மனசுக்குள் நீ – பாகம் 26 – மான்சி தொடர் கதைகள்

பக்கத்தில் இருந்த மனைவியை இழுத்து அணைத்த கிருபா “ சத்யா மட்டும்தான் என்னை தேடினான், நீ தேடலையாக்கும்” என்று குறும்பு பேசி வசந்தியின் மூக்கோடு தன் மூக்கை வைத்து உரசினான் கிருபா

“ ம்க்கும் இதை நான் வேற சொல்லனுமா,ம் ஏன் ஐயாவுக்கு தெரியாதாக்கும்” என்று வெட்கமாக கூறி தன் பங்குக்கு கணவனை இறுக்கி அணைத்த வசந்தி “ மணி பத்தாகுது, வாங்க சாப்பிடலாம்” என்றாள்

தனது உதடுகளால வசந்தியின் கழுத்தில் கோலம் வரைந்துகொண்டே “ ம்ம் எனக்கும் பசிக்குதுதான்,, ஆனா உன் வாசனை வேற பசியை அல்லவா தூண்டுது,, மொதல்ல எந்த பசியை அடக்கலாம்” என்று தாபமாக கிருபா கேட்க



“ ம்ம் மொதல்ல வயித்து பசியை அடக்கலாம்,, இல்லேன்னா சாப்பாடு கெட்டுபோயிடும்” என்று கிருபாவிடம் இருந்து விலகி அவன் முதுகில் கைவைத்து டைனிங் ஹாலுக்கு தள்ளிக்கொண்டு போனாள்

இருவரும் சிரிப்பும் சந்தோஷமுமாக சாப்பிட்டு முடித்தபின், இருவரும் படுக்கையறைக்கு வந்தனர்,, கதவை திறக்கும்வரை கூட பொறுமையில்லாமல் வசந்தியை வாரியணைத்து தூக்கிக்கொண்டு காலால் கதவை உதைத்து திறந்துகொண்டுஉள்ளே போனான் கிருபா

கிருபா தொழில் கொடிகட்டிப் பறந்தாலும்,, செக்ஸ் விஷயத்தில் மிகவும் பலகீனமானவன், ஆனால் தனது வேட்கைக்கு மனைவியை மட்டுமே தேடுவான்,, அவனுக்கு தினமும் வசந்தி வேண்டும்,, அந்த மூன்று நாட்களுக்கு காத்திருப்பதற்குள் தவித்து போய்விடுவான்,, இவர்களுக்கு திருமணம் ஆனதில் இருந்தது வசந்தியும் இவனுக்கு சரியாக ஈடுகொடுத்து இதுபோல் பழக்கி வைத்ததிருந்தாள்,, எவ்வளவு பிரச்சனைகள் இருந்தாலும் தனது மனைவியை அணைத்து உறவுகொண்டதும் அத்தனையும் இலகுவாகிவிடும் என்பது கிருபா அனுபவத்தில் கண்டு உண்மை

தினமும் ஒரேமுறை என்றாலும் திகட்ட திகட்ட திருப்த்தியாக அனுபவிப்பார்கள்,, இருவரும் தாம்பத்தியத்தின் நிறைவை முழுமையாக உணர்ந்திருந்தனர்,, கணவனின் தேவை என்னவென்று நிமிடத்தில் யூகிக்கும் திறைமை வசந்தியிடம் இருந்தது,, இருவரும் மனமொத்த தம்பதிகளாய் வாழ்ந்தார்கள்,, கிருபாவின் குறும்புகளும் சீண்டல்களும் எப்போதும் வசந்தியை சந்தோஷமாக வைத்திருக்கும்

அன்றும் அப்படித்தான் சுகமான ஒரு நிறைவை எட்டிய இருவரும் ஒரு போர்வைக்குள் அணைத்து கிடந்தனர்,, கிருபாவின் வெற்று மார்பில் தலைவைத்து படுத்திருந்த வசந்தி “ இப்ப சொல்லுங்க என்னாச்சுங்க ஏன் லேட்” என்று கேட்டாள்



மனைவியின் கூந்தலை கோதியவாறு “ உன்கிட்ட முன்னமே சொன்னேனே நம்ம ட்ரஸ்ட் மூலமா படிச்ச ஒரு பொண்ணுக்கு நம்ம ஆபிஸில் வேலை குடுத்திருக்கோம்னு” என்று கிருபா ஆரம்பிக்க

“ ஆமா சொன்னீங்க பேருகூட ரஞ்சனா தானே,, ரொம்ப நல்லப் பொண்ணுன்னு சொன்னீங்களே அவளுக்கு என்னாச்சு” என்று வசந்தி கேட்டாள்

“ அவ மூனுநாளா ஆபிஸ் வரலை வசி, ஏதோ உடம்பு சரியில்லைன்னு ஷீலா சொன்னதால் நானும் சரியான பிறகு வரட்டும்னு இருந்துட்டேன்,, இன்னிக்குஈவினிங் ஷீலா அவளோட ஹாஸ்டலில் இருந்து போன் பண்ணா,, அந்த ரஞ்சனாவை காணோம்னு,, எனக்கு ஒன்னுமே புரியலை அப்புறம் ஷீலாவை விசாரிச்சதில் அவளுக்கு ஏதோ பெரிய பிரச்சனைன்னு யூகிக்க முடிஞ்சது, அவ எங்க போயிருப்பான்னு ஆட்டோ ஸ்டாண்டில் விசாரிச்சு, அப்புறம் பஸ்ஸ்டாண்டில் போய் தேடினா…. ஊட்டி போற பஸ்ஸில் இருந்தா” என்ற கிருபா அதன்பிறகு நடந்தவற்றை ஒன்றுவிடாமல் வசந்தியிடம் கூறினான்

இப்படியொரு கதையை எதிர் பார்க்காத வசந்தி “ அய்யய்யோ பாவம்ங்க அந்த பொண்ணு,, அவளை கவனமா பார்த்துக்க சொல்லி அன்னம்மா கிட்ட சொன்னீங்களா? மறுபடியும் ஏதாவது பண்ணிக்க எங்கயாவது போயிரப்போறா” என்று வசந்தி பரிதாபத்துடன் சொல்ல

“ இல்ல எதுவும் ட்ரை பண்ணமாட்டேன்னு நெனைக்கிறேன்,, எனக்குசத்தியம்பண்ணிக் குடுத்திருக்கா” என்று கிருபா நம்பிக்கையுடன் கூறினான்



“ இப்போ அடுத்து என்னப் பண்ணப்போறீங்க” என்று வசந்தி கவலையுடன் கேட்டாள்

“ அந்த குருமூர்த்தி பற்றிய தகவல்கள் உண்மையான்னு விசாரிக்கனும்” என்றான் கிருபா

“ உண்மையாக இருந்தால்?”

“ உண்மையா இருந்தால்,, இந்த பொண்ணை சமாதானம் பண்ணி வேற யாராவது ஒரு நல்லவனுக்கு மேரேஜ் பண்ணி குடுக்கனும்,, அதுதானே சரி” என்று கிருபா உறுதியுடன் கூறினான்

“அப்போ அவ வயத்துல இருக்குற குழந்தை? அதையும் சேர்த்து ஏத்துக்குற நல்லவன் இருக்கானா? ” என்ற வசந்தியின் கேள்விக்கு கிருபா பதில் தெரியாமல் சற்றுநேரம் அமைதியாக இருந்தான்

“ அதுதான் எனக்கும் புரியலை வசி,, அந்த கருவை கலைச்சிட சொல்லலாமா?” என்று மனைவியிடம் யோசனை கேட்டான்

உடனே துடித்து நிமிர்ந்த வசந்தி கிருபாவின் வாயை பொத்தி “ அய்யோ உங்க வாயால அந்த வார்த்தையை சொல்லாதீங்க,, ஏற்கனவே என்ன பாவம் பண்ணோமோ சத்யனுக்கு பிறகு நமக்கு குழந்தையே இல்லாம பண்ணிட்டான் கடவுள்,, இப்போ இந்த பாவமும் நமக்கு வேண்டாம்,, முதலில் குருமூர்த்தி பத்தி விசாரிங்க, பிறகு ரஞ்சனாவுக்கு என்ன செய்யலாம்னு அவளை கேட்டு முடிவு பண்ணுங்க,, நானும் ஒருநாள் வந்து அவளை பார்க்கிறேன்” என்று வசந்தி முடித்துவிட்டாள்



கிருபா தாமதிக்காமல் மறுநாளே குருமூர்த்தியை பற்றி விசாரிக்க டிடெக்டிவ் நிறுவனம் மூலம் ஏற்பாடு செய்ய,, இரண்டு நாளில் அவர்களின் பதில் வந்தது,, மங்கை சொன்னது நூறு சதம் உண்மைதான் என்றார்கள்,, அவன் இப்போது மனைவியுடன் மும்பையில் இருப்பதாக தகவல் கூறினார்கள்

கிருபாவிற்கு ஆத்திரமாக வந்தது,, ஒரு பெண்ணை ஏமாற்றி விட்டு இன்னொருத்தியுடன் குடும்பம் நடத்தும் அவனை தவறை உணரும்படி ஏதாவது செய்தே ஆகவேண்டும் என்று கறுவினான் ,, அந்த டிடெக்டிவ் அதிகாரியிடமே அதைப்பற்றி கிருபா கேட்க

” எங்களுக்கும் இதுபோன்ற நபர்களை நடமாடவிடுவதில் விருப்பம் இல்லை மிஸ்டர் கிருபானந்தன்,, ஆனால் நாம் நேரடியாக இதில் இறங்கினால் நம்மளுக்கும் பாதிக்கும்,, அவன் வேலை செய்யும் நிறுவனம் மூலமாக மறைமுகமாக அவனுக்கு கஷ்டத்தை கொடுக்கலாம்,, அதாவது பெரிய சிக்கல் எதிலாவது அவனை மாட்டிவிட்டு வேடிக்கை பார்க்கலாம்,, இதை செய்ய எங்களால் முடியும்” என்று அவர் உறுதியுடன் கூற

“ அப்படின்னா உடனே அதை செய்யுங்க,, எவ்வளவு பண்ம் செலவானாலும் சரி” என்று ஆத்திரத்தோடு கூறி கிருபா போனை வைத்தான்

அன்று மாலை வசந்தியிடம் தகவல் சொல்லி அவளை அழைத்துக்கொண்டு தோட்டத்து வீட்டுக்கு ரஞ்சனாவை பார்க்க சென்றான் கிருபா



ரஞ்சனா இவர்களை பார்த்ததும் ஒரு மெலிந்த புன்னகையோடு வரவேற்றாள்,, வசந்தி நட்புடன் அவள் கையை பற்றிக்கொள்ள, ரஞ்சனா சங்கடத்துடன் தலைகுனிந்து நின்றாள்

மூவரும் வீட்டைவிட்டு வெளியே வந்து வரப்பில் நடந்தனர்,, கிருபா தனக்கு கிடைத்த தகவலை ரஞ்சனாவிடம் சொன்னான்,, குருமூர்த்தியின் துரோகத்தை சொல்லும்போது கிருபாவின் முகம் கோபத்தில் சிவந்தது

1 thought on “மனசுக்குள் நீ – பாகம் 26 – மான்சி தொடர் கதைகள்”

Leave a Comment

Ads Blocker Image Powered by Code Help Pro

Ads Blocker Detected!!!

We have detected that you are using extensions to block ads. Please support us by disabling these ads blocker.

Powered By
Best Wordpress Adblock Detecting Plugin | CHP Adblock
error: read more !!