மனசுக்குள் நீ – பாகம் 35 – தமிழ் காமக்கதைகள்

தன் கையை பற்றியிருந்த ரஞ்சனாவின் கரத்தை விலக்கிய கிருபா திரும்பி வசந்தியின் முகத்தை பார்த்தான்,, அவள் முகத்தில் புன்னகை இருந்தாலும் அந்த புன்னகையில் ஒரு வரட்சி, கிருபாவுக்கு நெஞ்சை சுட்டது,, சட்டென்று குனிந்து குழந்தையை தூக்கிக்கொண்டு “ டாக்டரையும் பார்க்கவேண்டாம் ஒரு மண்ணும் வேண்டாம்,, வா போகலாம்” என்று கடுப்புடன் கூறிவிட்டு விடுவிடுவென வெளியே நடந்தான் கிருபா

திடீரென்று என்ன கோபம் என்று ரஞ்சனா குழப்பமாக வசந்தியை பார்க்க,, அவள் அதே சோகப் புன்னகையோடு “ அவரோட இயலாமையை இப்படி காட்டிட்டு போறார்,, சரி நீயும் கிளம்பு,, நான் சொன்னதை மறந்துடாதே,, அவரை கவனிச்சுக்கோ ரஞ்சனா” என்று கூறிவிட்டு கையெடுத்துக் கும்பிட்டாள் வசந்தி



ஒரே எட்டில் வந்து அவள் கையைப் பற்றி “ வேனாம் மேடம் நீங்க கும்பிடும் அளவுக்கு எனக்கு தகுதியில்லை, என்னால் முடிஞ்சதை நான் செய்வேன்” என்று உறுதி கூறி அங்கிருந்து கிளம்பினாள்

காரில் அனிதாவை மடியில் வைத்துக்கொண்டு முகத்தை இறுக்கமாக வைத்தபடி அமர்ந்திருந்த கிருபா,, மழையில் நனைந்தபடி புடவை தலைப்பால் தலையில் முக்காடிட்டுக் கொண்டு ஓடி வந்த ரஞ்சனாவை பார்த்ததும் கையை நீட்டி கார் கதவை திறந்துவிட்டான்,

உள்ளே ஏறியமர்ந்த ரஞ்சனா நனைந்த புடவையால் தனது கைகளை துடைக்க,, காரின் டேஷ்போர்டை திறந்து அதிலிருந்து ஒரு டவலை எடுத்து அவளிடம் கொடுத்து “ நல்லா தொடச்சுக்கிட்டு பாப்பாவை வாங்கிக்க ரஞ்சனா” என்றான் கிருபா

ரஞ்சனா அவன் சொன்னதுபோல் துடைத்துகவிட்டு ,, டவலை மடியில் வைத்துக்கொண்டு மகளை வாங்கிக்கொண்டாள்,, அவளுக்கு கிருபா இருக்கும் நிலையில் அவனுடன் வருவதற்கு இஷ்டமில்லை,, இவ்வளவு காய்ச்சலை வச்சுகிட்டு இவரே வரனுமா? என்னை பஸ் ஏத்திவிட்டா நான் போய்டுவேனே,, என்று மனதில் நினைத்ததை அவனிடம் கேட்டேவிட்டாள்

திரும்பி அவளைப் பார்த்து முறைத்த கிருபா “ எல்லாம் எனக்கு தெரியும்,, நீ பேசாம வா,, இந்த கொட்டுற மழையில் குழந்தையை தூக்கிகிட்டு பஸ்ல போறாளாம்,, பஸ்ஸை விட்டு இறங்கி அவ்வளவு தூரம் எப்படி நடந்து போவ?” என்று கோபமாக கேட்டான்

அதற்குமேல் எதுவும் பேசமால் வாயை மூடிக்கொண்டாள்,, சிறிதுநேரத்தில் மடியில் இருந்த குழந்தை சினுங்கியது,, ரஞ்சனா மார்போடு அணைத்து சமாதானம் செய்தாலும் அடங்கமால் பசியால் குழந்தை அழ ஆரம்பித்தது

திரும்பிப் பார்த்த கிருபா “ அதுவும் எவ்வளவு நேரம்தான் பசி தாங்கும்,, ஏன் இன்னும் பசியாத்தாம வச்சிருக்க?” என்று சற்று கோபமாக கேட்டான்



தர்மசங்கடமாக நெளிந்த ரஞ்சனா “ வீட்டுல போய் குடுக்குறேன்” என்றாள்

உடனே கோபமாய் திரும்பி பார்த்த கிருபா “ நான் வேனா கண்ணை மூடிகிட்டு கார் ஓட்டவா” என்று நக்கலாக கேட்டான்

அதற்கும் மேலே சும்மாயிருந்தால் இன்னும் ஏதாவது கோபமாக பேசுவான் என்று பயந்த ரஞ்சனா முந்தானையை எடுத்து தோளை மூடிக்கொண்டு குழந்தைக்கு பால் கொடுக்க ஆரம்பித்தாள்

திரும்பி ஓரக்கண்ணால் கிருபாவை பார்த்தாள்,, ஜுரத்தினால் முகம் சிவந்து உதடுகள் வரண்டு போயிருந்தது,, முதல்நாள் அலுவலகத்தில் பார்த்த கிருபாவிற்கும் இவனுக்கும் ஆறு அல்ல ஆயிரம் வித்தியாசங்களை சொல்லலாம்,, அவனிடம் உடலிலும் செயலிலும் ஏகப்பட்ட மாற்றங்கள் ரொம்பவே களைத்து சோர்ந்து உற்சாகமிழந்து காணப்பட்டான்,, அவன் கைகளில் கார் அதிகமாகவே தடுமாறியது,, அடிக்கடி நெற்றியை துடைத்து உடலை குறுக்கிக்கொண்டான்,, ஒருவேளை குளிருகிறதோ என்று நினைத்தாள் ரஞ்சனா
ஆனால் காரணமேயில்லாமல் கிருபா அவளிடம் வெடுவெடுப்பதை நினைத்து அவளுக்கு அழுகை வரும்போல இருந்தது,, நான் என்ன தப்பு செய்தேன்னு இவரு இப்படி எரிஞ்சு விழுறாரு,, என்று நினைத்தபடி குழந்தைக்கு பாலூட்டினாள்

“ வெளியே வர்றவ பால் பாட்டில் எடுத்துகிட்டு வரவேண்டியது தானே?” என்றான் கிருபா

“ அவசரத்தில் மறந்துட்டேன்” என்றாள் தடுமாறியபடி

அதன்பின் இருவரும் எதுவும் பேசிக்கொள்ளவில்லை,, ரஞ்சனா குழந்தையை தோளில் போட்டு தட்டிக்கொடுத்தாள்,, வீடு வந்துவிட்டது ஆனால் இறங்கமுடியாத அளவுக்கு மழை வெளுத்து வாங்கியது,, காரை விட்டு கிட்டத்தட்ட இருநூறு அடி தூரம் நடந்து வீட்டுக்கு ,, போகவேண்டும் கிருபாவிற்கு குளிர் நடுங்கியது,



“ ரஞ்சனா டவலை போத்திகிட்டு இறங்கி போயிடு,, நான் இப்படியே வீட்டுக்கு கிளம்புறேன்” என்றான் கிருபா

“ நீங்க இப்போ எப்படி போவீங்க,, வரும்போதே கார் ஓட்ட முடியலை, உங்களுக்கு பீவர் அதிகமாயிருச்சுன்னு நெனைக்கிறேன்,, ப்ளீஸ் இறங்கி வீட்டுக்கு வாங்க, என்கிட்ட மாத்திரை இருக்கு அதை போட்டுகிட்டு பீவர் கொஞ்சம் குறைஞ்சதும் வீட்டுக்கு போங்க” என்று ரஞ்சனா கெஞ்சினாள்

“ இல்ல பராவாயில்லை நான் போயிடுவேன்” என்று கிருபா சொல்லும்போதே அவன் மூச்சின் உஷ்ணம் ரஞ்சனா மேல் பட்டது

“ இனிமேல் போய் ஆஸ்பிட்டல்லயும் தங்கமுடியாது,, வீட்டுலயும் சத்யன் இல்லை ஊருக்கு போய்ட்டான்,, இப்போ நீங்க போய் என்னப் பண்ணப்போறீங்க, பேசமா வீட்டுக்கு வாங்க மாத்திரை போட்டுகிட்டு கொஞ்சம் ஓய்வெடுத்த பிறகு மழை விட்டதும் கிளம்புங்க” என்று மறுபடியும் கெஞ்சினாள் ரஞ்சனா

“ ம்ஹூம் நான் போறேன்” என்று பிடிவாதமாக கூறினான் கிருபா

அவன் திரும்பவும் போவதில் ரஞ்சனாவுக்கு சம்மதமில்லை,, வரும்போது அவன் கார் ஓட்டிய விதம் அவளை பெரிதும் பயமுறுத்தியிருந்தது,, அவன் முகத்தை பார்த்தாளே ஜுரம் ரொம்ப கடுமையாக இருப்து தெரிந்தது,, மனதில் ஒரு முடிவுடன் “ நீங்க வரலைன்னா நானும் காரை விட்டு இறங்கமாட்டேன்” என்று பிடிவாதமாக கூறிவிட்டு நிமிர்ந்து உட்கார்ந்தாள் ரஞ்சனா

திரும்பி அவள் முகத்தையே சிறிதுநேரம் உற்று பார்த்தவன் “ சரி டவலை போத்திகிட்டு குழந்தையோட நீ இறங்கி போ, நான் பின்னால வர்றேன்” என்றான் கிருபா

அவன் வருகிறேன் என்றதும் முகம் பட்டென்று மலர,, அவன் பக்கம் திரும்பி அவன் தோளில் குழந்தையை சாய்த்து, மடியிலிருந்த டவலால் கிருபாவையும் குழந்தையையும் தலையோடு சுற்றி போர்த்திவிட்டு “ ம் இப்போ நீங்க இறங்கி போங்க, நான் புடவையை தலையில் போட்டுகிட்டு வர்றேன்” என்றவள் சொன்னதுபோலவே படவை தலைப்பை தலையில் போட்டுக்கொண்டு கதவை திறந்து இறங்கி வீட்டை நோக்கி ஓடினாள்



அவள் போவதையே பார்த்த கிருபா, உதட்டில் தேங்கிய சிறு புன்னகையுடன் கையில் இருந்த அனிதாவின் கன்னத்தில் முத்தமிட்டு விட்டு இழுத்து போர்த்திக்கொண்டு காரைவிட்டு இறங்கி கதவை மூடிவிட்டு வீட்டை நோக்கி ஓடினான்

வீட்டுக்குள் நுழைந்ததுமே அவனிடமிருந்து குழந்தையை வாங்கி அன்னம்மாவைடம் கொடுத்துவிட்டு “ அன்னம்மா தாத்தாவோட சலவை பண்ண வேட்டி ஏதாவது இருந்தா எடுத்துட்டு வாங்க” என்று உத்தரவிட்டு விட்டு குளிரில் நடுங்கிய கிருபாவின் கையை பிடித்து அழைத்துச்சென்று சோபாவில் அமர்த்தினாள்

கொடியில் இருந்த டவலை எடுத்து அவன் தலையில் மிச்சமிருந்த ஈரத்தை துவட்டினாள்,, கிருபா அவளிடமிருந்து டவலை வாங்கிக்கொண்டு “ நான் தொடச்சுக்கிறேன்” என்றான்

Leave a Comment

Ads Blocker Image Powered by Code Help Pro

Ads Blocker Detected!!!

We have detected that you are using extensions to block ads. Please support us by disabling these ads blocker.

Powered By
Best Wordpress Adblock Detecting Plugin | CHP Adblock
error: read more !!