மான்சிக்காக – பாகம் 63 – மான்சி கதைகள்

fb_img_1478970660929சின்னமனூரில் தர்மனின் ஆலையின் வெளியே இருந்த பிரமாண்டமான காலி இடத்தில் மிகப்பெரிய கல்யாண பந்தல் போடப்பட்டிருக்க…. கிழக்கு மூலையாக போடப்பட்டிருந்த மேடையில் தேவன் அக்னிக்கு முன்பு அமர்ந்திருந்தான்… அவன் அருகே செல்வி.. மணப்பெண் அலங்காரத்தில்…

செல்வி இத்தனை அழகா என்று வாய்பிளந்து வேடிக்கைப் பார்க்கவே வந்தது போல் ஊர் மக்கள் மணமேடையைப் பார்த்துக்கொண்டிருந்தனர் தர்மனும் மீனாவும் மேடையில் நின்றுகொண்டு ஐயர் கேட்ட பொருட்களை எடுத்து கொடுப்பதும்.. பிறகு கூட்டத்தில் இருக்கும் தெரிந்தவர்களை புன்னகையுடன் பார்ப்பதும் என கல்யாண வீட்டுக்காரர்களை போல் பாந்தமாக இருந்தார்கள்…. பஞ்சவர்ணம் சொந்தகாரர்களை தேடித்தேடி நலம் விசாரித்துக்கொண்டிருந்தார்….



சிவாவின் கணவன் பந்தி பறிமாறும் இடத்தில் இருந்து பொறுப்பாகப் பார்த்துக்கொள்ள…. அவனிடம் ஓடி வந்த சிவா இரைச்சலால் எதுவும் கேட்காது என்று அவன் காதில் ஏதோ சொல்ல… உடனே சமையல் செய்யும் இடத்துக்குப் போய் ஒரு கப்பில் சூடான பாலை எடுத்துவந்து கொடுத்தான்… அதை வாங்கிக்கொண்டு சிவாத்மிகா பரபரப்புடன் மறுபடியும் வெளியே போனாள் சத்யன் தேங்காய் பைகள் அடங்கிய மூட்டையை ஆட்களை வைத்து தூக்கிச்சென்று பந்தலின் வாசலில் வைத்தான்….

அங்கே மூத்த மகனாய் தன் மனைவி ருத்ராவுடன் வந்தவர்களை வரவேற்றுக் கொண்டிருந்த வீரேன் மாமனைப் பார்த்து “ மாமா மான்சி எங்க மாமா?” என்று கேட்க… “ அதோ அங்க இருக்கடா மாப்ள” என்று சத்யன் காட்டிய திசையில் … மான்சி தனது பெரிய வயிற்றைத் தூக்கிக்கொண்டு இளம் பச்சைநிற பட்டுப்புடவையில்.. காதில் கழுத்தில் எல்லாம் வைரங்கள் ஜொலிக்க… கை நிறைய அடுக்கப்பட்ட கண்ணாடி வளையல்களுடன் கால் சலங்கை சத்தமிட நடந்துகொண்டிருக்க ..



சிவாத்மிகா கையில் பால் டம்ளருடன் அவள் பின்னால் போய் குடிக்கச் சொல்லி கெஞ்சிக்கொண்டிருந்தாள்.. தேவனின் கல்யாணத் தேதி வேறு நல்லநாள் இல்லாததால் மான்சியின் வளைகாப்பு முடிந்த மறாவது வாரமே வைத்துவிட்டார்கள்.. யாருக்கும் இதில் சம்மதமில்லை என்றாலும் சத்யனும் மான்சியும் தான் வற்புறுத்தி இந்த தேதியை வைத்தார்கள்… இன்றோ நாளையோ எனும் பயமுறுத்தும் வயிற்றுடன் இருக்கும் மான்சியின் மீதே அனைவரின் கவனமும் இருந்தது…

“ ஏய் நீயேன்டி என்கூட வந்து நிக்கிற? அங்கப்போய் மான்சியைப் பார்த்துக்க ருத்ரா” என்று வீரேன் கோபமாய் கூற… “ அய்யோ இவ்வளவு நேரமா அங்கதான் இருந்தேங்க… நீங்க தனியா நின்னு எல்லாரையும் வரவேற்குறீங்கன்னு மான்சிதான் உங்ககூட வந்து நிற்க்கச் சொல்லுச்சு” என்று வருத்தமாக ருத்ரா சொன்னதும்…



வீரேன் முகம் சற்று இறங்கியது “ இல்ல ருத்ரா மான்சி கொஞ்சம் கூட வலி தாங்க மாட்டா…. எனக்கு அதை நெனைச்சாலே பயமாயிருக்கு.. அதான் நீ கூடவே இருன்னு சொல்றேன்” என்று கவலையுடன் கூறினான்.. “ ஏங்க எத்தனை பேரு இருந்தாலும் அவதான் வலிச்சு பெத்துக்கனும்… அதோட மான்சியும் வலியை தாங்கனும்ங்க.. நாமளே சுத்தியிருந்து பயமுறுத்த கூடாது” என்று கண்வனுக்கு நிதர்சனத்தை சொன்னவள்

“ நான் இங்க இருந்தாலும் என் பார்வை மான்சியை விட்டு நகராதுங்க நீங்க பயப்படாதீங்க” என்றாள்… அதன்பின் வந்தவர்களை இருவரும் இன்முகத்துடன் வரவேற்க… அதில் ஒரு உறவுக்கார பெண்மணி ஜோயலை நெருங்கி அவள் கைகளைப் பற்றி “ என்னம்மா உங்க ரெண்டு பேருக்கும் கல்யாணமாகி ஆறேழு மாசமாகுதே இன்னும் எதுவும் உண்டாகலையாம்மா?” என்று அன்புடன் விசாரிக்க திரும்பி கணவனைப் பார்த்து வெட்கமாய் சிரித்த ஜோயல் “ இல்லைங்க பெரியம்மா…



எங்கவீட்டுப் பொண்ணு இப்படி இருக்கும்போது அவளை கவனிச்சுக்க ஆள் வேனும்ல.. அதனால மான்சிக்கு குழந்தை பிறந்ததுக்குப் பிறகு நான் அம்மா அப்பா ஆகலாம்னு இருக்கோம்” என்றாள் .. “ ம்ம் நீ சொல்றதும் சரிதான் தாயி… இந்தகாலத்துல நாத்தனார் மேல இவ்வளவு அன்பா யாரு இருக்காங்க? ” என்றுவிட்டு போனார் அந்த பெண்மணி…“ சரி இனி யாரும் வரமாட்டாங்க ..

நான் இங்கருந்து பார்த்துக்கிறேன்… நீ போய் மான்சி கூட இரு” என்று மனைவியிடம் வீரேன் சொன்னதும் “ சரிங்க இதோ போறேன்” என்று மான்சியிடம் ஓடினாள் ஜோயல்… சத்யன் தாய்மாமனாய் பட்டுவேட்டி பட்டு சட்டையில் பந்தலில் வந்து நிற்க… தேவன் அவனை கையசைத்து அருகில் அழைத்து “ மாமா மான்சி எப்படியிருக்கா?” என்று கவலையுடன் கேட்க… அவன் தோளைத் தட்டிய சத்யன் “ அவ நல்லாதான் இருக்கா…



நீ அவளை நினைச்சு கவலைப்படாம சந்தோஷமா இரு தேவா… மான்சி கூட ஜோயலும் சிவாவும் இருக்காங்க” என்று ஆறுதலாக சொன்னான்.. அவன் இவ்வளவு சொல்லியும் திருப்தியுறாத தேவன் மணமேடையை கடந்து சென்ற ஜோயலைப் பார்த்து “ அண்ணி அண்ணி” என்று அழைக்க…வேகமாக அவனிடம் யந்து குனிந்து “ என்ன தேவா?” என்றாள் ஜோயல்… “ மான்சிக்கு எப்படி அண்ணி இருக்கு?” என்று கவலையுடன் கேட்டவனிடம்

“ நல்லாருக்கா தேவா… நான் அவகூடவே இருக்கேன் நீங்க பயப்படாதீங்க” என்றாள் ஜோயல் “ இல்ல அண்ணி அவ சின்ன வலியைக் கூட தாங்க மாட்டா… அதான் ரொம்ப பயமாயிருக்கு” என்று வீரேன் சொன்ன அதே வார்த்தைகளை இவனும் சொல்ல.. ஏனோ ருத்ராவுக்க கண்கலங்கி விட்டது … “ நான் பார்த்துக்கிறேன் தேவா நீங்க கொஞ்சம் சிரிச்ச மாதிரி இருங்க… மூஞ்சி அழுது வடியுது” என்று கேலி செய்துவிட்டு அங்கிருந்து நகன்றாள்…



செல்வி தன் அருகில் நின்ற சத்யனைப் பார்த்து “ சித்தப்பா” என்று மெல்லிய குரலில் அழைக்க… சத்யன் “ என்னம்மா” என்று அவளருகே குனிந்தான்… “ இங்க இருக்கிறவங்க எல்லாத்தையும் பார்த்துக்குவாங்க… நீங்க போய் சின்னம்மா கூடவே இருங்க சித்தப்பா.. இவரு ரொம்ப பயப்படுறாரு” என்று தேவனை காட்டி சொல்ல… “ சரிம்மா நான் போய் மான்சி கூடவே” இருக்கேன் என்று சத்யன் மான்சி இருக்கும் இடத்துக்கு நகர்ந்தான் மணமேடையின் மறு மூலையில் ஒரு சேர் போட்டு மான்சி அமர்ந்திருக்க…

அவளுக்கு இருபுறமும் சிவாத்மிகாவும் ருத்ராவும் நின்றிருந்தனர்… சத்யனைப் பார்த்ததும் முகத்தில் சிரிப்புடன் கைகளை நீட்டினாள் மான்சி … சத்யன் இரண்டே எட்டில் அவளை அடைந்து கைகளைப் பற்றிக்கொண்டு “ என்னடா கண்ணம்மா?” என்றான் காதலாகி… “ ஒன்னுமில்ல மாமா நீ என்கூடவே இரு மாமா?” என்றவளிடம் … “ ம் அதுக்குத்தான் வந்தேன்” என்றவன் மகளைப் பார்த்து “ சிவா நீயும் டைனிங்ஹால் போய் எல்லாரும் சாப்பிட்டாங்களான்னு பாரு..



மாப்பிள்ளை ஒத்தை ஆளா அல்லாடிக்கிட்டு இருக்காரு” என்றான்.. “ இதோ போறேன்பா… சின்னம்மாவுக்கு குடிக்க பால் எடுத்துட்டு வந்தேன்.. அவங்க குடிக்கவேயில்லை… ஏதாவது கூல்டிரிங்ஸாவது வாங்கிட்டு வரச்சொல்லி குடுங்கப்பா” என்று சொல்லிவிட்டு போனாள்… மான்சியின் முகம் அதிகமாக வியர்த்து வழிய… சத்யன் கைகுட்டையால் துடைத்தபடி இருந்தான்

“ என்ன ஜோயல் மான்சிக்கு இப்படி வியர்க்குது?” என்று கவலைப்பட்டவனைப் பார்த்து புன்னகைத்த ஜோயல் “ ஏன் அண்ணா நிறைமாச கர்பிணிக்கு போய் இவ்வளவு நகையும் பட்டுப்புடவையும் போட்டுவிட்டா வியர்க்காம என்ன செய்யும்… நான் சொல்ற மாதிரி செய்யுங்க…



தாலி கட்டினதும் மான்சியை கூட்டிக்கிட்டு வீட்டுக்கு கிளம்புங்க… நல்லா வெண்ணீர்ல குளிச்சுட்டு ரெஸ்ட் எடுக்கட்டும்… நான் இங்க மத்த சம்பிரதாயமெல்லாம் முடிஞ்சதும் உடனே கிளம்பி வர்றேன்” என்று சொல்ல … “ ஆமாம் மாமா தாலி கட்டினதும் வீட்டுக்குப் போகலாம்” என்றாள் மான்சியும்…

Leave a Comment

Ads Blocker Image Powered by Code Help Pro

Ads Blocker Detected!!!

We have detected that you are using extensions to block ads. Please support us by disabling these ads blocker.

Powered By
Best Wordpress Adblock Detecting Plugin | CHP Adblock
error: read more !!