மனசுக்குள் நீ – பாகம் 43

 

உடனிருந்த பெண் தூரத்தில் இருந்த பெண்கள் கழிவறையை நோக்கி போக, மான்சி மட்டும் பக்கவாட்டில் இருந்த மரங்கள் அடர்ந்த பகுதியில் ஒரு மரத்தின் அடியில் அமர்ந்தாள்

சத்யன் வேகமாக மான்சியை நெருங்கினான், சற்று தொலைவிலேயே அவன் வருவதை கவனித்து விட்ட மான்சி சிறு திகைப்புடன் எழுந்து மரத்தில் சாய்ந்து கொண்டாள்,

அவள் அருகே வந்த சத்யன் அவளுக்கு இரண்டு பக்கமும் கைகளை மரத்தில் ஊன்றி நின்று தலையை சாய்த்து அவளையே பார்த்தான்



அவன் வேகமாக தன்னை நெருங்கியயதை கண்டு மான்சி முதலில் மிரண்டாலும் பிறகு அவன் பார்வையின் கூர்மையால் வெட்கமாக தலை கவிழ்ந்தாள்

அவளின் வெட்கம் படர்ந்த முகமும் பேச துடித்த இதழ்களும் இத்தனை நாட்களாக பிரிந்திருந்த சத்யனின் மனதை பித்தாக்க “ ஓய் என்ன நக்கலா, கேன்டீன்ல என்னை பார்த்தும் பார்க்காத மாதிரி மூஞ்சிய திருப்பிக்கிற, அந்த பொண்ணுகிட்ட சிரிச்சு சிரிச்சு பேசுற, என்ன வெறுபேத்துறியா?” என்று கொஞ்சம் கோபமும் நிறைய காதலுமாக சத்யன் கேட்க

இன்னமும் வெட்கம் குறையாத முகத்துடன் “ ஓ முதலாளி சார் இருந்தா பேசக்கூடாது சிரிக்கக்கூடாதுன்னு இந்த மில்லுல சட்டம் இருக்கா என்ன,, எனக்கு இவ்வளவு நாளா தெரியாதே” என்று குரலில் வியப்பு காட்டி மான்சி சொல்ல..

“ என்ன நக்கலா? எனக்கு கோபம் வந்துச்சுன்னா அவ்வளவு தான்” என்று பொய்யாய் மிரட்டினான் தன் காதலியை..

சட்டென்று நிமிர்ந்த மான்சி “ அய்யோ என்ன பண்ணுவீங்களாம்?” என்று அவனைப்பார்த்து நெஞ்சை நிமிர்த்தி காட்டியவள் அது எவ்வளவு தவறு என்று விரைவிலேயே புரிந்துகொண்டு “ ச்சீ பார்வையைப் பாரு திருடன் மாதிரி” என்றாள்

சத்யனால் அவள் நிமிர்த்தி காட்டிய கோபுர கலசங்களில் இருந்து பார்வையை அகற்றமுடியாமல் “ நீயா பண்ணிட்டு இப்ப எதுக்கு ச்சீன்னு சொல்ற, ஆனாலும் மான்சி உனக்கு…..” என்று எதையோ சொல்லவந்து வார்த்தைகளை மென்று விழுங்கினான்



அவன் என்ன சொல்ல வந்தான் என்று அவன் சொல்லாமலே அவளுக்கு புரிய அவன் நெஞ்சில் கைவைத்து தள்ளிய படி “ என்ன இப்படியெல்லாம் பேசுறீங்க,, யாராவது பார்க்குறதுக்குள்ள இங்கிருந்து போங்க” என்று கிசுகிசுப்பாய் சொன்னவளால் அவனை ஒரு இஞ்ச் கூட நகர்த்த முடியவில்லை,

அவள் என்ன சொன்னாலும் சுற்று சூழ்நிலையை கவனிக்கும் நிலையில் அவன் இல்லை,, மேலும் அவளை நெருங்கிய சத்யன் வெட்கத்துடன் துடித்த அவள் இதழ்களில் தனது தடித்த உதடுகளை பதித்து கீழுதட்டை கவ்வி இழுக்க.. அவள் போராட்டமாக அவன் நெஞ்சில் கைவைத்து தள்ளினாள்

அவனுடைய உதடுகளின் அழுத்தமும் வேகமும் அதிகமாக, மான்சியின் பிடி தளர ஆரம்பித்தது, அவளுக்கும் இத்தனை நாள் அவனை பாராமல் ஏக்கம் விழித்துக்கொள்ள அவன் நெஞ்சில் கைவைத்து தள்ளியவள் அவன் சட்டையை கொத்தாக பற்றி தன்னுடன் அழுத்திக்கொண்டு வாயைத்திறந்து அவன் தேடலுக்கு வழிவிட்டாள்

இருவரும் தங்களை மறந்திருக்க, சத்யனை தேடி வந்த கார்திக் தூரத்தில் இரண்டு ஜோடிப்புறாக்கள் காதல் செய்வதை கண்டு ரசித்தபடி அப்படியே நின்றுவிட்டான், அப்போது சற்று தொலைவில் யாரோ இரண்டு ஊழியர்கள் பேசிக்கொண்டு வந்தனர்



அவர்களை பார்த்ததும் பரபரப்பான கார்த்திக் தனது மொபைலை எடுத்து சத்யன் நம்பருக்கு கால் செய்தான், ஊழியர்கள் தங்கள் முதலாளி வேலை செய்யும் ஒரு பெண்ணுடன் இப்படி இருப்பதை பார்தால் சத்யனுக்கு எவ்வளவு மரியாதை குறைவு என்ற பதட்டம் கார்த்திக்கு

தனது பாக்கெட்டில் இருந்த மொபைல் அடித்ததும், தங்களை மறந்து முத்தமிட்ட இருவரும் திடுக்கிட்டு விலகினர், சத்யன் அவசரமாக தனது மொபைலை எடுத்து யாரென்று பார்த்தான், அதற்குள் கார்த்திக் கட் செய்துவிட்டதால், சத்யன் கார்திக் எங்கே என்று பார்க்க, தூரத்தில் நின்ற கார்த்திக் பக்கத்தில் வந்த ஊழியர்களை ஜாடை காட்டினான், சத்யன் சட்டென்று விலகி நின்றதும், மான்சியும் கவனித்துவிட்டு சங்கடத்துடன் முகத்தை துடைத்தபடி மில்லை நோக்கி வேகமாக நடந்தாள்

அன்று முழுவதும் பழைய உற்சாகம் திரும்பிவிட மும்பையில் நடக்கவிருக்கும் மாநாடு சம்பந்தமான மீட்டிங்கில் தனது பேச்சு எப்படியிருக்க வேண்டும் என்று சில முக்கிய ஊழியர்களுடன் ஆலோசனையில் ஈடுப்பட்டான்

அடுத்த ஆறு நாட்கள் ஜவுளித்துறையின் மாநாட்டுக்கு என்று சத்யன் மும்பை சென்றுவிட்டு, ஏழாவது நாள் கோவை வந்து இறங்கியதும் முதலில் மான்சிக்குத்தான் போன் செய்தான், இத்தனை நாளும் அலுவல் மிகுதியால் எப்போதாவது ஒன்றிரண்டு வார்த்தைகள் மட்டுமே பேசியவன், இப்போது பேசியே ஆகவேண்டும் என்ற எதிர்பார்பில் போன் செய்தான்

கால் செய்துவிட்டு எதிர்பார்ப்புடன் காதில் வைத்தவன் சுவிட்ச் ஆப் என்று வந்தவுடன் ஏமாற்றத்துடன் காரில் ஏறி வீட்டுக்கு வந்தான், வீட்டுக்கு வந்ததும் பாட்டியுடன் சிறிதுநேரம் பேசிவிட்டு தன் அறைக்கு வந்து கார்த்திக்கு போன் செய்து மில் சம்பந்தமாக பேசிவிட்டு மான்சியை பற்றிக் கேட்டான்



“ அவங்க இன்னிக்கு மில்லுக்கு வரலை பாஸ், போன் செய்து பார்த்தேன் சுவிட்ச் ஆப்ன்னு வந்தது, என்னன்னு தெரியலை பாஸ்” என்றான் கார்த்திக்
சத்யனுக்குள் பதட்டம் வந்து புகுந்துகொள்ள “ காலையிலேர்ந்தே போன் சுவிட்ச் ஆப் ஆகிருக்கா? என்னாச்சு அவளுக்கு” என்றவன் கார்த்திக் பதிலை எதிர்பார்க்காமல் போன் காலை கட் செய்துவிட்டு அனிதாவுக்கு போன் செய்தான்
நான்கைந்து ரிங்கில் எடுத்த அனிதா “ சொல்லுங்கண்ணா” என்றாள்

“ மான்சி எங்கபோனா? இன்னிக்கு மில்லுக்கும் வரலை அவ செல்லுக்கு கால் பண்ணா சுவிட்ச் ஆப்னு வருது, என்னாச்சு நீ அவளை பார்த்தியா?” என்றான் முடிந்தவரை பதட்டத்தை அடக்கிக்கொண்டு

“ இல்லையேண்ணா, நாங்க எல்லாரும் திருநள்ளாறு சனிபகவான் கோயிலுக்கு வந்திருக்கோம் அண்ணா,, உங்களுக்கு சனிதிசை விலகுறதால ஏதோ சாங்கியம் செய்யனும்னு ஜாதகத்தில் சொன்னாங்கலாம் அதுக்காக வந்திருக்கோம், நான் காலையிலேர்ந்து இப்பத்தான் போனையே ஆன் பண்றேன், எனக்கு தெரியலையேண்ணா ” என்று அனிதாவும் பதட்டமாக கூற

“ ம்க்கும் சனீஸ்வரன் கோயிலுக்கு போனீங்களா, அதுதான் இப்போ ரொம்ப முக்கியம்” என்று முனங்கிய வாறு போனை கட் செய்துவிட்டு சட்டையை மாட்டிக்கொண்டு உடனே மான்சியை தேடி கிளம்பினான்

காரில் போகும்போது கார்த்திக் ,, அனிதா இருவரும் மாற்றி மாற்றி போன்செய்ய சத்யன் எரிச்சலுடன் கட் செய்தான், காலையிலேருந்து ஒருத்திய காணும் என்னாச்சு தெரிஞ்சுக்கலை இப்போ மாத்தி மாத்தி போன் மட்டும் பண்ணத் தெரியுது,, என்று ஆத்திரமாய் முனங்கினான்



மான்சியை காணும் வரை தன்னுடைய உயிர் தனக்கில்லை என்பதுபோல் காரை ஓட்டினான்,

” உன்னைப் பார்த்து நிலவென்றேன் “

” உன்னை நினைத்து தினமும் நான்தான் தேய்கிறேன்!

” உன்னை வாடாத மலரென்றேன் ” 

” உன்னை நினைத்து நித்தமும் நான்தான் வாடுகிறேன்!

” உனது குரல் யாழிசை என்றேன்”

” உன்னைப் பார்த்தாலே நான் பேசும் சக்தியை இழந்துவிடுகிறேன்!

” உனது நடை அன்னம்போல் அழகு நடை என்றேன்”

” உன்னை கண்டதும் என் கால்கள் புயலாகிறது!

” ஓ,, மொழி புரியா என் மௌனக் கவிதையே…

” என் ஆக்கமும் நீதான், என் ஏக்கமும் நீதான்! 

Leave a Comment

Ads Blocker Image Powered by Code Help Pro

Ads Blocker Detected!!!

We have detected that you are using extensions to block ads. Please support us by disabling these ads blocker.

Powered By
Best Wordpress Adblock Detecting Plugin | CHP Adblock
error: read more !!