மனசுக்குள் நீ – பாகம் 46

யோசனையாய் மான்சியை பார்த்த பாட்டி கையை நீட்டி அவளை அழைக்க, மான்சி புன்னகையுடன் அவர் கையைப் பற்றிக்கொண்டாள்,, பாட்டி அவளை தன்னருகில் உட்கார வைத்துக்கொண்டு “ சத்யா இவளை எனக்கு முன்னாடியே தெரியும், ஆனா ஆளை இப்பத்தான் நேரில் பார்க்கிறேன்,,

அனிதா ஒருமுறை செல்போனில் படம் எடுத்து எனக்கு காட்டினா,, அனிதா என்கிட்ட சொல்லிட்டு தான் உன்கிட்ட வந்து இவளுக்கு வேலைக்கு கேட்டா, ஆனா நீ இவ்வளவு சீக்கிரமே அதுவும் இந்த நேரத்துல கூட்டிட்டு வருவேன்னு எதிர்பார்க்கலை, என்னாச்சு இந்த நேரத்துல கூட்டி வந்துருக்க?, இந்த மாதிரி தேவதையை யாராவது பிடிக்கலைன்னு சொல்வாங்களா? ” என்று கூறிய பாட்டி மான்சியை தோளொடு அணைத்துக்கொண்டார்



“ அடடா எல்லாம் முன்னேற்பாடாக தான் நடக்குதா, இதெல்லாம் எனக்குத் தெரியாம போச்சே” என்று அங்கலாய்த்த சத்யன் மான்சியின் தற்போதைய நிலையை கூறி அதனால்தான் இந்தநேரத்தில் அழைத்து வரும்படி நேர்ந்ததாக சொன்னான்

எல்லாவற்றையும் கவனமாக கேட்ட பாட்டி “ இப்ப என்ன செய்யலாம்னு நெனைக்கிற சத்யா?” என்று கேட்க

தன் மேவாயை தேய்த்தபடி சிறிதுநேரம் யோசித்த சத்யன் “ பாட்டி இனிமேல் யோசிக்க என்ன இருக்கு, முடிவு பண்ணவேண்டியது தான், இன்னிக்கு ஒருநாளே என்னால தாங்கமுடியலை ஒரே தவிப்பா ஆயிருச்சு, இனிமேல் இவளை தனியா விடமுடியாது,, அதனால நான் ஒரு முடிவு பண்ணியிருக்கேன் பாட்டி,, இன்னிக்கு நைட் மான்சி உங்க ரூம்ல தங்கட்டும், நாளைக்கு காலையில அவளை கூட்டிக்கிட்டு நீங்க அவளோட ஊருக்கு கார்ல போங்க,, அவங்க வீட்டு பெரியவங்க கிட்ட பேசி அடுத்த சில நாட்கள்லயே கல்யாணத்துக்கு ஏற்பாடு பண்ணுங்க, உங்க கூட கார்த்திக்கையும், நம்ம சீப் மெக்கானிக் பரந்தாமன் அண்ணனையும் அனுப்புறேன், அதோட நம்ம டிரைவர் ரத்னமும் இருப்பார், அதனால யாராலையும் எந்த பிரச்சனையும் வராது,, நீங்க பேசி முடிவு பண்ணவேண்டியதுதான் பாட்டி,, என் முடிவு சரியா?” என்று கேட்க..

“ எல்லாம் சரிப்பா, ஆனா கல்யாணத்தை எப்படி இன்னும் சில நாள்லயே வைக்க முடியும் நீ எங்களுக்கு ஒரே ஆண் வாரிசு அதனால உன் கல்யாணத்தை விமரிசையா பண்ணனும்னு ஆசையிருக்காதா எனக்கு?’ என்று சத்யனிடம் கேட்டார்

“ இல்ல பாட்டி மான்சிக்கு இருக்குற பிரச்சனைகள்ல நாளை தள்ளினா வேலை ஆகாது பிரச்சனை தான் வரும், கல்யாணத்தை சிம்பிளாக ஏதாவது கோயில்ல பண்ணிரலாம்,, அப்புறமா மேரேஜ் பத்தி நியூஸ்பேப்பர்ல விளம்பரம் கொடுத்து ஏதாவது ஹோட்டல்ல ரிசப்ஷன் வச்சுரலாம் அதுதான் சரியா வரும், எது எப்படியானாலும் கல்யாணம் சீக்கிரம் முடியனும், நீங்க போய் பேசுங்க அப்புறமா நான் வர்றேன் ” என்றான் சத்யன் ,தீர்மானமாக



பாட்டியும் பேரனும் கல்யாணத்தை பற்றி தீவிரமாகப் பேசிக்கொண்டு இருக்க,, அது சம்மந்தப்பட்ட மான்சிக்கு யோசனைகள் வேறு மாதிரி போனது,, சத்யன் தன்னிடம் ஆலோசிக்காமலேயே கல்யாணத்தை அறிவித்தது சிறிது கோபம் வந்தாலும்,, அவனுடைய அந்த உரிமையும் ஆளுமையும் மான்சியை பெரிதும் கவர்ந்தது,, இப்போது தனக்கிருக்கும் பிரச்சனைக்கு கல்யாணம் தான் சிறந்த தீர்வு என்றாலும்கூட, சத்யனை அவன் குடும்பத்தில் கொண்டு சேர்க்கவேண்டும் என்ற தனது கொள்கையில் எந்த முன்னேற்றமும் இல்லாமல் அப்படியே இருப்பது அவளுக்கு குழப்பமாக இருந்தது, என்ன செய்வது என்று யோசித்தவளுக்கு ரஞ்சனா கூறிய ஒரு வார்த்தை சட்டென்று ஞாபகத்திற்கு வந்தது,, “ ஆனா காதலுக்கு இருக்கும் சக்தியைவிட,, கல்யாண வாழ்க்கைக்கு சக்தி அதிகம்” இந்த வார்த்தைகள் அவள் மனதில் ஓடியது, ஒரு காதலியா இருந்து போராடுவதை விட அவன் மனைவி என்ற ஸ்தானத்தில் அவனில் பாதியாகி அதன்பிறகு குடும்பத்தோடு சேர்க்க முழுமூச்சாக செயல்பட வேண்டும் என்று எண்ணியவளை பாட்டியின் குரல் கலைத்தது

“ என்னப் பாட்டி கேட்டீங்க” என்றாள் சிதறிய கவனத்துடன்

“ இல்லம்மா சத்யன் சொல்றது எனக்கும் சரியாப்படுது,, நீ என்ன சொல்றம்மா” என்று பாட்டி கேட்டார்,, அவருக்கும் வேதாளம் மறுபடியும் முருங்கை மரம் ஏறுவதற்குள் கல்யாணத்தை முடிக்கவேண்டும் என்று நினைத்தார்,, புதிதாக ஏதாவது பிரச்சனை வந்து கல்யாணம் தடைப் படக்கூடாது என்று அவர்கள் குலதெய்வம் மாகாளி அம்மனை வேண்டிக்கொண்டார்

மான்சி மாற்று யோசனை எதுவுமின்றி “ அவர் இஷ்டப்படி செய்ங்க பாட்டி எனக்கும் சம்மதம்தான்” என்று வெட்கத்துடன் ஒரே வார்த்தையில் முடித்தாள்

சத்யன் அவளை ஆச்சர்யத்துடன் பார்த்தான்,, பிடிவாதம் எல்லாம் போச்சா,, யப்பா நிம்மதிடா கடவுளே,, என்று மனதில் எண்ணியவன் “ சரி உன் அண்ணனோட நம்பர் குடு நான் அவருக்கு தகவல் சொல்லி ஊருக்கு வரச்சொல்றேன்” என்று கேட்டான்,

அடுத்த சில நிமிடங்களில் ஜெகனுக்கு போன் செய்து,, மொத்த விபரங்களையும் கூறி நாளை ஊருக்கு கிளம்பி வருமாறு சத்யன் கூறினான்



ஜெகனுக்கு ரொம்ப சந்தோஷமாகிவிட்டது,, தனது குரலில் உற்சாகத்துடன் “ நான் உடனே லீவு போட்டுட்டு வந்துர்றேன் சார்” என்றவன், உடனே திருத்தி “ வந்துர்றேன் மாப்பிள்ளை” என்று கூறிவிட்டு வைத்தான்

அதன்பிறகு கார்த்திக்கு போன் செய்து விவரங்களை கூறிவிட்டு, நாளை பாட்டியுடன் மான்சியின் ஊருக்கு போகுமாறு கேட்டுக்கொண்டான்
கார்த்திக் இப்போதே கிளம்பி வரவா என்றான்,, அவனுக்கு லைன் க்ளியர் ஆகிவிட்ட உற்சாகம்,, சத்யன் சிரித்துவிட்டு “ நாளைக்கு காலையில வாடா, போதும்” என்றான்,

அதன்பின் சீப் மெக்கானிக் பரந்தாமனுக்கு போன் செய்தான்,, அவர் சத்யன் மில்லில் வேலை செய்தாலும் குடும்பத்தில் நீண்டகால நண்பர்,, தனது பேச்சால் எதையும் சமாளிக்க வல்லவர்,, அதனால்தான் சத்யன் அவரை தேர்ந்தெடுத்தான்
அவருக்கும் சொல்லி எல்லா ஏற்பாடுகளையும் சரிவர முடித்தான் சத்யன்
ஆனால் பாட்டி யோசனையுடன் இருப்பதைப் பார்த்து “ என்ன பாட்டி யோசனை” என்றான்

அவனை ஏறிட்ட பாட்டி “ எல்லாம் சரிப்பா, ஆனா மாப்பிள்ளையோட அப்பா அம்மா வராம நீங்க வந்து பெண் கேட்கிறீர்களேன்னு மான்சி வீட்டுல கேட்டா என்ன பதில் சொல்றது?” என்று கூறிவிட்டு கேள்வியாக அவனை பார்த்தார்

அவ்வளவு நேரம் முகத்தில் இருந்த சந்தோஷம் பட்டென்று வடிய விரைத்து நிமிர்ந்தான் சத்யன் “ அம்மா காலமாகி பதினைஞ்சு வருஷம் ஆச்சுன்னு சொல்லுங்க, அப்பாவுக்கு மாரடைப்பு வந்த காரணத்தால் டிராவல் பண்ண முடியாதுன்னு சொல்லுங்க,, மத்தவங்களை பத்தின விவரத்தை நீங்களே சொல்லிடுங்க,, அதன்பின் எதுவும் கேட்கமாட்டாங்க, அப்படியே கேட்டா நான் வந்து பேசுறேன்” என்று கூறிவிட்டு வேகமாக அறையை விட்டு வெளியே போனான்



பாட்டி மான்சியிடம் “ பாரும்மா எவ்வளவு கோபம் வருதுன்னு,, சரி நீ போய் எவனை சாப்பிட கூப்பிடு,, அவன் இன்னும் சாப்பிடலை, நீயும் அவன் கூட சாப்பிட்டு இங்க வந்து படுத்துக்கோ” என்று கூறி மான்சியை சத்யன் அறைக்கு அனுப்பி வைத்தார்

இவ்வளவு கோபத்தோடு போகிறவனை எப்படி சமாதானம் செய்து சாப்பிட அழைத்து வருவது என்ற யோசனையுடன் சத்யனின் அறையை நோக்கி போனாள் மான்சி

Leave a Comment

Ads Blocker Image Powered by Code Help Pro

Ads Blocker Detected!!!

We have detected that you are using extensions to block ads. Please support us by disabling these ads blocker.

Powered By
Best Wordpress Adblock Detecting Plugin | CHP Adblock
error: read more !!