மனசுக்குள் நீ – பாகம் 61

சத்யனுக்கு அதிர்ச்சியாக இருந்தது, இத்தனை நாள் உறவில் மான்சி ஒருமுறை கூட இப்படி நடந்துகொண்டதில்லை, நான் முத்தமிட்டது அவளுக்கு ஏன் பிடிக்கவில்லை? என்ற குழப்பத்தோடு சமையலறைக்கு போனான்

கஷ்ட்டப்பட்டு ரஞ்சனா ஊட்டிவிட்டு போன சாப்பாடு மொத்தத்தையும் வாந்தி எடுத்துவிட்டு முகத்தை தொடைத்துக்கொண்டு சமையல் மேடையில் இருந்த ஊறுகாய் பாட்டிலை எடுத்து திறந்து ஊறுகாயை விரலால் வழித்து நாக்கில் தடவிக்கொண்டு சப்புக்கொட்டினாள் 

அவள் அருகே வந்த சத்யன் அவள் தோளைத் தொட்டு “ ஏன் மான்சி ஓடி வந்துட்ட,, ஏன் வாந்தியெடுத்த, பிடிக்கலையா மான்சி” என்று கவலையுடன் கேட்டான்

“ பின்னே இவ்வளவு சிகரெட் வாசனையோட வந்து கிஸ் பண்ணா வாந்தி வராமல் என்ன பண்ணும்” என்று சலிப்போடு கூறிய மான்சி மறுபடியும் ஊறுகாயை தொட்டு நாக்கில் தடவினாள்

“ இத்தனை நாளா அப்படித்தானே குடுத்தேன், இப்ப மட்டும் ஏன் பிடிக்காமல் போச்சு” என்றான் சத்யன்

அவன் குரலில் ஒரு வெறுமை தென்பட பட்டென்று நிமிர்ந்து அவனை பார்த்த மான்சி அவன் நெஞ்சில் சாய்ந்துகொண்டு “ அதுக்கு நான் என்ன செய்றது சத்தி, எனக்கு என் புருஷனோட எல்லா வாசனையும் பிடிக்கும், ஆனா உங்க பிள்ளைக்கு சிகரெட் வாசனை பிடிக்கலை போலருக்கு, அதுக்கு நீங்க அவனைத்தான் கேட்கனும்” என்று கிசுகிசுப்பாக கூறினாள்



சத்யனுக்கு அவள் கூறியதன் விளக்கம் புரிய சில நிமிடங்கள் ஆனது, புரிந்ததும் எந்த ஆர்பாட்டமும் இல்லாமல் அவளை அணைத்துக்கொண்டு அமைதியாக இருந்தான்,, அவன் தனிமை வாழ்க்கைக்கு மான்சி முற்றுப்புள்ளி வைத்திருந்தாலும் தனக்கென்று ஒரு குழந்தையும் வரப்போகிறது என்ற செய்தி அவனுக்கு மிகுந்த சந்தோஷத்தை கொடுத்தது

அன்றிலிருந்து மான்சியை நெஞ்சில் வைத்து தாங்கினான்,, அவளுக்கு என்ன தேவை என்பதை புரிந்து நடந்துகொண்டான், ஆனாலும் மான்சி எப்போதுமே ஒரு மாதிரி முகத்தை வைத்துக்கொண்டு இருக்கவே அன்று இரவு படுக்கையில் “ என்னாச்சும்மா “ என்று விசாரித்தான்

“ எனக்குத்தான் அம்மா இல்லை, மாமியாராவது கூட இருப்பாங்கன்னு நெனைச்சேன் அவங்களும் போய்ட்டாங்க, இப்போ சின்ன மாமியார் கூடயாவது இருக்கலாம்னு பார்த்தா அதுக்கும் கொடுப்பினை இல்லை, இந்த மாதிரி நிலைமையில் இப்படி தனியா இருந்து கஷ்டப்படனும்னு என் தலையெழுத்து போலருக்கு, விடுங்க” என்று சலிப்பாக கூறிவிட்டு திரும்பி படுத்துக்கொண்டாள்
சத்யனுக்கு என்ன பேசுவது என்று தெரியவில்லை, ஒன்றும் புரியாமல் தூங்கிப்போனான்

மறுநாள் ஆபிஸில் பகல் பதினோரு மணிக்கு பியூன் வந்து “ ஒரு அம்மா உங்களை பார்க்க வந்திருக்காங்க” என்றான்

யாராயிருக்கும் என்ற குழப்பத்தோடு “ சரி வரச்சொல்” என்றான்

வந்தது ரஞ்சனா தான்,, சத்யன் அதிர்ச்சியுடன் எழுந்துவிட்டான்,, ரஞ்சனா அவனை பார்த்து கைகூப்பி “ என்னை வெளிய மட்டும் அனுப்பிறாத சத்யா,, நான் சொல்ல வந்ததை மட்டும் கேட்டுட்டு அப்புறமா போகச்சொல்லு” என்று கண்ணீருடன் கேட்க

முன்பிருந்த சத்யனாக இருந்திருந்தால் வெளியே போங்க என்று கத்தியிருப்பான்,, ஆனால் இப்போது இருக்கும் சத்யன் மென்மையானவன், ஒரு மனைவிக்கு நல்ல கணவன்,, இன்னும் சில மாதங்களில் ஒரு ஆரோக்கியமான குழந்தைக்கு தகப்பனாக போகிறவன்,, இப்போதெல்லாம் அவன் மனதில் நிறைய ஆசாபாசங்கள் உண்டாகியிருந்தது

எதிரில் இருந்த இருக்கையை கைகாட்டிவிட்டு அமைதியாக அமர்ந்தான்,, ரஞ்சனா கண்களை துடைத்துக்கொண்டு அமர்ந்தாள்,, சத்யன் மேசையில் இருந்த தண்ணீரை ரஞ்சனாவின் பக்கம் நகர்த்தி “ எடுத்துக்கங்க” என்றான் தலை குனிந்து.



ரஞ்சனாவுக்கும் இப்போது தண்ணீர் தேவைதான்,, எடுத்து கடித்துவிட்டு க்ளாஸை மேசையில் வைத்தாள் , பிறகு தொண்டையை சரிசெய்து கொண்டு “ என்மேல உனக்கு எவ்வளவு ஆத்திரம் இருந்தாலும் அதையெல்லாம் மறந்து, என்னை உன் வீட்டுல தங்க அனுமதிக்கனும், இந்த நிலையில மான்சியை அங்கே தனியா விட்டுட்டு என்னால வீட்டு தூங்ககூட முடியலை, அந்த வீட்டு வேலைக்காரியாகவது எனக்கு அனுமதி வேனும், பகல்ல மான்சியை கவனமா பார்த்துக்கிறேன் நீ வீட்டுக்கு வந்ததும் உன் எதிரில் கூட வரமாட்டேன் ராஜம்மா தங்கிய ரூம்ல தங்கிக்கிறேன், தயவுசெய்து எனக்கு அனுமதிகொடு சத்யா” என்று கண்ணீர் மல்க கைகூப்பி கெஞ்சினாள் ரஞ்சனா

சத்யன் எதுமே பேசாமல் அமைதியாக இருக்க ,, ரஞ்சனா கண்ணீரை புறங்கையால் துடைத்துக்கொண்டு “ நான் உங்கப்பாவை கல்யாணம் பண்ணதால தானே உனக்கு இந்த கோபம்,, என்னோட கழுத்தில் இருக்கும் இந்த தாலியின் மீது சத்தியம் பண்ணி சொல்றேன், வசந்தி அக்காவோட அனுமதியோட முழு சம்மதத்தோட தான் எங்களுக்கு கல்யாணம் நடந்தது, இன்னும் எல்லா உண்மையையும் சொல்லனும்னு தான் நெனைக்கிறேன், ஆனா உங்கம்மாவுக்கு நான் செய்த சத்தியம் என்னை தடுக்குது சத்யா, என்னை நம்பு” என்று மறுபடியும் கெஞ்சினாள்

சீட்டில் இருந்து எழுந்த சத்யன், “ நான் யோசிச்சு சொல்றேன், நீங்க வீட்டுக்கு போங்க” என்றான்

ரஞ்சனா அதற்கு மேல் அவனிடம் பேசி பயனில்லை என்று புரிந்து, அங்கிருந்து வெளியேறினாள் ,, ரஞ்சனா போனதும் சத்யன் வெகுநேரம் யோசித்தான், தன்னுடைய வரட்டு கவுரவம் மான்சியையும் அவள் வயிற்றில் இருக்கும் குழந்தையையும் பாதிக்ககூடாது என்று முடிவுசெய்தான்

அன்று மதிய உணவிற்கு வந்த சத்யன், மான்சியை சில உடைகளை எடுத்துக்கொண்டு கிளம்புமாறு கூறினான், மான்சி எங்கே போகிறோம் என்று கேட்க..



“ எங்கவீட்டுக்கு போறோம்” என்று கூறிவிட்டு வெளியே வந்து காரை கிளப்பினான், மான்சி வேகமாக ஒரு பெட்டியுடன் வந்து காரில் ஏறிக்கொண்டாள்
சத்யன் காரில் எதுவுமே பேசவில்லை, மான்சியும் அவனை துருவவில்லை,, கிருபாவின் வீட்டுக்கு வெளியே காரை நிறுத்திய சத்யன் இறங்கி மான்சியை அழைத்துக்கொண்டு உள்ளே போனான்,

ஹாலில் இருந்த கிருபா இருவரையும் பார்த்துவிட்டு எழுந்து நிற்க்க, சத்யன் அவரருகே வந்து “ இவளை ஜாக்கிரதையா பார்த்துக்கங்க,, நான் அடிக்கடி வந்து பார்த்துட்டு போறேன்” என்று சொல்லிவிட்டு மனைவியிடம் திரும்பி “ மான்சி ஜாக்கிரதையா இரு, எதுவாயிருந்தாலும் எனக்கு போன் பண்ணி சொல்லு,, நான் கிளம்புறேன்” என்று சொல்லிவிட்டு அங்கிருந்து உடனே கிளம்பிவிட்டான்

அன்று இரவு மான்சி இல்லாமல் அவனால் உறங்கமுடியவில்லை,, ஏன் அங்கே போய் விட்டுட்டு வந்தோம் என்று இருந்தது,, அன்று பொழுது எப்போது விடியும் என்று காத்திருந்து விடிந்ததும் மான்சியைத் தேடி ஓடினான்

மாடியில் இருந்த அறையில் மான்சி படுத்திருப்பதாக அனிதா கூற, சத்யன் மான்சியிடம் ஓடினான், படுத்திருந்தவள் அவனை பார்த்ததும் எழுந்து அமர்ந்து “ எனக்கு தெரியும் நீங்க வந்துடுவீங்கன்னு” என்று அவனை நோக்கி கைகளை விரிக்க, சத்யன் ஒரு குழந்தையைப் போல அவள் கைகளில் அடைக்கலம் ஆனான்

Leave a Comment

Ads Blocker Image Powered by Code Help Pro

Ads Blocker Detected!!!

We have detected that you are using extensions to block ads. Please support us by disabling these ads blocker.

Powered By
Best Wordpress Adblock Detecting Plugin | CHP Adblock
error: read more !!