவர்களின் அருகே வந்தான்…. “உங்க வருத்தம் புரியுதுக்கா…. ஆனா மான்சி பைத்தியம் கிடையாது…. இது ஒரு மன வளர்ச்சிக் குறைபாடு தான்… குணப்படுத்த வழியில்லைனாலும் சில பயிற்சிகள் மூலமா சரியான முறையில் வழி நடத்த முடியும்….



ப்ளீஸ்க்கா… கொஞ்சம் நிதானமா இருங்க” இரக்கத்துடன் பேசினான்… ஆத்திரமாக நிமிர்ந்த வாசுகி தனது இரு கையையும் பட்டென்று அடித்து இணைத்து கைகூப்பி “வேணாம் ஆதி… எந்த வழி நடத்தலுக்கும் நாங்க தயாராக இல்லை… நினைச்சுப் பார்க்கவே அசிங்கமா இருக்குடா… எல்லாமே அவ அம்மா சொன்னால் தான் செய்வாள்னா அது எவ்வளவு அருவருப்பான விஷயம்” என்றவள்

அப்போது தான் தம்பியின் ஞாபகம் வந்தவள் போல் “அய்யோ அப்பு… இதையெல்லாம் நீ எப்படிடா தாங்கின? எல்லாத்தையும் நானே நாசம் பண்ணிட்டேனே அப்பு?” என்று தம்பியைக் கட்டிக்கொண்டு கதறியழ… கழிவிரக்கத்தால் சத்யனும் அழுதான்…. மற்றவர்கள் அத்தனை பேரும் அவர்களின் கண்ணீரை வேதனையுடன் பார்த்திருந்தனர்…..

மதியின் கண்களும் கலங்கிற்று…. எத்தனை பெரிய சிக்கலில் சத்யனின் வாழ்வு மாட்டிக்கொண்டுள்ளது என்று புரிந்தது… அதுவும் அது தங்களால் தான் எனும்போது அவனது ஆத்திரம் அதிகமானது. பவானியிடம் திரும்பினான் “அப்பா அம்மா இல்லாதவன்… அக்கா மாமா இருந்து சீரும் சிறப்புமா கல்யாணம் செய்து வச்சிட்டோம்னு நினைச்சேன்…



என் நினைப்புல மண் அள்ளிப் போட்டுட்டீங்கம்மா…. சத்யனோட சொந்தக்காரங்க அத்தனை பேரையும் மீறி அவனை என்கூட கூட்டிட்டு வந்தேன்… இப்போ அந்த ஊர் ஐனங்கள் ‘இப்படிப்பட்ட பொண்ணுதான் கிடைச்சுதா? உன் மகனா இருந்தா இப்படியொரு பொண்ணைத் தேடி வச்சிருப்பியா’ன்னு ஒரு கேள்வி எங்களை பார்த்துக் கேட்டால் நாங்க என்ன பதில் சொல்வோம்.. இல்ல.. இல்ல.. இனி ஒரு நிமிஷம் கூட இந்த வீட்டுல உங்களுக்கு இடமில்லை….

உங்க பொருட்களையெல்லாம் எடுத்துக் கிட்டு உடனே வெளியேறுங்க….” என்று கத்தினான்…. ஆதிக்கு என்ன செய்வதென்ற விளங்கவில்லை…. “மாமா கொஞ்சம் நிதானமா யோசிங்க மாமா…. ப்ளீஸ்… மான்சி சத்யனோட ஒய்ப்…. அவனுக்கும் சிலப் பொறுப்புக்கள் இருக்கு மாமா” என்று கெஞ்சினான்….

Leave a Comment

Ads Blocker Image Powered by Code Help Pro

Ads Blocker Detected!!!

We have detected that you are using extensions to block ads. Please support us by disabling these ads blocker.

Powered By
Best Wordpress Adblock Detecting Plugin | CHP Adblock
error: read more !!