மாலை நேரம். வீட்டின் முன்புறத்தில் மீனாட்சி தனியாக உட்கார்ந்திருந்தாள். அவள் கண்கள் தூரத்தில் எங்கோ பார்த்தபடி இருந்தன. விருமன் உள்ளே நுழைந்தபோது அவள் முகத்தில் ஒரு மெல்லிய புன்னகை படர்ந்தது.
“வந்துட்டியா… என் உயிரே.” அவள் எழுந்து அவனை நெருங்கினாள். அவன் கைகளைப் பிடித்து தன் மார்பில் வைத்தாள். “உன் தொடுதல் இல்லாமல் ஒரு நாள் கூட என்னால் இருக்க முடியாது போல இருக்கு.”