மனசுக்குள் நீ – பாகம் 37

இருவரும் வெகுநேரம் இறுக்கிக்கொண்டு கிடக்க,, இன்னும் கிருபாவின் உடல் நடுங்கியது, குளிரால் அல்ல,, உணர்ச்சிகளின் உச்சத்தால் உடல் நடுங்கியது,, அவளை இனிமேல் பிரியவே கூடாது என்பதுபோல் மேலும் மேலும் இறுக்கினான்,, அவளோ இவனுக்குள் புதைந்து விடுபவள் போல் அவன் நெஞ்சில் ஆழப்புதைந்தாள் 

இருவரும் தங்களை மறந்து கிடக்க,, குழந்தையின் சினுங்கள் அவர்களை உசுப்பியது,, ரஞ்சனா அசையவில்லை, கிருபாவை பிணைந்து கொண்டு அப்படியே கிடந்தாள்,,

ஒருசில வினாடிகள் தாமதித்த கிருபா, குழந்தையின் சினுங்கள் அதிகமாகவே சட்டென்று அவள் மீதிருந்து சரிந்து இறங்கினான்,, கட்டிலில் இருந்து தாவி இறங்கியவன் அவிழ்த்தெறிந்த வேட்டியை தேடி எடுத்து இடுப்பில் முடிந்தான், குழந்தையின் அருகே போய் சரிந்து படுத்து “ என்னடா அம்மு,, ஏன் அழறீங்க,, எங்கம்மா தானே நீங்க” என்று சிறிது நேரம் கொஞ்சிவிட்டு, பக்கத்தில் இருந்த பால் புட்டியை எடுத்து குழந்தையின் வாயில் வைத்தான்



குழந்தை தூக்கத்திலேயே பாலை வேகமாக குடித்தது,, கிருபா மெதுவாக குழந்தையை வருடியவாறு, பக்கத்தில் அதன் உச்சியில் தலைவைத்து அணைத்தவாறு தரையில் படுத்துக்கொண்டான்,,

அவன் வருடலில் சுகமாக குழந்தை பாலை குடித்து முடித்ததுதான் நிமிர்ந்து ரஞ்சனாவை பார்த்தான், இவன் எப்படி விட்டுவிட்டு வந்தானோ அப்படியே கிடந்தாள், முழங்காலுக்கு மேலே சுருட்டி விடப்பட்ட பாவாடை,, இவனின் அதிதீத வேகத்தால் மேல் புறமாக இரண்டு ஊக்குகள் பிய்த்துக்கொண்ட ரவிக்கை,, அதன் வழியாக திமிறித் தெரிந்த அற்புதங்கள்,, இவன் அவள் கைகளை விலக்கித் தள்ளிவிட்டு இறங்கியதால், பக்கவாட்டில் துவண்டு கிடந்த மலர் கரங்கள்,, இவையெல்லாவற்றையும் விட அவளின் மூடிய கண்களில் இருந்து வழிந்த கண்ணீர்,,

அழகோவியமாக கிடந்தவளை பார்த்ததும், குழந்தையை மெதுவாக தட்டித் தூங்க வைத்துவிட்டு எழுந்து கட்டிலருகே வந்து மறுபடியும் அவள் அழகை ரசித்தான், ஆனால் அந்த கண்ணீர் அவனுடைய ரசிப்புக்கு முற்றுப்புள்ளி வைத்தது,

மெதுவாக கட்டிலில் ஏறி அவள் பக்கத்தில் சரிந்தவன், அவள்மீது பாதி உடலை சாய்த்து அவள் இடுப்பில் கைவிட்டு தன் பக்கமாக திருப்பினான், அவள் முகத்தை நிமிர்த்தி கண்ணீர் வடித்த கண்களில் முத்தமிட்டு “ என்னாச்சு ரஞ்சனா ஏன் இந்த கண்ணீர்,, என்னையும் இன்னோரு குருமூர்த்தின்னு நெனைச்சிட்டயா? வேனாம் ரஞ்சனா அதுபோல் நினைச்சு என் காதலை அசிங்கப்படுத்தாதே,, எனக்காக நீ செய்யும் ஒவ்வொரு செயலிலும் நான் வசந்தியை பார்க்கிறேன் ரஞ்சனா, எனக்கு நீவேற அவ வேற இல்லை, நீதான் வசந்தி, அவள்தான் நீ,, இதைமட்டும் இப்போ நம்பு ரஞ்சனா, நான் உன்னை ஏமாத்த மாட்டேன்” என்று கிருபா கிசுகிசுப்பாக அவள் காதுகளில் சொல்லிகொண்டே போக..

சட்டென்று கண்விழித்த ரஞ்சனா தன் வலது கை விரல்களால் அவன் வாயைப்பொத்தி, இடது கையால் அவனை சுற்றி வளைத்து தன்னோடு இறுக்கிக்கொண்டாள்



“ ரஞ்சனா, என் கண்மணியே” என்று ஏக்கத்தோடு அழைத்து கிருபாவும் அவளை அணைத்துக்கொண்டான்

அதன்பின் அவர்கள் உறங்கும்போது ஜன்னல் வழியாக கீழைச் சூரியனின் கங்குல்கள் வயல்வெளியின் பின்னனியில் தெரிந்தது,

கிருபா சோம்பலாய் கண்விழித்தபோது அருகில் ரஞ்சனா இல்லை, கீழே படுத்திருந்த குழந்தையும் இல்லை, இவன் போர்த்தியிருந்த போர்வை இடுப்பில் சுற்றப்பட்டு இருக்க வேட்டி பக்கத்தில் கிடந்தது,

போர்வையை விலக்கி எழுந்த கிருபா வேட்டியை எடுத்து கட்டிக்கொண்டு அறையைவிட்டு வெளியே வந்தான்,, ஹாலில் இருந்த கடிகாரத்தில் மணி எட்டு என்று காட்டியது,, “ ச்சே எவ்வளவு நேரம் தூங்கிட்டேன்” என்றபடி ரஞ்சனாவை தேடி பின்கட்டு வந்தான்

ரஞ்சனா சமையல் அறையில் வேலையாக இருந்தாள்,, அவள் பின்புறமாக போய் நின்று அவளை அணைக்கலாமா, என்று ஆர்வத்துடன் நெருங்கினான், அவளை தொடுமுன் சட்டென்று திரும்பி விலகி நின்றாள்

அவனும் பிரேக்கடித்தாற்ப் போல் நின்று அசடு வழிய சிரித்து “ ரொம்ப நேரம் தூங்கிட்டேன்,, அனிதா எங்க ரஞ்சனா ” என்றான்

அவனைவிட்டு சில அடிகள் நகர்ந்தவள் “ தாத்தா வயலுக்கு தூக்கிட்டு போனார்,, நீங்க போய் பல் தேய்ச்சுட்டு வாங்க காபி கலந்து வைக்கிறேன்” என்றாள் எந்த எதிர்பார்ப்பும் இல்லாத குரலில் ..

கிருபாவுக்கு ஏமாற்றமாக இருந்தாலும் மறுபேச்சின்றி பாத்ரூமுக்கு போனான்,, அவள் பல் மட்டும் தேய்ச்சுட்டு வரச்சொன்னா,, பழையகாலத்து பாய்லரில் காய்ந்த வெண்ணீரில் குளித்துவிட்டே வந்தான்



தலையை துவட்டிக்கொண்டே கூடத்துக்கு வந்தவன் அங்கே விளையாடிக்கொண்டிருந்த அனிதாவை பார்த்ததும் ஆர்வத்துடன் தூக்கிக்கொண்டான், தன் மூக்கால் குழந்தையின் மூக்கை உரசியபடி “ என் சின்னக் கண்ணம்மா எப்போ எழுந்தீங்க,, ம்ம் குளிச்சுட்டீங்களா என் செல்லக்குட்டி” என்று கொஞ்சினான்

குழந்தையும் இவனின் ஒரு வார தாடியை தடவி அவன் மூக்கை கடிக்க முயன்றது,, அனிதாவுக்கு கிருபாவின் கையில் இருப்பதென்றால் அவ்வளவு சந்தோஷம்,, கையைத் தட்டித்தட்டி மழலையில் “ அப்பா அப்பா” என்று அழைத்து சிரித்தாள்

காபியுடன் வந்த ரஞ்சனா அவனிடமிருந்து குழந்தையை வாங்கிக்கொண்டு, காபியை நீட்ட,… கிருபா அதை வாங்கி ஸ்டூலில் வைத்துவிட்டு, அவளை கையைப் பிடித்து இழுத்தான்,, குழந்தையுடன் அவன் மார்பில் வந்து விழுந்தாள் ரஞ்சனா

அவள் முகத்தை நிமிர்த்தி பார்த்தான், ரஞ்சனா தலைக்கு குளித்து கூந்தலை தளரவிட்டிருந்தாள்,, நெற்றியில் காலணா அளவுக்கு சிவப்பு நிற பொட்டு வைத்திருந்தாள்,, வேறு எந்த அலங்காரமும் இன்றி இயல்பாக கன்னங்களில் புதுப் பெண்ணின் வெட்கச் சிவப்பு இருந்தது, இரவு முழுவதும் கண்விழித்ததால் கண்களில் சோர்வு இருந்தது,, இவனை இரவெல்லாம் சுமந்த களைப்பு முகத்தில் தெரிந்தது,, மொத்தத்தில் ஒரு முதலிரவு முடிந்த பெண்ணின் சாயல் அவள் முகத்தில் இருந்தாலும், அவை எல்லாவற்றையும் விட அடிபட்ட அவமானம் அதிகமாக இருந்தது, கிருபா அவளையே உற்றுப்பார்த்தான் பிறகு அவளை தன்பிடியில் இருந்து விட்டுவிட்டு “ சரி போய் வேலையைப் பார்” என்று மட்டும் கூறிவிட்டு சோபாவில் அமர்ந்து காபியை குடித்தான்

பிறகு படுத்திருந்த அறைக்கு போய் தனது செல் போனை எடுத்துக்கொண்டு காருக்கு வந்தான், கார் டிக்கியை திறந்து நேற்று மருத்துவமனையில் தங்குவதாக இருந்தால் தேவைப்படும் என்று எடுத்து வைத்த தனது உடைகள் அடங்கிய லெதர் பேக்கை எடுத்துக்கொண்டு வந்தான்

வீட்டு வாசலில் நின்று மருத்துவமனைக்கு போன் செய்து வசந்தி இருக்கும் அறைக்கு இணைப்பு கொடுக்கச் சொன்னான், உடனடியாக கொடுத்ததும் வசந்தியின் குரல் கேட்டது,,

“ என்னம்மா எப்படியிருக்க,, நைட் மழை அதிகமா இருந்தது, காய்ச்சலும் குறையலை அதனால இங்கயே தங்கிட்டேன், இன்னும் இரண்டு மணிநேரத்தில் அங்க இருப்பேன்” என்று அவளுக்கு தகவல் சொன்னான்



கிருபா தோட்டத்து வீட்டில் இருக்கிறான் என்றதும், வசந்தியிடம் பேச்சு இல்லாமல் மவுனமே பதிலாக வந்தது,, அவளது மவுனத்தை வைத்தே நடந்ததை ஓரளவுக்கு யூகித்திருப்பாள் என்று கிருபாவுக்கு புரிந்தது

இவனுக்கு கண்ணீர் வரும்போல இருநதது “ என்னம்மா என்னை வெறுத்துட்டயா,, நான்… நான்… ரொம்ப கேவலமானவன் நெனைக்கிறயா?, நான் தவறானவன் இல்ல வசந்தி,, என் மனசை கட்டுப்படுத்தும் தைரியம் எனக்கு இல்லை,, என்னை மன்னிச்சுடும்மா” என்று கண்ணீர் குரலில் மனைவியிடம் இறைஞ்சினான் கிருபா

Leave a Comment

Ads Blocker Image Powered by Code Help Pro

Ads Blocker Detected!!!

We have detected that you are using extensions to block ads. Please support us by disabling these ads blocker.

Powered By
100% Free SEO Tools - Tool Kits PRO
error: read more !!