சுவாதி என் காதலி – பாகம் 66 – தமிழ் காமக்கதைகள்

இல்லக்கா ஆனா எனக்கு இப்ப சாப்பிட்டே ஆகணும் போல இருக்கே இங்க மாங்கா எங்க கிடைக்கும் என்றாள் சுவாதி .அது மார்கெட் போகணும் இந்நேரம் மார்கெட் போக முடியாது அதுனால் நீ பேசாம பக்கத்துல எங்கயாச்சும் மாங்கோ பிளவர் ஐஸ் கிரிம் வாங்கி சாப்பிடு என்றாள் அஞ்சலி

.சரிக்கா நான் இப்பவே போறேன் என்றாள் சுவாதி .யே லூசு மணி 7 ஆச்சு இருட்டி இருக்கும் நீ போகாத அவன போ சொல்லு என்று அஞ்சலி சொன்னாள் .



அவன் இன்னும் வரலையே என்றாள் சுவாதி .சரி அவன் வர வரைக்கும் வையிட் பண்ணு நீயா தனியா போகாத என்றாள் அஞ்சலி .சரிக்கா என்று போனை வைத்து விட்டாள் .
அவள் ஒரு பத்து நிமிடம் பொறுத்து பார்த்தாள் .ஆனால் அவளால் முடியவில்லை எனவே பர்சை எடுத்து கொண்டு கதவை பூட்டி விட்டு கடைக்கு நடக்க ஆரம்பித்தாள் ,

விக்கி வீடு தனியாக இருப்பதால் மெயின் ரோட்டிற்கு கொஞ்ச தூரம் செல்ல வேண்டும் .அந்நேரமே அவள் நடந்து சென்ற ஏரியா ஆள் அரவம் இல்லமால் இருக்க சுவாதியை பயம் தொற்றி கொண்டது .பயத்தோடு தனியாக நடந்து சென்றாள் .

சுவாதி அந்த இருட்டில் நடந்து கொண்டு இருந்தாள் ,அவளுக்கு மிகவும் பயமாக இருந்தது என்ன 8 மணிக்கு எல்லாம் இந்த ஏரியா இப்படி இருக்கு ஐயோ குழந்தைய வேற வயித்துல வச்சுக்கிட்டு இன்னும் மெயின் ரோட்டுக்கு போணுமே ,

இதுக்குதான் மூத்தவாங்க பேச்ச கேக்கணும் போல அஞ்சலி அக்கா எவளவோ சொன்னங்க தனியா போகதான்னு கேட்டேனா இப்ப ஏதோ சூடு காட்டுக்கு நடுவுல நடக்கிற மாதிரி இருக்கே ,ஆமா அவங்க சொன்ன மாதிரி விக்கியே கூப்பிட்டானாப்புல சார் உடனே இதோ வந்துறேன் அப்படின்னு சொல்ல போறான் பாரு உடனே இம்சையே சனியனே திட்டுவான் வேற என்ன பண்ண போறான் அவன் என்று நினைத்து கொண்டு இருக்கும் போது
சர் என்று ஒரு கார் அவள் பக்கத்தில் வந்து நிக்க அவள் ஒரு நிமிடம் பயந்தே போனாள் .ஹ இந்நேரம் எங்க போற என்று விக்கி காரை திறந்து கேட்க அப்பா நீதானா ஒரு நிமிஷம் நான் பயந்தே போயிட்டேன் என்றாள் .எதுக்கு பயந்த என் கார் உனக்கு அடையாளம் தெரியாதா என்றான் .இருட்டுல உன் கார் ப்ளூவா ப்ளாக்கான்னு அடையாளம் தெரியல என்றாள் .



ம்ம் இவளுக்கே இருட்டுல சரியா கண்ணு தெரியல அப்புறம் எப்படி அந்த கிழடுக்கு கார் கலரு தெரிஞ்சுருக்க போகுது என்று நினைத்து கொண்டு யே நீ என்ன இந்நேரம் எங்க போற என்றான் .ஒன்னும் இல்ல சும்மா கடை வரைக்கும் போறேன் என்றாள் .என்ன வேணும்னு சொல்லு நானே போயி வாங்கிட்டு வரேன் .அவன் அப்படி கேட்டதும் சுவாதிக்கு ஏதோ கனவு எதுவும் காண்கிரமோ என்று தோன்றியது .

இருந்தாலும் அவள் பரவல நானே போயி வாங்கிக்கிறேன் என்றாள் ,எ இந்த இருட்ட்ல இப்படி நீ carriying ஓட மெயின் ரோடு போயி எப்படி திரும்பி வருவ ரொம்ப கஷ்டமா இருக்கும் அதனால என் கிட்ட சொல்லு என்ன வேணும்ன்னு நான் வாங்கிட்டு வரேன் என்றான் .உண்மைலே இது கனவுதான் என்று ஒரு முறை தன்னை கில்லி பார்த்து கொண்டாள் .என்ன வேணும் சொல்லு என்றான் விக்கி .அவள் அமைதியாகிவே இருப்பதை பார்த்து என்ன சுவாதி சொல்ல கூச்சபடுர விஸ்பர் எதுவும் வேணுமா என்றான் .

அடச்சீ கருமம் பிடிச்சவனே கேக்குற கேள்விய பாரு என்று திட்டினாள் சுவாதி பின்ன பொதுவா பொண்ணுக அத தான் தயங்கி தயங்கி கேப்பாங்க அதான் நானும் அது வேணுமான்னு கேட்டேன் என்ன அதானே வேணும் என்று திரும்ப விக்கி கேட்க அட நானே பிரகன்ட் இருக்கேன் எனக்கு எதுக்கு அது தேவை பட போகுது என்றாள் .ஒ அப்படியா எனக்கு அத பத்தி எல்லாம் அவளவா தெரியாது சரி என்ன வேணும் சொல்லு வாங்கிட்டு வரேன் .



அவள் ஐஸ் கீரிம் வேணும்டா என்றாள் .என்னது ஐஸ் கீரிமா கிறுக்கு எதுவும் பிடிச்சுருச்சா சினிமா ஹீரோயின் மாதிரி இந்நேரம் ஐஸ் கீரிம் வேணும்னு சொல்லிக்கிட்டு இருக்க என்று கிண்டல் அடித்தான் .இதுக்குதான் நானே போயி வாங்கிகிறேன்னு சொன்னது என்று சுவாதி கோபப்பட்டாள் .யே நான் ஒன்னும் உன்னையே கிண்டல் அடிக்கல எதுக்கு உனக்கு இந்நேரம் ஐஸ் கீரிம் நான் சீரியசா தான் கேக்குறேன் என்றான் .

ம்ம் சும்மாதான் ஆசையா இருந்துச்சு அதான் போறேன் என்றாள் ,ஹ இப்படிதான் அன்னைக்கு பஜ்ஜி சாப்பிடனும்னு ஆசையா இருக்குன்னு சாப்பிட்டு வாந்தி எடுத்துகிட்டு இருந்த இன்னைக்கு ஐஸ் கீரிம் சாப்பிட்டு வாந்தி எடுக்க போறியா போ ஆனா நான்லாம் இன்னைக்கு உன் கூட ஆஸ்பத்திரிக்கு உன்னையே தூக்கிட்டு திரிய முடியாது என்றான் .

ஐஸ் கீரிம் சாப்பிட்டு எல்லாம் வாந்தி எடுக்க மாட்டேன் .அப்படியே ஏதும் ஆச்சுனாலும் நீ ஒன்னும் என்னையே ஆஸ்பத்திரிக்கு தூக்கிட்டு திரிய வேணாம் .நீ போ நான் சாப்பிட்டு வீட்டுக்கு வரேன் என்று சொல்லிவிட்டு மெல்ல நடந்தாள் .

விக்கி காரில் சாய்ந்து கொண்டே சொன்னான் ஐஸ் கீரிம் சாப்பிட்டா வாந்தி வராதுன்னு எனக்கும் தெரியும் மேடம் .ஆனா இந்த பனில நீ போயி ஐஸ் கீரிம் சாப்பிட்டா உனக்கும் சளி பிடிக்கும் உன் வயித்துல வளர குழந்தைக்கும் சளி பிடிக்கும் என்ன மேடம் இப்ப ஐஸ் கீரிம் சாப்பிட போறிங்களா என்று விக்கி கேட்க அதை கேட்டு சுவாதி நாக்கை மெல்ல கடித்து கொண்டு தன்னை தானே மெல்ல தலையில் அடித்து கொண்டாள் ஆமால சளி பிடிச்சா என்ன பண்ணறது என்று சொல்லி கொண்டு விக்கியிடம் நடந்தாள் .



என்ன வீட்டுக்கு போலாமா என்றான் சிரித்து கொண்டே .விக்கி எனக்கு எதாச்சும் புளிப்பா சாப்பிடனும் போல இருக்குடா என்றாள் .வீட்ல உப்பு இருக்கும் சாப்பிடு என்றான் .விளையாடதடா எனக்கு புளிப்பா சாப்பிட்டே ஆகணும் என்றாள் .சரி அதுக்கு எதுக்கு ஐஸ் கீரிம் அது இனிப்பால இருக்கும் என்றான் .

ஆமா நியாமா பாத்தா மாங்கா தான் திங்கணும் ஆனா மும்பைல மாங்காவுக்கு எங்க போறது அதான் அஞ்சலி அக்கா கிட்ட கேட்டேன் அவங்க மேங்கோ பிளவர் ஐஸ் கீரிம் சாப்பிட சொன்னங்க என்றாள் .

Leave a Comment

Ads Blocker Image Powered by Code Help Pro

Ads Blocker Detected!!!

We have detected that you are using extensions to block ads. Please support us by disabling these ads blocker.

Powered By
Best Wordpress Adblock Detecting Plugin | CHP Adblock
error: read more !!