சுவாதி என் காதலி – பாகம் 49 – தமிழ் காமக்கதைகள்

சுவாதி அவ்வாறு எதனால இப்படி ஒரு கொள்கை வச்சு இருக்கன்னு விக்கி கிட்ட கேட்ட பின் விக்கி பதில் எதுவும் சொல்லமால் அமைதியாக இருந்தான் . அதை பார்த்த சுவாதி என்ன விக்கி எதுவும் தப்பா கேட்ட்டுடேனா

அமைதியா இருக்க என்றாள் .யே அப்படி எல்லாம் ஒன்னும் இல்ல எல்லாம் பழச நினச்சு பாத்து ஒரு மாதிரி ஆகிடுச்சு என்றான் . அப்படி என்ன பழசு என்கிட்ட சொல்லு என்றாள் .அது வந்து வந்து என்று விக்கி சொல்ல தயங்கினான் .அவன் தயங்குவதை பார்த்து புரிந்த கொண்ட சுவாதி சரி விக்கி உனக்கு அத பத்தி சொல்ல பிடிக்காட்டி சொல்ல வேணாம் விட்ரு நான் கம்பெல் பன்னல என்றாள் .



அப்படி இல்ல எனக்கு பழசு எல்லாம் ஞாபகத்துக்கு வந்து அத நினச்சு பாத்து கொஞ்சம் வருத்தமா இருந்துச்சு அதான் அமைதியா இருந்தேன் .பரவல இப்ப நான் சொல்றேன் எனக்கும்அத பத்தி எல்லாம் யார்கிட்டேயாச்சும் சொல்லணும் பேசணும் போல இருக்கு என்றான் .அப்ப சரி சொல்லு என்றாள் .

சரி சொல்றேன் ஆனா நீ அத யார்கிட்டயும் சொல்ல கூடாது என்றான் .ஓகே யார்கிட்டயும் சொல்ல மாட்டேன் நீ சொல்லு என்றாள் .விக்கி மூச்சை நன்கு வெளியிட்டு விட்டு காதல் தான் எல்லாருக்கும் அவங்க லைப்ப மாத்துறது என் லைப்பும் அப்படி ஒரு ரெண்டு காதல்ல தான் மாறுச்சு என்றான் .

ம்ம் சரி சொல்லு என்றாள் . நான் காலேஜ்ல ug படிக்கும் போது உமான்னு ஒரு பொண்ண காதலிச்சென் .ரெண்டு பேரும் படத்துல சொல்ற மாதிரி உயிருக்கு உயிரா காதலிச்சோம் .ug படிப்பு முடிஞ்ச உடனே அவங்க வீட்ல அவங்களுக்கு மாப்பிளை பாத்தாங்க . எங்க ரெண்டு பேருக்கும் என்ன பண்றதுன்னே தெரியல .



அப்புறம் நான் யோசிச்சு வீட்ல இந்த மாதிரி ஒரு பொண்ண லவ் பண்றேன் கல்யாணம் பண்ணி வைங்க அப்படின்னு கேட்டேன் .எங்க அப்பா எடுத்த உடனே பொண்ணு எந்த சாதின்னு கேட்டார் . நான் இது வரைக்கும் அவ கிட்ட அவ என்ன சாதின்னு கேட்டது இல்ல சரி கேப்போம் அப்படின்னு அவ கிட்ட கேட்டு வந்து சொன்னேன் .

ஆனா எங்க அப்பா என்னாலலாம் அந்த சாதில பொண்ணு எடுத்து இந்த வீட்டுக்கு மருமகளா வர கூடாதுன்னு எங்க அப்பா சொன்னாரு .எனக்கு கோபம் வந்துருச்சு நீங்க ஒன்னும் என் வாழ்க்கைய அமைக்க வேணாம் நானே அமைசுகிறேன் சொல்லி வெளியே வந்துட்டேன். அப்புறம் அவ கிட்ட போயி என்னையே Register marraige பண்ணிக்க சம்மதமான்னு கேட்டேன் .

அவளும் சந்தோசமா சரின்னு சொன்னா ,நான் அவள ஒரு ரெண்டு நாளைக்கு அப்புறம் ஒரு Register ஆபிஸ் கூப்பிட்டு போயி கல்யாணம் பண்ண ரெடி ஆனப்ப அவங்க அப்பாவும் எங்க அப்பாவும் நிறைய ஆளுகள கூப்பிட்டு வந்து எங்க ரெண்டு பேத்தையும் பிரிச்சுட்டாங்க . அப்புறம் அவ வீட்ல அவளுக்கு அவசர கல்யாணம் பண்ணி வச்சுட்டாங்க .

அதுக்கு அப்புறம் எனக்கு இந்த உலகமே நின்னு போன மாதிரி ஆகிடுச்சு அது என் முத லவ் வேறையா அதுனால ரொம்ப என்னத்தையோ இழந்த மாதிரி ஒரு பீலிங் . அதுக்கு அப்பரம் எனக்கு வாழ்கையே இல்லைங்கிற மாதிரி ஆகிடுச்சு அப்ப ஒரு வருஷம் சும்மா வீட்லயே கிடந்தேன் என்ன பண்ணறதுன்னு தெரியாம ,சும்மா தண்ணி அடிக்க கஞ்சா குடிக்கன்னு இருந்தேன் .



எங்க அப்பா கூட பேசுறதையே நிப்பாட்டிட்டேன்.அவரு கூட மட்டும் இல்ல நான் அப்ப யார் கூடயும் பேசல வீட்லயும் பித்து பிடிச்ச மாதிரி இருந்தேன் .அப்புறம் எங்க அம்மா ஒரு நாள் என் கிட்ட வந்து இப்படியே இருக்காதப்பா பேசாம மேல் படிப்பு படி அப்பதான் கொஞ்சம் நல்ல இருக்கும்னு சொன்னங்க . நான் ஒரு change இருக்கட்டுமேன்னு கோயம்புத்தூர்ல ஒரு காலேஜ்ல pg செந்தேன் .

அங்க போனதுக்கு அப்புறமும் நான் பழைய மாதிரிதான் இருந்தேன் . யார் கூடயும் சேராம யார் கூடயும் பேசாம ஒரு பைத்தியம் மாதிரிதான் இருந்தேன் .அப்ப ஒருத்தி வந்தா என் வாழ்க்கைல அவதான் இப்ப நான் இப்படி இருக்க நிலைமைக்கு காரணம் என்றான் . யார் அவ அப்படி என்ன பண்ணா என கேட்டாள் சுவாதி .அவ பேரு லதா அவள வந்து என் கிட்ட பேசுனா நல்லா பழகுனா எனக்கு ஆறுதல் சொன்னா

இன்னும் சொல்ல போனா சூர்ய வம்சம் தேவயாணி மாதிரி ரொம்ப தன்னம்பிக்கை கொடுக்குற மாதிரி பேசுனா இன்னும் சொல்ல போனா அவ கொடுத்த தன்னம்பிக்கைல நான் அப்ப நடந்த செமஸ்டர்ல நல்ல மார்க்ஸ் எடுத்தேன்னே பாத்துகோயேன் என்றான் விக்கி . ம்ம் Intersting அப்புறம் என்ன ஆச்சு என்று ஆர்வமாக கேட்டாள் சுவாதி .



நானும் உமாவோட நினைப்ப மறக்கணும்னு லதா மேல எனக்கு ஒரு காதல் வந்துச்சு என்றான் .ஒ ரெண்டாவது லவ்வா என்றாள் சுவாதி .ஆமா என்றான் விக்கி .அப்புறம் என்ன அவ கிட்ட உன் லவ சொன்னியா என்றாள் சுவாதி .

Leave a Comment

Ads Blocker Image Powered by Code Help Pro

Ads Blocker Detected!!!

We have detected that you are using extensions to block ads. Please support us by disabling these ads blocker.

Powered By
100% Free SEO Tools - Tool Kits PRO
error: read more !!