மான்சிக்காக – பாகம் 46 – மான்சி கதைகள்

FB_IMG_1466872639775சத்யனுக்கு வெகுநேரம் உறக்கம் வரவில்லை… நேற்றைய இரவின் இனிமையான நினைவுகள் மனதை ஆக்கிரமித்தது… மான்சியை தூக்கிச்சென்று படுக்கை அறையில் கிடத்தியப் பிறகு அவள் சொன்ன வார்த்தைகளும்..

அவனுக்கு தன்னையே முழுதாக அர்ப்பணித்து கொடுத்த ஒத்துழைப்பும் ஞாபகத்திற்கு வந்து மனதுக்குள் ஏக்கத்தை விதைத்தது.. மான்சி தன்மீது இவ்வளவு காதலோடு இருப்பாள் என்று சத்யன் எதிர்பார்க்கவேயில்லை.. தனது புத்தம்புது மனைவியோடு நேற்று இரவு உறவாடிவிட்டு..



இன்று மருத்துவமனையில் கிடத்திவிட்டோமே என்று ஏங்கினான்.. மான்சியைப் பற்றி நினைக்கையிலேயே சத்யனுக்கு இன்னொன்றும் ஞாபகம் வந்தது.. என்மேல இவ்வளவு காதலோடு இருக்கிறவ.. இந்த வெட்டு என்மேல விழுந்திருந்தா எப்படித் தாங்கிருப்பா? அதுக்கப்புறம் அவ இருந்திருக்கவே மாட்டா போலருக்கே? இதை நினைக்கும்போதே சத்யன் வயிற்றில் கிலிப் பிடித்தது..

அவன் வாய் அவனயுமறியாமல் “ மான்சி” என்று ஏக்கத்தோடு அழைத்தது… சற்றுநேரத்தில் மான்சியைப் பற்றிய சிந்தனைகளுடனேயே தூங்கிப் போனான் வராண்டாவின் ஓரம் நின்று எல்லாவற்றையும் கேட்டுக்கொண்டிருந்த வீரேன் மனம் மேலும் நொந்தது …

‘ தேவனும் செல்வியும் விரும்புறது தெரியாம வெட்டியா தகராறு பண்ணி தங்கச்சிக்கே இவ்வளவு பெரிய வினையை தேடி வச்சிட்டமே’ என்று தன்னையே நொந்துகொண்டான்… மான்சி மேல இவ்வளவு அன்பு வச்சிருக்கிறவரு அவளை வெளிநாடு அனுப்ப ஏற்பாடு பண்ணதுக்கும் ஏதாவது காரணம் இருக்கும்…என்று அவனது தெளிந்த மனது இப்போது காரணம் சொன்னது…



என்ன விவரம்னு புரியாம முன் கோபத்தில்செய்த தவறு வீரேனை நெருப்பில் குளிக்க வைத்து புடம்போட்டிருந்தது… யோசனையுடன் ஐசியூ வார்டுக்குள் நுழைந்து ஜோயலின் கேபின் உள்ளேப் போனான்… மேசையில் தலை கவிழ்ந்து கண்மூடியிருந்த ஜோயல் சத்தம் கேட்டு நிமிர்ந்து அமர்ந்து

“ சாப்பிட்டீங்களா?” என்று புன்னைகையுடன் கேட்டாள்.. இவங்க ஏன் என்னை சாப்பிட வைக்கிறதுலேயே குறியா இருக்காங்க? என்ற கேள்வி மனதில் ஓட “ ம் சாப்பிட்டேங்க…. நான் போய் என் தங்கச்சிய பார்த்துட்டு வரவா டாக்டர்? ” என்று ஜோயலிடம் அனுமதி கேட்டான் வீரேன்..

“ ம் வாங்க போகலாம்” என்று ஜோயலும் உடன் வந்தாள்.. மான்சி அமைதியாக உறங்கிக்கொண்டிருந்தாள்… ஜோயல் மான்சியை முறையான பரிசோதனைக்களுக்குப் பிறகு.. இறங்கும் சலைனின் வேகத்தை குறைத்துவிட்டு . போகலாம் என்பது போல் வீரேனைப் பார்த்து ஜாடை செய்தாள்… வீரேன் தங்கையின் காயத்தையேப் பார்த்துக்கொண்டிருந்தான்…

பூபோல இருந்த உடம்புல இப்படி அடையாளம் வச்சிட்டேனே.. என்று குமுறியது அவன் மனது… “ ம் வாங்க சார் ப்ளீஸ்” ஜோயல் மறுபடியும் சொன்னதும் அங்கிருந்து அகன்றான்.. ஜோயலின் கேபின் உள்ளே போய் இருவரும் அமர்ந்ததும் “ இனிமே என் தங்கச்சிக்கு எந்த ஆபத்தும் இல்லையே டாக்டர்?” என்று கேட்டவனைப் புன்னகையுடன் பார்த்த ஜோயல்



“ இனிமேல் எந்த ஆபத்தும் இல்லை…. ஆனா …. வெட்டு இரண்டு அங்குலம் மேலே விழுந்திருந்தா மூளைக்கு ரத்தம் எடுத்துச்செல்லும் நரம்பு அறுந்து உடனடியா உயிரிழப்பு ஏற்ப்பட்டிருக்கும்.. நல்லவேளை அந்த ஆண்டவன் உங்க தங்கையை காப்பாத்திட்டார்” என்று ஜோயல் சொன்னதும்..வீரேன் காதுகளைப் பொத்திக்கொண்டு “ அய்யோ சொல்லாதீங்க டாக்டர்” என்று கண்களில் நீர் வழிய கெஞ்சினான்.. அவன் வேதனையைப் பார்த்து ‘ஏன்டா சொன்னோம்’ என்றானது ஜோயலுக்கு..

அவன் கவனத்தை திசைதிருப்பும் நோக்கத்துடன் “ சரி விடுங்க நடந்ததைப் பத்தி யோசிக்க வேண்டாம்… ஆமா உங்க மாமாவும் தங்கச்சியும் லவ் மேரேஜா? இவ்வளவு அபெக்ஷ்சனோட ஒரு ஜோடியை நான் பார்க்குறது இதுதான் பர்ஸ்ட் டைம்…

அதனால்தான் கேட்டேன்.. நீங்க தப்பா எடுத்துங்காதீங்க சார்” என்றாள் ஜோயல் பார்த்து சிலமணிநேரத்திலேயே இவங்க புரிஞ்சிக்கிட்ட அளவுக்கு என் தங்கச்சியையும் மாமாவையும் நான் புரிஞ்சுக்கலையே? என்ற வருத்ததுடன் “ இல்லங்க திடீர்னு ஏற்பாடு பண்ண கல்யாணம் தான்… ஆனா எனக்குகூட இப்ப நீங்க சொன்ன மாதிரிதான் தோனுதுங்க…

ரெண்டு பேரும் ஒருத்தரையொருத்தர் காதலிச்சு தான் ஒன்னா சேர்ந்திருப்பாங்களோன்னு தோனுதுங்க” என்று ஜோயலை மேலும் குழப்பினான் வீரேன்.. “ ப்ளீஸ் சார் கொஞ்சம் விவரமா சொல்லுங்களேன்.. அவரு என்னடான்னா என்னோட முதல் மனைவி இறந்தப்பன்னு உங்க தங்கச்சிகிட்ட சொல்றாரு.. அப்போ மான்சி அவருக்கு செகன்ட் ஒய்ப்பா?” என்று தனது இரண்டாவது கேள்வியை கேட்டாள்.. பழகிய கொஞ்சநேரத்தில் ஜோயலின் கருணையும் அன்பும் அவளை ஒரு உறவுக்காரியைப் போல் எண்ணவைத்தது வீரேனை…



இவளிடம் தனது குடும்பத்தைப் பற்றி சொல்வதில் தப்பில்லை என்ற முடிவுடன் “ சொல்றேங்க… ஆனா மொதல்ல என்னை சார் போட்டு கூப்பிடுறதை நிறுத்துங்க.. என் பேரு வீரேந்திரன்.. எல்லாரும் வீரேன்னு கூப்பிடுவாங்க… என் தங்கச்சி மட்டும் வீரண்ணா ன்னு கூப்பிடும்” என்றவன்… பிறகு இரண்டு குடும்பத்தின் ஆரம்பத்தில் இருந்து ஆரம்பித்து… சத்யன் மான்சியை கிணற்றில் இருந்து காப்பாற்றி உறவுகொண்டது.. சத்யன் ஜெயிலுக்குப் போனது..

அதன்பின் மான்சி கர்ப்பம் ஆனது… அவசரமாக இருவருக்கும் திருமணம் நடந்தது வரை எல்லாவற்றையும் தெளிவாக சொன்னான் வீரேன்… ஜோயல் கொஞ்சநேரம் எதுவுமே பேசவில்லை திகைப்புடன் அப்படியே அமர்ந்திருந்தாள்… திகைப்பு களைந்தபோது அவள் கேட்ட முதல் கேள்வி “ என்னது மான்சிக்கும் சத்யன் சாருக்கும் பதினேழு வயசு வித்தியாசமா? சத்யன் சார்க்கு பேத்தி இருக்கா? அய்யோ என்னால நம்பவே முடியலை வீரேன்?” என்று கண்களை விரித்தாள்..

எந்த ஒப்பனையும் இல்லாத அவள் கண்களின் அழகை கண்டு வியந்து “ அட ஆமாங்க நம்புங்க மேடம்… எங்க மாமா ரொம்ப உழைப்பாளி… எந்த கெட்டப் பழக்கமும் கிடையாது… அதனால எப்பவுமே ட்ரிமா இருப்பார்… நாங்க மூனுபேரும் ஏதாவது வெளியூர் போனா அண்ணன் தம்பிங்கன்னு தான் சொல்லுவாங்க” என்று மாமா புராணத்தை பெருமையாக வாசித்தான்… அவனை கூர்ந்துப் பார்த்த ஜோயல்



“ எல்லாம் சரிதான்… நீங்க சொல்ற ஒரு விஷயத்தை என்னால ஏத்துக்க முடியாது… அதாங்க மான்சியை உங்க மாமா ரேப் பண்ணிட்டாரு என்பதை என்னால ஏத்துக்க முடியாது… ரெண்டு பேர் மனசுலயும் லவ் இல்லாம அது நடக்க வாய்ப்பே இல்லை… இப்போ இவங்களோட அன்யோன்யத்தைப் பார்க்கும் போது அப்படித்தான் எனக்கு தோனுது… இது புரியாம சொந்த மாமான்னு கூட பார்க்காம ஜெயிலுக்கு அனுப்பிருக்கீங்க?

நல்லவேளையா மான்சி வயித்துல குழந்தை வந்ததால அவர் வெளிய வந்து கல்யாணம் நடந்தது.. இல்லேன்னா? ச்சே கிராமத்தில் கூடவா இப்படியெல்லாம் நடக்கும் ” என்று ஜோயல் சொல்ல சொல்ல வீரேன் அமைதியாக இருந்தான்… சற்றுநேரம் கழித்து “ ம் அப்புறம் மீதியை சொல்லுங்க..



உங்க தங்கச்சி கல்யாணம் நின்னதால அந்த மதுரைப் பொண்ணு கூட உங்களுக்கு நிச்சயம் பண்ணதும் நின்னுபோச்சா?” என்று கேட்ட ஜோயலின் குரலில் ஆர்வம் அதிகமிருந்தது..

Leave a Comment

Ads Blocker Image Powered by Code Help Pro

Ads Blocker Detected!!!

We have detected that you are using extensions to block ads. Please support us by disabling these ads blocker.

Powered By
100% Free SEO Tools - Tool Kits PRO
error: read more !!