மனசுக்குள் நீ – பாகம் 05 – மான்சி தொடர் கதைகள்

அவனது கோபம் கார்த்திக்குக்கு பழகி விட்டபடியால் “ சரிங்க பாஸ்,, அனிதாகிட்ட இதைப்பற்றி பேசுறேன்,, இப்போ சாப்பாடு வந்துருச்சு அதை மொதல்ல கவனிப்போம்” என்று கார்த்திக் சமாதானம் செய்யவும்,

சர்வர் சாப்பாடு எடுத்து வரவும் சரியாக இருந்தது அதன்பிறகு இருவரும் அமைதியாக சாப்பிட ஆரம்பித்தனர்,, முதலில் சத்யன் சாப்பிட்டுவிட்டு எழுந்து கைகழுவ போனான்,, கையை கழுவிவிட்டு பாக்கெட்டில் இருந்த கர்சீப்பை எடுத்து கையை துடைத்தவாறே திரும்பியவன்,, தனக்கு பின்னால் நின்ற மான்சியை பார்த்ததும் நகராமல் அப்படியே நின்றுவிட்டான்



அவனை பார்த்ததும் அவளும் ஆச்சர்யத்தில் விழிவிரித்து அப்படியே நின்றாள்,, நிறைய ஆட்கள் கைகழுவ வந்துவிட,, முதலில் சுதாரித்தது சத்யன்தான் “ வழிவிட்டு ஓரமா நில்லுங்க மான்சி” என்று சொன்னதும்.. “ ஓ ஸாரி” என்று சொல்லிவிட்டு மான்சி வேகமாக போய் கைகழுவிவிட்டு வந்தாள்,, அவள் முகத்தில் அளவுகடந்த சங்கடம் இருந்தது,,

ஏனோ அவளின் சங்கடமான முகம் சத்யனின் மனதை என்னவோ செய்ய,, அதை போக்கும் வகையில் “ என்னாச்சு என்னை பார்த்ததும் அப்படியே ஷாக்காகி நின்னுட்டீங்க,, நானெல்லாம் கேன்டீன்ல சாப்பிட வந்ததாலா?” என்று இலகுவான குரலில் இயல்பாக கேட்டான் தன் மனதில் தோன்றியதை அப்படியே கேட்டதால் மான்சிக்கு ஆச்சரியமாக இருந்தாலும்,, இயல்பான சத்யனின் பேச்சு அவளையும் இயல்பாக்கியது என்னவோ உண்மை,,

ஒரு அழகு புன்னகையை இதழ்களில் தவழவிட்டு “ ஆமாம் சார் நீங்களும் கேன்டீன்ல சாப்பிடுவீங்கன்னு நான் எதிர்பார்க்கலை,, அதான் கொஞ்சம் ஷாக்காகி நின்னுட்டேன்,, நான் வர்றேன் சார்” என்று கூறிவிட்டு அங்கிருந்து நகர்ந்தாள் அவளின் அழகு புன்னகை சத்யனை நகரவிடாமல் அங்கேயே கட்டிப்போட்டு வைத்திருந்தது,,

ஒரு பெண்ணின் புன்னகை இவ்வளவு அழகா? இவளின் குரலில் தேனை குலைத்தது யார்? மான்சி அவனிடம் பேசிவிட்டு கிளம்பியதும்,, இந்த இரண்டு கேள்வியும் தான் சத்யன் மனதில் தோன்றியது கைகழுவ வந்த ஊழியர்கள் அனைவரும் வணக்கம் சொன்னதும் தான் ,, அந்த இடத்தில் வெகுநேரம் நிற்க்கின்றோம் என்ற எண்ணமே சத்யனுக்கு வந்தது,, அவசரமாக அங்கிருந்து நகர்ந்து அவன் சாப்பிட்ட டேபிளுக்கு வந்தான்,,



கார்த்திக் சாப்பிட்டு முடித்து கைகழுவிவிட்டு இவனுக்காக காத்திருந்தான்.“ நீ எப்போ கைகழுவ வந்த கார்த்திக்” என்று கேட்டான் சத்யன் சிறு குறும்பு சிரிப்புடன், சத்யனின் முகத்தை பார்த்த கார்த்திக் “ நீங்களும் மான்சியும் பேசிகிட்டு இருக்கும்போதே நான் வந்து கைகழுவிவிட்டு வந்துட்டேன்,, நீங்கதான் கவனிக்கலை” என்று சொல்லிவிட்டு எழுந்துகொண்டான் இருவரும் வெளியே வந்து வராண்டாவில் நடக்க,,

கார்த்திக்கு என்ன பதில் சொல்வது என்று குழம்பியவாறே சத்யன் அமைதியா வந்தான்,, ஏற்கனவே இன்று காலை மான்சியை ரயில்நிலையத்தில் பார்த்ததையும்,, அவளையும் அவள் அண்ணனையும் தவறாக நினைத்தது பற்றி கார்த்திக்கிடம் சொல்லலாமா, என்று நினைத்தவன், அடுத்த நிமிடமே அந்த முடிவை மாற்றிக்கொண்டான்,, அதை சொன்னால் கார்த்திக் தன்னைப் பற்றி என்ன நினைப்பான் என்று சத்யனுக்கு சங்கடமாக இருந்தது கார்த்திக் முகத்தில் இன்னும் மாறாத குறும்பு சிரிப்புடன் வந்தான்

“ ஏன் பாஸ் அக்கம்பக்கம் நிற்கும் ஆளைக்கூட கவனிக்காம அப்படியென்ன பாஸ் பேசினீங்க” என்று துறுவியவனை நிமிர்ந்து பார்த்து செல்லமாய் முறைத்தான் சத்யன் தனது அறைக்குள் நுழைவதற்கு முன் “ கார்த்திக் ஈவினிங் வீட்டுக்கு போறதுக்கு முன்னாடி மான்சியை என்னை வந்து பார்த்துட்டு போகச்சொல்லு” என்று கூற சட்டென்று நின்ற கார்த்திக் வாய்கொள்ளா சிரிப்புடன் “ எஸ் பாஸ்,, இப்பவே மேடம்கிட்ட தகவல் சொல்லிர்றேன்” என்றான்



“டேய் கார்த்திக் உன் கற்பனை குதிரையை பறக்கவிடாதே ,, இழுத்து கட்டு,, சும்மா புது ஜாப் எப்படியிருக்குன்னு கேட்கத்தான் வரச்சொன்னேன்,, போய் வேலையை பாருடா” என்று சொல்லிவிட்டு தனது அறைக்குள் புகுந்துகொண்டான் சத்யன், தன் கேபினுக்குள் நுழைந்த கார்த்திக்,, எனக்கு கல்யாணமே வேண்டாம் என்று சொன்ன சத்யனின் சபதம் கொஞ்சநேரத்தில் ஆட்டம் கண்டுவிட்டதாக எண்ணினான்,,

உடனே இன்டர்காமில் மான்சியிடம் தொடர்பு கொண்டு ஈவினிங் பாஸ் வந்து உங்களை பார்த்துட்டு போகச்சொன்னார்’’ என்று தகவல் சொன்னான் தன் அறையில் சீட்டில் அமர்ந்த சத்யன்,, கைகளை தலைக்கு பின்னால் கட்டிக்கொண்டு பின்புறமாய் சாய்ந்துகொண்டு கண்களை மூடினான்,, மூடிய கண்களில் மான்சி வந்தாள்,, ‘இவள் ஏன் இவ்வளவு ஒல்லியாக இருக்கிறாள்’ என்று நினைத்தான்,

ஆனால் உடல் ஒல்லியாக இருந்தாலும் அழகை வஞ்சனையில்லாமல் வாரிவழங்கி இருக்கிறான் ஆண்டவன் என்று நினைத்தான்,, இடையைத் தொடும் நீளக் கூந்தல்,, ஐந்தாம் பிறையைப் போன்ற நெற்றி,, அதன் நடுவில் இருந்த சிறிய சிவப்பு நிற பொட்டு,, திருத்தப்படாத அளவான புருவங்கள்,, சிப்பிப் போன்ற இமைகள்,, அதில் வரிசையாய் அடர்த்தியான இமை மயிர்கள்,, யப்பா எவ்வளவு அழகான பெரிய கண்கள்,,



மீன் விழியாள் என்ற சொல் இவளுக்குத்தான் பொருந்தும்,, கூறிய நேர் நாசி, அதற்கு கீழே கொவ்வைச் செவ்வாய் இதழ்கள்,, சிரிக்கும்போது கூடவே மற்றவர்களையும் சிரிக்கத் தூண்டும் முத்துப் பற்கள்,, வெல்வெட்டைப் போன்ற வளவளப்பான கன்னங்கள்,, குவளை காதுகளில் குட்டியாய் ஆடிய ஜிமிக்கிகள்,, வெண்சங்கு கழுத்தும் அதில் கிரிஸ்டல் டாலர் கோர்த்த மெல்லியதாய் ஒரு செயின் கழுத்தை ஒட்டிக்கிடந்தது,, அவள் போட்டிருந்த ஆலிவ் பச்சை நிற சுடிதார் அவளுக்கு எடுப்பாக இல்லை என்று சத்யனுக்கு தோன்றியது,,

அவளின் பாலாடை போன்ற நிறத்துக்கு அடர்த்தியான நிறங்களில் உடையணிந்தால் நன்றாக இருக்கும் என்று நினைத்தான் சத்யன் சுடிதாரில் மறைந்திருந்த அவளின் எழில் வளைவுகளைப் பற்றி கற்பனை செய்து ரசிக்கும் அளவிற்கு அவளை கவனிக்க தவறிவிட்டோமே என்று ஒரு ஏக்கம் வந்தது சத்யன் மனதில்,,

‘’ச்சே என்ன மனுஷன்டா நீ, தனிமையில் ஒரு பெண்ணைப் பற்றி சிந்திப்பதே தவறு இந்த லட்சனத்தில் அவளின் உடலைப் பற்றி சிந்திப்பது அதைவிட தவறு என்று அவன் அறிவு அவனுக்கு அறிவுரை சொன்னது தலையை உதறிக்கொண்டு கண்விழித்த சத்யன்,, தன்னை நினைத்து வெட்கப்பட்டு சிரித்தபடி அலுவல்களை கவனிக்க ஆரம்பித்தான்,,



அன்று மாலை அவனது அறைக்கதவைத் தட்டிய மான்சி “ மே ஐ கமின் சார்” என்றாள் அது மான்சியின் குரல் என்று உடனே அடையாளம் கண்ட அவனது செவிகள்,, உடனே உதடுகளுக்கு உத்தரவிட,, அவனுடைய அனுமதி இல்லாமலேயே “ வாங்க மான்சி” என்று அவளை உள்ளே அழைத்தது அவன் உதடுகள் கதவைத் தள்ளிக்கொண்டு உள்ளே நுழைந்த மான்சி அவனை நிமிர்ந்து பார்த்து “ குட்ஈவினிங் சார்” என்று புன்னகை செய்ய சத்யன் மறுபடியும் அந்த புன்னகையில் மயங்கிப்போனான்,, பதிலுக்கு புன்னகை செய்யவேண்டும் என்றுகூட தோன்றாமல்,

புன்னகை சிந்தும் அவளின் சிவந்த இதழ்களையே வெறித்துப் பார்த்துக்கொண்டு இருந்தான் அவனின் பார்வை மான்சியை கூர் அம்புகள் கொண்டு தாக்க,, சங்கடமாக தலைகுனிந்து “ ஈவினிங் உங்களை வந்து பார்த்துட்டு போகச் சொன்னீங்களாம் சார்” என்றாள் மெல்லிய குரலில் இப்போது அவளின் தேன் குலைத்த குரல் அவனை மயக்கியது,, ஆனாலும் அவளுக்கு பதில் சொல்லவேண்டும் என்று அறிவு அறிவுருத்த,, “ வேலை பிடிச்சிருக்கான்னு கேட்கத்தான் வரச்சொன்னேன்” என்றான்

சத்யன் சட்டென்று முகம் மலர “ ம் பிடிச்சிருக்கு சார்,, சூப்பர்வைசர்னதும் முதல்ல பயமா இருந்துச்சு,, ஆனா எல்லா ஸ்டாப்ஸ்ம் நல்லா பழகுறாங்க,, சுகன்யா மேடம் வேலை பத்தி நல்லா சொல்லிக் குடுத்தாங்க,, இன்னும் ரெண்டு நாள்ல ஓரளவுக்கு கத்துக்குவேன் சார்” என்று மான்சி உற்ச்சாகமாக பேசினாள் சத்யன் பேசும் அவள் செவ்வாய்யையே பார்த்தான்,,



அப்போதுதான் இரண்டு விஷயங்களை அவன் கண்டுபிடித்தான்,, ஒன்று அவள் மேலுதட்டில் வலதுபக்கம் ஒரு நூலின் நுனியளவு சிறு மச்சம் இருந்தது,, இரண்டாவது ,, அவள் பேசும் போது தெரிந்த இடைவெளியில் அவள் பற்களில் ஒன்று சிங்கப்பல் என்று தெரிந்தது

1 thought on “மனசுக்குள் நீ – பாகம் 05 – மான்சி தொடர் கதைகள்”

Leave a Comment

Ads Blocker Image Powered by Code Help Pro

Ads Blocker Detected!!!

We have detected that you are using extensions to block ads. Please support us by disabling these ads blocker.

Powered By
100% Free SEO Tools - Tool Kits PRO
error: read more !!