மனசுக்குள் நீ – பாகம் 50

“ அய்யய்யோ விடுங்க என்னை அனிதா வசு வந்திருக்காங்க” என்று மான்சி கூற..

“ வரட்டுமே, அதனால இப்ப என்ன, கீழே தானே இருக்காங்க” என்று கூறி தன் மூக்கால் அவள் மூக்கை உரசினான்

“ அய்யோ கடவுளே இங்கதான் இருக்காங்க,, கொஞ்சம் பின்னாடி திரும்பி பாருங்களேன் ” என்று மான்சி அவனிடம் கிசுகிசுக்க………

“ என்னது இங்கேயா?” என்று அலறி எழுந்து கட்டிலைவிட்டு தாவி இறங்கினான் சத்யன், அங்கே அனிதாவும் வசுவும் சுவர் பக்கமாக திரும்பி கண்களை மூடிக்கொண்டு இருந்தனர்

“ ஏய் நீங்க எங்க இங்கே வந்தீங்க ” என்று சத்யன் அதட்டிவிட்டு, திரும்பி மான்சியை பார்த்தான், மான்சி கட்டிலிலிருந்து இறங்கி சுடிதாரின்மேல் டாப்பை இழுத்து சரிசெய்துகொண்டு இருந்தாள்



அவனை பார்த்து சங்கடமாக நெற்றியில் அடித்துக்கொண்டாள், சத்யன் அசடு வழிய திரும்ப,, “ அண்ணா கண்ணை திறக்கலாமா” என்றாள் வசு குறும்புடன்

“ ஏய் வாலு கண்ணைத் திற, இங்க ஒன்னும் நடக்கலை ” என்ற சத்யன் சோபாவில் வசுவின் அருகில் போய் அமர்ந்து “ என்னம்மா இவ்வளவு காலையிலேயே வந்துருக்கீங்க, என்ன வருங்கால அண்ணியின் தரிசனம் பார்க்கவா?” என்று வேடிக்கையாக கேட்டான்

தனது அண்ணன் எப்போதாவது தீபாவளி பொங்கல் ரம்ஜான் மாதிரிதான் வேடிக்கையாக பேசுவான் என்பதால், இருவரும் கடைவாய்ப் பல் தெரியுமளவுக்கு சிரித்தார்கள்,, சத்யன் தனது அறைக்குள் அவர்கள் வந்ததை பற்றி கண்டுகொள்ளாதது வேறு அவர்களின் சந்தோஷத்தை அதிகமாக்கியது,

வசுதான் ஆரம்பித்தாள் “ இல்லண்ணா,, எங்களுக்கும் அண்ணியோட ஊரைப் பார்க்கனும்னு ஆசையா இருக்கு, அதனால நாங்களும் போறோம்ணா ப்ளீஸ்” என்று அந்த சிறியவள் தலையை ஒரு பக்கமாக சாய்த்து, கண்களை சுருக்கி, விரல்களை குவித்து கெஞ்சும்போது யாரால்தான் மறுக்க முடியும்..

சத்யன் அமைதியாக இருந்தான், “ அண்ணா நாங்க எதுவும் தொந்தரவு செய்யமாட்டோம்ணா ப்ளீஸ்” என்று வசு மறுபடியும் கெஞ்சினாள்

இந்த முறை சத்யனால் அமைதி காக்க முடியவில்லை “ சரி கிளம்புங்க” என்று மட்டும் கூறினான்



மான்சி அவன் பக்கத்தில் நின்றுகொண்டு அனிதாவுக்கு கண் ஜாடை செய்ய, அவள் சரியென்று மெலிதாக தலையசைத்து “ அண்ணா அப்பாவும் அண்ணியோட வரனும்னு ஆசை படுறார்” என்றாள்

சத்யன் வெடுக்கென்று நிமிர்ந்து அவளை பார்த்தான்,, “ அவருக்கு அங்கே என்ன வேலை,, அவருக்கு உடம்பு வேற சரியில்லையே, அதனால அவர் வேனாம்” என்று பட்டென்று கூறிவிட்டு எழுந்து பாத்ரூம் நோக்கி நடந்தான்

பெண்கள் மூவரும் பதட்டமாக அவன் பின்னே ஓடினார்கள், மான்சி அவன் கையை பிடித்துக்கொண்டு “ என்னங்க இப்படி பட்டுன்னு சொல்லிட்டீங்க, காலையில நான்தான் போன் பண்ணி எல்லோரும் கிளம்புங்க எங்க வீட்டுக்கு போகலாம்னு சொல்லிட்டேன், அதனாலதான் இவங்களும் வந்தாங்க,, இப்போ போய் யாரும் வரவேண்டாம்னு சொன்னா அவங்க என்னை பத்தி என்ன நினைப்பாங்க,, உங்களை கேக்காம சொன்னது தப்புத்தான், ப்ளீஸ்ங்க எல்லாரும் போறோம்ங்க” என்று பொய்யை அழகாக இட்டுக்கட்டி அதையும் அவனை உரசிக்கொண்டே சொன்னாள்

சத்யன் நின்று அவள் பற்றியிருந்த கையை விடுவித்து விட்டு, திரும்பி அனிதா வசுவை பார்த்தான்,, வசு அழுதுவிடுவாள் போல கண்ணீர் தேங்கிய கண்களுடன் நின்றிருந்தாள்,, அனிதாவோ அவன் என்ன சொல்வானோ என்ற எதிர்பார்ப்பில் அவன் முகத்தையே பார்த்தாள்,

சத்யன் மான்சியை பார்த்தான், அவள் அவனை காதல் பொங்கும் விழிகளுடனும், ஈரமான உதடுகளுடனும், சொக்கவைக்கும் அழகுடன் அவனை விழியால் விழுங்குபவள் போல பார்த்தாள்

சத்யன் எதுவுமே சொல்லாமல், பாத்ரூமுக்குள் போக,, அனிதா ஏமாற்றத்துடன் மான்சியை பார்த்தாள், மான்சி தன் நெஞ்சில் கைவைத்து தான் பார்த்துக்கொள்வதாக கூறி அவர்களை வெளியே தள்ளிக்கொண்டு வந்தாள்,



அனிதா நீ அங்கிளுக்கு போன் பண்ணி , ஆன்ட்டி அங்கிள் ரெண்டு பேரையும் ரெடியாகச் சொல்லு, அவர் எதுவும் சொல்லமாட்டார் , நான் பார்த்துக்கிறேன், நீ போய் ஊருக்கு கிளம்ப தயாராகு நான் இதோ வர்றேன் ” என்று கூறிவிட்டு மறுபடியும் அறைக்குள் வந்து கட்டிலில் குத்தங்காலிட்டு அமர்ந்துகொண்டாள்

“ ம்ம் கோபம் வருதா உங்களுக்கு,, உங்களோட கோபத்தை எப்படி தணிக்கிறதுன்னு எனக்கு தெரியும், அதான் உங்க வீக்னஸ் தெரிஞ்சு போச்சே, நானும், நான் கொடுக்கும் முத்தமும் தான் உங்க வீக்னஸ்னு புரிஞ்சுபோச்சு, இனிமேல் எப்படி கோபப்படுறீங்கன்னு பார்க்கிறேன்” என்று மனதுக்குள் எண்ணமிட்ட படி அமர்ந்திருந்தாள்

குளித்துவிட்டு பாத்ரூமில் இருந்து வெளியே வந்த சத்யன் இவளை பார்த்தும் பார்க்காதது போல் டிரசிங்டேபிள் முன்பு நின்று தண்ணீர் வழிந்த தனது புஜங்களை டவலால் தொடைத்தான்,

ஓகோ சாருக்கு கோபம் போலருக்கு, என்று எண்ணியபடி மெதுவாக அவன் பின்னால் போய் நின்றவள், முன்புறமாக கையை செலுத்தி அவனை அணைத்துக் கொண்டு அவன் முதுகில் வழிந்த நீரை தன் உதட்டால் வழித்து எடுத்தாள், முன்புறம் சென்ற கைகள் அவன் மார்பு முடியை வருடி சுருட்டி இழுத்தது

“ ஏய் மான்சி என்னப் பண்ற விடு, ஏ……ய் மான்சி ” என்று அரைகுறையாக பேசி சத்யன் தடுமாறினான், அவன் கையில் இருந்த டவல் நழுவி கீழே விழுந்தது, குளிர்ந்த நீரில் குளித்த அவனது உடல் கடகடவென சூடேறியது, கால்கள் வலுவிழந்து துவள்வது போல இருந்தது



முன்புறம் அவனது மார்பின் ஈர மயிர்களை வருடிய மான்சி விரலில் தட்டுப்பட்ட அவனது மார்பின் சிறிய காம்பை தனது நகத்தால் சுரண்டி அவனுக்குள் தீயை மூட்டினாள்

“ ஏய் என்னடி பண்ற” என்று சத்யன் முனங்கலாய் கேட்க…

மான்சி அதை காதில் வாங்காது அவன் முதுகில் தனது நாக்கால் கோலம் வரைந்தாள், உதட்டால் உஷ்ணத்தை ஏற்றினாள்,, பற்களால் கடித்து அவனை பறக்கவிட்டாள், தனக்கு தெரியாத இந்த மன்மத வித்தையில் அவள் தெரிந்த யுக்தியை கையாண்டாள்

அவளின் ஒவ்வொரு தொடுகைக்கும் சத்யன் சொக்கிப்போனான், அவன் வாய் பிளந்து சூடான மூச்சுகாற்றை வெளியேற்றி அந்த அறைக்கே அன்ல் மூட்டினான், ஒரு கட்டத்தில் தாங்கமுடியாமல் தனது கையை பின்னுக்கு செலுத்தி அவளை முன்னே இழுத்து அணைத்தவாறு தரையில் சரிந்தான்

மான்சி தரையில் கிடக்க சத்யன் அவள் மீது படர்ந்தான், அவள் முகத்தை தன் முகத்தால் தேய்த்து ” மான்சி மை லவ் ” என்று புலம்பியபடியே அவளை அணைத்துக்கொண்டு தரையில் உருண்டான்,

இப்போது அவள் மேலேயும் அவன் கீழேயும் வர, மான்சி அவன் உதட்டை கடித்து இழுத்து ஒரு நீண்ட அற்புதமான முத்தத்தை அவனுக்கு தந்தாள்,, சத்யன் அந்த ஒரு முத்தத்துக்கே கண்கள் சொருக மயங்கிப்போனான், அவள் வாசனை அவனை மேலும் கிரங்கடித்தது

முத்தமிட்டு முடித்த பின் அவனுக்கு இரண்டு பக்கமும் கையூன்றி எழுந்த மான்சி அவன் முகத்தைப் பார்த்து அவன் நில*ையை சரியாக யூகித்து ” ஏங்க மாமாவை வரவேனாம்னு சொல்றீங்க,, அவர்பாட்டுக்கு அவர் கார்ல வரப்போறார், அதோட யாருமே இல்லாம போனா என் மாமா வீட்டுல இன்னும் இளக்காரமா தானே நினைப்பாங்க” என்றவள் ஊன்றிய கைகளை சட்டென்று மடக்கி அவன் மீது விழுந்தாள்,



அவன் கன்னத்தில் தன் உதட்டால் தேய்த்து, காதை கவ்வி இழுத்து ” என்னங்க மாமாவை வரச்சொல்லவா? நான் காலையில சொல்லிட்டு இப்போ வேனாம்னு சொன்னா, அவங்க என்ன நினைப்பாங்க, புருஷன் பொண்டாட்டின்னா பேச்சில் ஒற்றுமை இருக்கனும்ங்க” என்று தனது கடைசி அஸ்திரத்தை பயன்படுத்தினள்

புருஷன் பொண்டாட்டி என்றதுமே சத்யன் முகம் சட்டென்று மலர, அவள் கன்னத்தோடு கன்னம் வைத்து ” பொண்டாட்டி சொன்னா நான் மறுப்பேனாடி என் கண்மணி” என்று கூறிவிட்டு அவளை அணைத்துக்கொண்டு மறுபடியும் உருண்டு அவளை கீழே தள்ள முயன்றான்

மான்சி லாவகமாக அவனிடமிருந்து விலகி எழுந்து ” சரி சீக்கிரம் கீழே வாங்க,, நான் போய் ஊருக்கு தயாராகிறேன்” என்று சொல்லிவிட்டு கதவை திறந்துகொண்டு சிட்டாகப்பறந்தாள்



தரையில் மல்லாந்து கிடந்த சத்யனுக்கு நடப்பு புரியவே சிறிது நேரமானது, புரிந்ததும் தலையிலடித்துக்கொண்டு எழுந்து அமர்ந்தான்

” காதல் மனிதனின் பலமா? பலவீனமா? 

” என்னை பகலில் கேட்டால் காதல் மனிதனின் பலம் என்று சொல்வேன்! 

” அதையே இரவில் கேட்டால் பலவீனம் என்று சொல்வேன்!

Leave a Comment

Ads Blocker Image Powered by Code Help Pro

Ads Blocker Detected!!!

We have detected that you are using extensions to block ads. Please support us by disabling these ads blocker.

Powered By
Best Wordpress Adblock Detecting Plugin | CHP Adblock
error: read more !!