மனசுக்குள் நீ – பாகம் 07 – மான்சி தொடர் கதைகள்

அவள் போகாமல் நின்று அவனையே திகைப்புடன் பார்த்தாள்,, அவன் சொன்னதன் அர்த்தம் புரியாத குழப்பம் அவள் முகத்தில் தெரிந்தது

அப்போது “ எஸ் கியூஸ் மீ ,, மே ஜ கமின் பாஸ்” என்ற கார்த்திக்கின் குரல் கேட்க

“ உள்ளே வாடா கார்த்திக்” என்றான் சத்யன், அவன் குரலில் உற்சாகம் வழிந்தது
கார்த்திக் கதவை திறந்து உள்ளே வர,,

“ நான் வர்றேன் சார்” என்று கூறிவிட்டு மான்சி வெளியேறினாள்



உள்ளே வந்த கார்த்திக் சத்யனின் முகத்தில் எதைக்கண்டானோ “ கங்ராட்ஸ் பாஸ்” என்றான்
சட்டென்று புருவம் உயர்த்தி அவனைப் பார்த்த சத்யன் “ எதுக்குடா வாழ்த்து சொல்ற” என்று கேட்டான், ஒன்றும் தெரியாதவன் போல…

கார்த்திக்கும் அவனை புரிந்துகொண்டு “ என்னன்னு தெரியலை பாஸ் , ஏதோ சொல்லனும்னு தோனுச்சு அதான்” என்றான், அசடு வழிய,

இதற்கு சத்யன் எதுவும் பதில் சொல்லவில்லை “ சரி கிளம்பலாமா கார்த்திக் நேரமாச்சு” என்று எழுந்துகொண்டான்

“ நானும் அதுக்குத்தான் வந்தேன், இவ்வளவு நேரமாச்சே பாஸ் இன்னும் கிளம்பலையே என்னாச்சுன்னு கேட்கலாம்னு வந்தேன்” என்று தான் வந்ததற்கான காரணத்தை சொல்லியவன் சத்யனின் டேபிளில் இருந்தவற்றை ஒழுங்குபடுத்திவிட்டு “ வாங்க பாஸ் போகலாம்” என்றான்

அவன் பேச்சில் சூட்சுமம் இருப்பது போல் சத்யனுக்கு தோன்றினாலும்,, எதுவும் கேட்காமல் கிளம்பினான்



காரில் சென்று கார்த்திக்கை அவன் வீட்டில் இறக்கியவன் “ டேய் கார்த்திக் அனிதாகிட்ட எதையாவது உளறி வைக்காத,, எனக்கே என்னன்னு இன்னும் புரியலை, அதனால யார்கிட்டயும் எதையும் சொல்லி வைக்காத புரியுதாடா” என்று தன் மனதை ஓரளவுக்கு மறைக்காமல் வெளிப்படுத்தினான்

கார்த்திக் முகத்தில் ஒரு நிறைவான புன்னகையுடன் “ எனக்கு புரியுது பாஸ் நீங்களா சொல்றவரைக்கும் நான் யார்கிட்டயும் சொல்லமாட்டேன்,, ஆனா மதியம் நீங்க கேன்டீன்ல சொன்ன மேட்டர் இப்படி ஒரே நாளில் பிசுபிசுத்து போகும்னு நான் நினைக்கவே இல்லை பாஸ் ” என்றான் குறும்பு வழியும் குரலில்

திருமணத்தை வேண்டாம் என்று ஒதுக்கியதை தான் கார்த்திக் குறிப்பிடுகிறான் என்று சத்யனுக்கு புரிந்தாலும் அந்த பேச்சை வளர்க்க விரும்பாமல் “ ஏன்டா இது வீடுடா இங்கயும் பாஸ் தானா? சத்யான்னு கூப்பிடுடா ” என்று சலிப்புடன் சத்யன் சொல்ல



“ இல்ல பாஸ் இப்போ பேர் சொல்லி கூப்பிட்டுட்டு, அப்புறம் அதே பழக்கம் மில்லுலயும் வந்தா ரொம்ப சங்கடம்,, அதனால எப்பவுமே நீங்க என் பாஸ்தான்” என்றான் கார்த்திக் தெளிவாக

“சரி எப்படியாவது போ , நான் கிளம்புறேன்” என்று கூறிவிட்டு கிளம்பினான்

வீட்டுக்கு வந்து வேலைக்காரன் கொடுத்த காபியை ருசி அறியாமல் குடித்துவிட்டு,, தனது அறைக்கு போய் உடைகளை மாற்றிக்கொண்டு கட்டிலில் விழுந்தான்

அவன் மனதில் என்றுமில்லாத சந்தோஷ உணர்வு,, ஏன் ரயில்நிலையத்தில் மான்சியையும் அவள் அண்ணனையும் பார்த்து கோபப்பட்டோம் எரிச்சலைடைந்தோம் என்று அவனுக்கு தெளிவாகப் புரிந்தது,, புரிந்த விஷயம் அவனுக்கு ஆச்சர்யமாக இருந்தது,, அதெப்படி முதல் பார்வையிலேயே ஒரு பெண்ணை பிடித்துப்போய்விடும் என்று அவனது அறிவு மனதை கேள்வி கேட்டது

அவள் முகத்தை பார்த்த அந்த வினாடியில் தன் மனதில் ஏற்ப்பட்ட அதிர்வை இப்போது நினைத்துப்பார்த்தான் சத்யன்,, அவள் முகத்தில் இருந்த அந்த சோகத்தை மீறிய வசீகரம்தான் அவள் பக்கம் தன்னை ஈர்த்ததா?,, அல்லது அந்த மெல்லிய மெலிந்த தேகம் பரிதாபத்தை ஏற்படுத்தியதா?,, ஆனால் ஒன்று மட்டும் நிச்சயம் அவளை முதல் பார்வையிலேயே பிடித்துப்போனதால்தான் காரணமின்றி அவ்வளவு எரிச்சலும் பொறாமையும் வந்தது போலிருக்கு,, என்று நினைத்தான் சத்யன்



கட்டிலில் புரண்டு படுத்த சத்யனுக்கு தனது அம்மா வசந்தியின் ஞாபகம் வந்தது,, அம்மாவும் இப்படித்தான் மனதில் இருப்பதை முகத்தில் காட்டிவிடுவார்கள,, அதேபோலத்தான் மான்சியும் என்று நினைத்த சத்யன், கட்டிலில் இருந்து இறங்கி டிரசிங் டேபிளில் இருந்த வசந்தியின் புகைப்படத்தை எடுத்து வந்து தன் நெஞ்சில் வைத்துக்கொண்டு கட்டிலில் படுத்தான், அவன் மனக்கண் முண் தன் தாயின் கடைசி நாட்கள் படமாக ஓடியது

அவனுக்கு தெரிந்ததெல்லாம் அவன் அம்மா ஒரு தேவதை,, வசந்தி இறக்கும் போது சத்யனுக்கு பணிரெண்டு வயது,, அவனுடைய எட்டாவது வயதுவரை அவர்களின் குடும்பத்தை போல ஒரு குடும்பம் உலகிலேயே இல்லை என்பது போல சந்தோஷத்தை குத்தகைக்கு எடுத்திருந்தார்கள்,, சத்யனுக்கு தனது அப்பாவின் நெஞ்சில் படுத்தால்தான் தூக்கமே வரும், இரவில் கிருபானந்தன் நெஞ்சில் உறங்கும் சத்யன் விழிக்கும்போது பக்கத்தில் இருக்கும் கட்டிலில் இருப்பான்

“ஏன்ப்பா என்னை இங்க தூங்க வச்சீங்க” என்று கால்களை உதறி அழும் மகனை சமாதானம் செய்யமுடியாமல் வசந்தி தவிப்பாள்,, ஆனால் கிருபாவோ “ டேய் செல்லம் உனக்கு தங்கச்சி பாப்பா வேனும்னு சொன்னியே,, அதை பத்தி தான்டா அம்மாகிட்ட நைட்டெல்லாம் பேசினேன்” என்று மனைவியைப் பார்த்து குறும்புடன் கண்சிமிட்டியபடி மகனுக்கு விளக்கம் சொல்வார்



“அய்யோ குழந்தை கிட்ட போய் என்ன சொல்றீங்க” என்று நெற்றியில் அடித்துக்கொண்டு வெளியே போய்விடுவாள் வசந்தி ,,

Leave a Comment

Ads Blocker Image Powered by Code Help Pro

Ads Blocker Detected!!!

We have detected that you are using extensions to block ads. Please support us by disabling these ads blocker.

Powered By
100% Free SEO Tools - Tool Kits PRO
error: read more !!