மனசுக்குள் நீ – பாகம் 06 – மான்சி தொடர் கதைகள்

அவன் தன் முகத்தையே உற்று பார்த்தது மான்சிக்கு சங்கோஜமாக இருந்தது,, மெல்ல தலைகுனிந்து “ சார் நான் கிளம்பட்டுமா?” என்றாள் மெல்ல

‘ச்சே இப்படி நாகரீகமற்று அவளை வெறிக்கிறோமே என்று எண்ணி “ மான்சி நான் உங்ககிட்ட ஒரு மன்னிப்பு கேட்கனும் அதற்காகத்தான் வரச்சொன்னேன்” என்றான் சத்யன் தலைகவிழ்ந்து



மான்சியின் முகத்தில் குழப்பம் வந்து சட்டென்று அமர “ என்கிட்ட மன்னிப்பா,, ஏன் சார், என்னாச்சு” என்று திகைப்பும் குழப்பமுமாக மான்சி கேட்டால்

சத்யன் சிறிதுநேரம் எதுவுமே பேசாமல் அமைதியா இருந்தான்,, பிறகு ஒரு முடிவுக்கு வந்தவனாக நிமிர்ந்து அவள் முகத்தை நேரடியாக பார்த்து “ மான்சி நான் இயல்பிலேயே முதல் பார்வையில் ஒரு பெண்னை தவறாக நினைப்பவன் இல்லை,, ஆனால் உங்களை ஏன் அப்படி நெனைச்சேன்னு எனக்கே தெரியலை,, உங்களை காலையில ஆபிஸ்ல பார்க்கறதுக்கு முன்னாடியே விடியற்காலம் ரயில்வே ஸ்டேஷனில் பார்த்தேன்,, உங்ககூட இருந்தது உங்க அண்ணண் என்று தெரியாம,, வீட்டை வீட்டு ஓடி வந்த காதல் ஜோடின்னு தப்பா நெனைச்சுட்டுடேன்,, உங்க ரெண்டு பேரோட நடவடிக்கையும் என்னை தப்பா நெனைக்க வச்சது,, ஆனா அவர் உங்க அண்ணன்னு அனிதா சொன்னதும் எனக்கு ரொம்ப வேதனையா ஆயிருச்சு,, காலையிலேர்ந்து மனசு உறுத்திக்கிட்டே இருந்துச்சு,, அதான் மன்னிப்பு கேட்கனும்னு வரச்சொன்னேன்” என்ற சத்யன் சேரில் இருந்து எழுந்து நின்று தனது கைகளை கூப்பி “ ஒரு அண்ணன் தங்கச்சியை தவறாக நினைச்சதுக்கு என்னை மன்னிச்சுடுங்க மான்சி” என்றான் மெல்லிய குரலில் ஆனால் அதில் ஒரு உறுதி இருந்தது



அவன் எழுந்தாலும் மான்சி எழுந்திருக்கவில்லை,, அவள் முகத்தில் அதிர்ச்சி,, அந்த அதிர்ச்சியை மீறி கண்களில் தாரைத்தாரையாக வழிந்த கண்ணீர்,, சத்யனுக்கு ஏதோ பதில் சொல்ல அவள் உதடுகள் துடித்தன , ஆனால் வார்த்தைகள் வரவில்லை, பதிலாக கண்ணீர் வழிந்தது

தனது வார்த்தைகள் அவளை இவ்வளவு பாதிக்கும் என்று எதிர்பார்க்காத சத்யன்,, திகைப்புடன் அவளை நெருங்கி “ ப்ளீஸ் மான்சி கன்ட்ரோல் யுவர் செல்ப்,, நான்தான் மன்னிப்பு கேட்டுட்டேனே,, ப்ளீஸ் கண்ணை தொடைங்க மான்சி” என்று சங்கடமாக தவிப்புடன் சொன்னாலும் அவளை தொட பயந்து தள்ளி நின்றே சொன்னான் சத்யன்

சிறிதுநேரம் முகத்தை மூடிக்கொண்டு கண்ணீர் விட்ட மான்சி தன்னை ஒருநிலை படுத்திக்கொண்டு தனது கைப்பையைத் திறந்து கைகுட்டையை எடுத்து முகத்தை துடைத்துக்கொண்டு எழுந்தாள்

சத்யன் அவசரமாக மேசையில் இருந்த தண்ணீர் நிறம்பிய கண்ணாடி டம்ளரை எடுத்து அவளிடம் நீட்டினான் “ ப்ளீஸ் கொஞ்சம் தண்ணி குடிங்க மான்சி” என்று கூற

தலையசைத்து மறுத்த மான்சி வெளியே போவதற்காக கதவை நெருங்கினாள்,,
அவள் முன்னே வந்து குறுக்கே நின்ற சத்யன் “ எதுவுமே சொல்லாம போன எப்படி,, நான்தான் மன்னிப்பு கேட்டேனே,, நான் யாரையுமே அப்படி நினைச்சதில்லை,, இந்த மில்லுல மொத்தம் ஐநூற்று இருபது பெண்கள் வேலை செய்றாங்க, இவ்வளவு பேர்கிட்டயும் நான் ஒரு நல்ல நண்பனாய் பெயர் வாங்கியிருக்கேன்,, உன்னை உன் அண்ணனையும் ஏன் அப்படி நெனைச்சேன்னு எனக்கே தெரியலை மான்சி,, ப்ளீஸ் மன்னிச்சுட்டேன்னு ஒரு வார்த்தை சொல்லிட்டு போயேன்” என்று சத்யன் இறைஞ்சினான்



சத்யன் அவளை அழைப்பதை பன்மையில் இருந்து ஒருமைக்கு தாவி விட்டதை இருவருமே உணரவில்லை

அவன் முகத்தை நிமிர்ந்து பார்த்த மான்சி “ எந்த பெண்களையும் அப்படி நினைக்காதவர் என்ன மட்டும் ஏன் அப்படி நெனைச்சீங்க,, உங்களோட பார்வையில் நான் கண்ணியமானவளா தெரியலையா?,, உங்கப் பார்வையில் எது தவறாகப் பட்டது, நான் என் அண்ணன் தோளில் சாய்ந்ததா? அல்லது என் அண்ணன் என் நெற்றியை பிடிச்சுவிட்டதா? எங்க ஊர்லேர்ந்து கிளம்பும் போதே எங்கம்மா அப்பாவை நெனைச்சு ரொம்ப நேரம் அழுததால எனக்கு கடுமையான தலைவலி,, இங்கே வந்தபிறகும் அது தீரவில்லை அதனாலதான் எங்க அண்ணன் பிடிச்சுவிட்டான்,, இதைப்போய் தப்பா நெனைச்சீங்களே,, எங்கம்மா அப்பா இருந்தா எனக்கு இந்த மாதிரி நிலைமை வருமா,, எல்லாம் எங்க விதி” என்று சொல்லிவிட்டு சிறு குழந்தையை போல விசும்பி விசும்பி அழுதவளை எப்படி சமாதானம் செய்வது என்று புரியாமல் தவித்தான் சத்யன்

அவளின் ஒவ்வொரு சொட்டு கண்ணீரும் சத்யனின் நெஞ்சில் ஊசியாய் இறங்கியது,, குமுறும் அவளின் முகத்தையே பார்த்த சத்யன் மறு யோசனை ஏதுமின்றி சட்டென்று அவளை நெருங்கி இழுத்து தன் தோளில் சாய்த்துக்கொண்டான்,

எது அவளை அணைத்து ஆறுதல்படுத்த சொன்னது என்று அவனுக்கு புரியவில்லை,, அதைப்பற்றி யோசிக்கவும் அவன் தயாரில்லை,, அவனைப்பொறுத்தமட்டில் மான்சியின் கண்ணீர் தரையில் விழக்கூடாது அது அவன் நெஞ்சில் விழவேண்டும் என்று மட்டுமே நினைத்தான்



மான்சிக்கு எங்கு இருக்கிறோம் என்று முதலில் புரியவில்லை போல,, அவன் தோளில் தனது கண்ணீரை கொட்டியவள் சுயநிலை உணர்ந்து திகைத்து விரைத்து விலக முயன்றாள்

ஆனால் சத்யன் அவளை விடவில்லை,, “ ஸ் கொஞ்சநேரம் அப்படியே இரு மான்சி எல்லாம் சரியாயிடும்” என்று உரிமையான குரலால் அவளை அடக்கினான்,, ஆனால் அந்த “ எல்லாம் சரியாயிடும்” என்றது அவனுக்கா? இல்லை அவளுக்கா? என்றுதான் புரியவில்லை,

மான்சி திமிறி விலகியதும், சத்யனும் வேறு வழியில்லாமல் அவளை விடுவித்தான், ஆனால் நெருக்கத்தை விலக்காமல் அவளை தோளைத் தொட்டு திருப்பி “ இந்தா,, இந்த தண்ணிய குடி” என்று அவள் உதட்டருகில் தண்ணீர் க்ளாஸை எடுத்துச்செல்ல……

எங்கே அவனே அதை புகட்டி விடுவானோ என்று பயந்தவள் போல,, மான்சி சட்டென்று க்ளாஸை கையில் வாங்கிக்கொண்டாள்,, அவள் தண்ணீரை குடிக்க சத்யன் அந்த அழகை பார்வையால் குடித்தான்,, மான்சி அதை கவனித்துவிட்டு தனது கண்களை மூடிக்கொண்டு தண்ணீர் குடித்தாள்

உதட்டில் சிரிப்பு நெளிய அவளிடமிருந்து டம்ளரை வாங்கி டேபிளில் வைத்துவிட்டு,, அவள் தோளில் தட்டி “ அதோ அங்க பாத்ரூம் இருக்கு போய் முகத்தை கழுவிட்டு வா” என்றான் குரலில் அன்பை குலைத்து!



மறுபேச்சில்லாமல் மான்சி அவனிடமிருந்து விலகி பாத்ரூம் நோக்கி போனாள்,,
சத்யன் அவளையே பார்த்தான்,, இவ்வளவு பூஞ்சையானவள் எப்படி தனியாக இந்த கோவையில் இருந்து சமாளிக்கப் போகிறாளோ, என்ற கவலை புதிதாக அவன் மனதில் தோன்றியது,

திடீரென அவளை இழுத்து அணைத்தது சத்யனுக்கு அவள் என்ன நினைப்பாளோ என்று சங்கடமாக இருந்தாலும்,, மனதுக்குள் கரைகாணா உற்சாகம் கரைபுரண்டு ஓடியது.

முகம் கழுவிவிட்டு வெளியே வந்த மான்சியின் கண்களில் இருந்த சிவப்பைத் தவிர, புதிதாய் பூத்த மஞ்சள் ரோஜாவைப் போல பளிச்சென்று இருந்தாள்
கைகுட்டையால் முகத்தை துடைத்தபடி வந்தவள்,, சத்யன் அருகே வந்து “ நான் கிளம்புறேன் சார் நேரமாகுது” என்றாள்

அவள் சார் என்றது சிரிப்பை வரவழைத்தாலும் “ ம் கிளம்பு,, ஆனா நான் மன்னிப்பு கேட்டேனே அதுக்கு பதிலே சொல்லலை நீ” என்றான் சத்யன்

அமைதியாக நின்றாள் மான்சி



அவளருகே வந்த சத்யன் “ ம்ம் அப்போ என்னை மன்னிக்கவே மாட்டியா மான்சி ” என்று சத்யன் உறுக்கமாக கேட்க

தனது தயக்கத்தை உடைத்து “ நான் மன்னிக்கும் அளவுக்கு நீங்க எந்த தப்பும் செய்யலை,, ஆனா இவ்வளவு பெரிய நிறுவனத்தை நடத்தும் நீங்க எதையுமே முதல் பார்வையில் எடை போட்டு தீர்மானம் பண்ணாதீங்க சார்” என்று சொல்லிவிட்டு நகர்ந்தவளை கைபிடித்து நிறுத்தினான் சத்யன்

“ ஆனா நீ என்னை மன்னிக்கலைன்னாலும் எனக்கு கவலையில்லை தெரியுமா?,, ஏன்னா நான் ஏன் அப்படி நினைத்தேன் என்பதற்கான அர்த்தம் எனக்கே இப்போத்தான் புரிஞ்சுது” என்றவன் தனது பிடியை தளர்த்தி “ ம் இப்போ போ,, ஆனா இனிமேல் என் பார்வை உன்மீதுதான்” என்று சொல்லிவிட்டு போய் தனது இருக்கையில் அமர்ந்து அவளைப் பார்த்து புன்னகைத்தான்


Leave a Comment

Ads Blocker Image Powered by Code Help Pro

Ads Blocker Detected!!!

We have detected that you are using extensions to block ads. Please support us by disabling these ads blocker.

Powered By
100% Free SEO Tools - Tool Kits PRO
error: read more !!