மனசுக்குள் நீ – பாகம் 41

பலத்த சிந்தனையுடன் தனது மேவாயை தேய்த்தவர் “ ஏனம்மா மான்சி உன் அத்தை சொன்னது எல்லாம் உனக்கு புரிஞ்சுதா” என்றார்

ம்’ என்று தலையசைத்தாள் மான்சி,,

“ அப்ப சரி, நீ எனக்கு ஒரு வாக்கு குடுக்கனுமே மான்சி” என்றார் மான்சியை கூர்ந்து பார்த்து 

மான்சி குழப்பத்துடன் நிமிர்ந்து கிருபாவை பார்த்தாள்,, ரஞ்சனாவும் குழப்பத்தோடு அவர் முகத்தை பார்த்தாள்,, “ மான்சி என்னங்க வாக்கு குடுக்கனும்” என்று ரஞ்சனா கேட்டாள்



“ ம்ம் சொல்றேன் இரு” என்றவர் மான்சியிடம் திரும்பி “ மான்சி இப்போ உனக்கு சொன்ன விஷயங்கள் அத்தனையையும் இங்கயே மறந்துடனும்,, எக்காரணத்தைக் கொண்டும் வெளியே யாருக்கும் தெரியக்கூடாது,, சத்யன் உள்படத்தான் சொல்கிறேன்,, இதை நீ எனக்கு சத்தியமா பண்ணிக்குடுக்கனும் ” என்று கிருபா அவளை நோக்கி கையை நீட்டினார்

நீட்டிய அவர் கையை எட்டிப்பிடித்த ரஞ்சனா “ என்னங்க இது இப்பத்தான் ஒரு வழி கிடைச்சது அதையும் அடைக்கப் பார்க்குறீங்களே,, சத்யன் கிட்டே இதெல்லாம் சொல்லாம அவன் எப்படி இங்கே வர்றது,, மான்சிக்கும் அவனுக்கும் எப்படி கல்யாணத்தை நடத்துறது” என சிறு கோபத்துடன் கேட்டாள்

அவளிடமிருந்து கையை உருவிக்கொண்ட கிருபா “ என்ன ரஞ்சனா புரியாம பேசுற,, இப்போ மான்சி போய் சத்யன் கிட்ட அனிதாவைப் பத்தி சொன்னாதான் அவன் நம்மகிட்ட வருவான்னா அப்படிப்பட்ட மகனே எனக்கு வேண்டாம்,, என்னைப்பொறுத்தவரை அனிதா என் மகதான் அவளை முன்நிறுத்தி எந்த வரவும் எனக்கு வேண்டாம்,, சத்யனுக்கு உண்மை தெரிஞ்சா அனிதாவை ஒதுக்க மாட்டான்தான்,, ஏன்னா அவன் என் மகன் அதுபோன்ற ஈனப்பிறவி அவன் கிடையாது,, ஆனா பெத்த தகப்பனையே ஒதுக்கிட்டானே அதை நெனைச்சாத்தான் எனக்கு பயமாயிருக்கு,, அதனால்தான் சொல்றேன் அனிதாவை பற்றிய விஷயங்களை சொல்லித்தான் என் மகன் என்கிட்ட வரனும்னா அது தேவையில்லை,, எப்படியிருந்தாலும் நான் செத்தா கொல்லிபோட அவன் வந்துதான் ஆகனும் அவன் வராட்டாலும் இந்த சமூகம் அவனை இழுத்து வரும், அப்படியும் வரலைன்னா என் மகளுங்க மூனுபேரும் எனக்கு கொல்லி போடட்டும் அது போதும் எனக்கு” என்று ஆவேசமாக பேசிய கிருபா மான்சியிடம் திரும்பி “ நீ இதுக்கு என்னம்மா பதில் சொல்ற” என்று அதே ஆவேசத்தோடு கேட்க



மான்சி முகத்தில் புதிதாய் தோன்றிய பிரகாசத்துடன் “ நீங்க கையை கொடுங்க அங்கிள் நான் ப்ராமிஸ் பண்றேன்,, அனிதாவோட வாழ்க்கையை தோலுரிச்சாதான் எனக்கு வாழ்க்கை கிடைக்கும்னா அப்படிப்பட்ட வாழ்க்கையே எனக்கு வேண்டாம்,, நான் உங்களோடு மருமகள் மாமா எப்பவும் உங்கப் பின்னாடி தான் இருப்பேன்” என்று ஆர்வத்துடன் பேசிய மான்சி எட்டி கிருபாவின் கையைப் பற்றி அதில் தனது கையை அடித்து “ நான் செத்தாலும் இந்த உண்மை வெளியே வராது மாமா” என்றாள்

கிருபா உணர்ச்சி வசப்பட்டு அவள் கையை எடுத்து தனது கண்களில் ஒற்றிக்கொண்டார்

இருவரையும் பார்த்து ரஞ்சனா தலையிலடித்துக் கொண்டு “ அய்யோ அனிதாவைப் பத்தி தெரிஞ்சாதான் என்ன,, நான் தரங்கெட்டவளா சத்யன் கண்களுக்கு தெரிவேன்,, பரவாயில்லை தெரிஞ்சுட்டு போகட்டும், அதுக்காக சத்யன் வர்றதுக்கு இருந்த ஒரு சான்சையும் கெடுத்துட்டீங்களே,, எனக்கு என் பிள்ளை வீடுவந்து சேரனும்,, அவன் அம்மா வாழ்ந்த இந்த வீட்டுல அவன் மனைவியோட சேர்ந்து வாழ்ந்து நிறைய பிள்ளைகள் பெறனும்,, அதுதான் எனக்கு வேனும் ” என்ற ரஞ்சனா கண்ணில் வழிந்த கண்ணீரை புறங்கையால் துடைத்துவிட்டு “ இப்போ நானே போய் சத்யன் கிட்ட உண்மையை சொன்னா என்னப் பண்ணுவீங்க” என்று ஆத்திரமாய் கேட்க..

“ ஏய் ரஞ்சி” என்று கத்திய கிருபா கண்ணிமைக்கும் நேரத்தில் பளாரென்று ரஞ்சனாவை அறைந்துவிட,,, ஏற்கனவே ஒற்றை நாடியான தேகமுள்ள ரஞ்சனா அவர் அறைந்த வேகத்தில் சோபாவில் தொப்பென்று விழுந்தாள்
மான்சி திகைத்துப்போய் நிற்க,, ரஞ்சனா கன்னத்தை பிடித்துக்கொண்டு கிருபாவை மிரள மிரள பார்த்தாள்



அவளை அப்படி பார்த்ததும் கிருபாவுக்கு தன் கையை வெட்டி எறியலாம் போல ஆத்திரமாக வர வேகமாய் வந்து ரஞ்சனா பக்கத்தில் அமர்ந்து அவளை அணைத்து “ மன்னிச்சுடு கண்மணி,, நான் தெரியாம அடிச்சிட்டேன்” என்று குரல் கரகரக்க மன்னிப்பு கேட்க

ரஞ்சனா அழுகையுடன் அவர் மார்பில் சாய்ந்துகொண்டாள்

அவள் கூந்தலை கோதியவர் “ பின்னே நீயே சொல்லு ஏதாவதொரு சந்தர்பத்தில் அனிதாவுக்கு உண்மை தெரிஞ்சா அவள் தாங்குவாளா,, நிச்சயம் உயிரையே விட்டுடுவா,, ஒரு மகன் வரவழைக்க மகளை இழக்க முடியுமா ரஞ்சிம்மா,, அனிதா என் உயிர்டி, என் மகளை இழந்து நான் வாழுவேனா,, அப்புறம் நான் இல்லாமல் நீ இருப்பியா,, அதன் பிறகு இருக்கும் மற்ற ரெண்டு பேரையும் நெனைச்சுப் பாரு,, மொத்த குடும்பமும் சிதைஞ்சு போய்டும்,, இப்போ சொல்லு சத்யன் ஒருத்தனுக்காக எத்தனை இழப்புகள் பார்த்தியா, வேண்டாம்மா அவன் அங்கேயே இருக்கட்டும் தூரத்தில் இருந்தே நம்ம மகனை பார்த்து ரசிக்கலாம், அதுதான் நம்ம விதி” என்ற கிருபா தன் நெஞ்சில் இருந்த ரஞ்சனாவின் முகத்தை உயர்த்தி நெற்றியில் முத்தமிட்டார்

அதுவரை அவர்களின் உரையாடல்களை கண்கலங்க கேட்டுக் கொண்டிருந்த மான்சி, கிருபா ரஞ்சனாவை முத்தமிட்டதும் என்ன செய்வது என்று புரியவில்லை, இப்போ வெளியே போவதா?, அல்லது திரும்பி நிற்பதா? என்று புரியாமல் சில வினாடிகள் குழம்பியவள் சட்டென்று குறும்புடன் “ மாமா நான் வேனா கொஞ்ச நேரம் கண்ணை மூடிக்கட்டுமா?” என்று கேட்க



அவள் அங்கே இருப்பதை உணர்ந்து ரஞ்சனா வெட்கத்துடன் கிருபாவிடம் இருந்து விலக… அவளை விலகவிடாமல் பற்றியிருந்த கிருபா “ ஏய் வாலு நீ இன்னுமா இங்கருந்து போகலை?, விடு ஜீட்” என்று அவளை அடிப்பதுபோல கைநீட்டியவாறு கூற..

“ அய்யோ மாமா இதோ ஓடிட்டேன்” என்றவள் சில்லரைகளை இறைத்தது போல பட்டாசாய் சிரித்து அங்கிருந்து ஓடினாள் மான்சி,

Leave a Comment

Ads Blocker Image Powered by Code Help Pro

Ads Blocker Detected!!!

We have detected that you are using extensions to block ads. Please support us by disabling these ads blocker.

Powered By
Best Wordpress Adblock Detecting Plugin | CHP Adblock
error: read more !!