மனசுக்குள் நீ – பாகம் 45

அவள் அமைதியை தவறாக கனித்த சத்யன் “ சரி என் பிரச்சனையை விடு உன் பிரச்சனைக்கு வரலாம், இப்போ என்ன செய்யலாம் சொல்லு” என்றான்

“ வேறென்ன செய்றது,, நான் ஊருக்கு போறேன், யாரையாவது என்கூட துணையா அனுப்புங்க அதுபோதும்” என்றாள்

“ அப்போ நான்?” என்று கேட்டுவிட்டு அவளை கூர்ந்து பார்த்தான்,,

அவன் முகத்தை நிமிர்ந்து பார்த்த மான்சி “ ஏன் உங்களுக்கு என்ன,, எனக்கு புரியலை” என்று சத்யனை கேள்வியாக பார்க்க

“ இல்ல உன்னை ஊருக்கு அனுப்பிட்டு நான் என்ன பண்றது,, அதையும் சொல்லிட்டு போயிடு” என்று சத்யன் விரக்தியாக கேட்டான்..



அவன் வார்த்தைகளும் பார்வையும் இதயத்தை ஊடுருவ “ என்ன சத்யா இது” என்று அவனை இறுக்கி அணைத்துக்கொண்டாள்

அவனை இனிமேல் பிரியவே கூடாது என்ற எண்ணத்தில் இவள் தன் பலம் முழுவதையும் கைகளுக்கு கொண்டுவந்து அவளை வளைத்து இறுக்கினாள்
அவன் வார்த்தைகள் மான்சியை உருக்கிவிட்டது, அவன் முகத்தை கைகளில் ஏந்தி சரமாரியாக முத்தத்தை வாரி இரைத்தாள்,, அவள் வேகத்தில் சத்யன் திணறிப்போனான்

சிறிதுநேரத்தில் தனது கட்டுப்பாட்டை இழந்த சத்யன் அவளை அப்படியே கட்டில் தள்ளி மேலே படர்ந்து முத்தத்தை வரைமுறையற்று வாரி வழங்கினான்,, அவளுடைய இதழ்த்தேனை உறிஞ்சினான்,, அவன் கைகள் அவள் உடலில் தாறுமாறாக தடவி பார்க்க,, கால்கள் அவள் இடுப்பு வரை உயர்ந்து சுற்றி வளைத்தது

மான்சி ஒரு அங்குலம் கூட அசையமுடியாமல் அப்படியே கிடந்தாள்,, அவன் உறிஞ்சிய வேகத்தில் அவள் உதடுகள் மரத்துப்போனது,, அவன் சட்டை காலரை பற்றிக்கொண்டு மூச்சுக்கு திணறும் நிலை ஏற்ப்பட்டது,

அவ்வளவு வேகத்தில் வேட்கையில் இருந்தவன், சட்டென்று சுதாரித்துக்கொண்டு அவளை விட்டுவிட்டு எழுந்து அமர்ந்தான்,, பிறகு அவளையும் கைகொடுத்து எழுப்பி கலைந்திருந்த கூந்தலை சரி செய்தான்

“ ம் உன் டிரஸ் எல்லாத்தையும் எடுத்துகிட்டு கிளம்பு போகலாம்” என்று அவளை எழுப்பி நிறுத்தினான்

அவன் சொன்னதற்கு பணிந்து எல்லாவற்றையும் எடுத்து வைத்தாலும் “ எங்கப்போறோம்” என்று கேட்டாள்



எடுத்து வைக்க அவளுக்கு உதவியவாறே “ இனிமேல் நீ எங்க இருக்கனுமோ,, அங்கே போறோம்” என்றான் சத்யன், அதன்பிறகு மான்சி எதுவுமே கேட்கவில்லை,, எல்லாவற்றையும் எடுத்துக்கொண்டு இருவரும் கீழே வந்தனர்,,

கீழ்வீட்டு கதவை தட்டிய சத்யன் அந்தம்மாள் கதவை திறந்து வந்ததும் “ நான் சத்யன் அனிதாவோட அண்ணன்,, மான்சிய என் வீட்டுக்கு கூட்டிட்டுப் போறேன்,, அவளைத் தேடி யாராவது வந்தா இந்த முகவரிக்கு இவளை பார்க்க தாராளமாக வரச்சொல்லுங்க” என்று கூறிவிட்டு தனது கார்டை எடுத்து கொடுத்தான்

அந்த பெண் தலையசைத்து கார்டை வாங்கிக்கொண்டதும் மான்சியின் தோளில் கைப்போட்டு தன்னுடன் அணைத்தவாறு காருக்கு போனான் , முன்புற கதவை திறந்து மான்சியை உள்ளே உட்காரவைத்து விட்டு, கதவை மூடியவன் கேட்டுக்கு வெளியே எதிரே இருந்த மரத்தடியில் இருட்டில் ஒரு சிகரெட் நெருப்பு மட்டும் ஜொலித்தது

கதவை மூடிய சத்யன் ஆத்திரத்துடன் வேகமாக மரத்தடியை நெருங்கினான், இவன் வருவதை பார்த்து நெருப்பு வட்டம் அனைந்து போக, நின்றிருந்த நபர் இருட்டில் தலைதெறிக்க ஓடினான், மான்சியை காரில் விட்டுவிட்டு அவனை தொடர்வது முட்டாள்தனம் என்பதை உணர்ந்து சத்யன் காருக்கு திரும்பினான்
இன்னும் பயந்தபடி அமர்ந்திருந்த மான்சியை இழுத்து தன் நெஞ்சில் சாய்த்துக்கொண்டான், அவளும் அவன் சட்டை காலரை பற்றிக்கொண்டு அவன் நெஞ்சில் சாய்ந்துகொண்டாள்

சத்யன் தனது வீட்டுக்குள் காரை நிறுத்திவிட்டு,, மான்சியை அழைத்துக்கொண்டு உள்ளே போனான், தனது பாட்டியின் அறைக்கதவை தட்டிவிட்டு உள்ளே போனான்,



பாட்டி கண்ணாடி போட்டுக்கொண்டு கையிலிருந்த வியாசர் பாரதத்தை படித்துக்கொண்டிருந்தார்,, சத்யனைப் பார்த்ததும் “ வா சத்யாம்மா,, என்ன கண்ணா இந்த நேரத்துல?” என்றவர் சத்யன் முதுகுக்குப் பின்னால் இருந்து வந்த மான்சியை பார்த்ததும் திகைப்புடன் பாரதத்தை வைத்துவிட்டு கட்டிலை விட்டு இறங்கினார்

மான்சி முன்னே வந்து சட்டென்று பாட்டியின் காலில் விழுந்தாள்,, அவளைப் பார்த்துவிட்டு உடனே சத்யனும் பாட்டியின் காலில் விழுந்தான்

“ அட என்ன இது,, எழுந்திருங்க ரெண்டு பேரும்” இருவரையும் தோள்தொட்டு எழுப்பிய பாட்டி “ யாருடா இந்த பொண்ணு?” என்று மான்சியை பார்த்துக்கொண்டே சத்யனிடம் கேட்டார்

மான்சி சத்யனின் பக்கத்தில் தலைகவிழ்ந்து நின்றுகொண்டாள், சத்யன் இயல்பாக அவள் தோளில் கைப்போட்டு “ நீங்க தானே கல்யாணம் பண்ணிக்கடான்னு கெஞ்சினீங்க, அதான் பாட்டி ரொம்ப கெஞ்சுறாங்களே கல்யாணம் பண்ணிக்கலாம்னு முடிவு பண்ணி இவளை கூட்டிட்டு வந்திருக்கேன், பொண்ணு நல்லாருக்கா பார்த்து சொல்லுங்க பாட்டி” என்று சத்யன் குறும்புடன் கூற

பாட்டி கண்ணாடியைத் தூக்கிவிட்டு மான்சியை ஏற இறங்க பார்த்தார், பிறகு கட்டில் அமர்ந்து “ நான் இப்பல்லாம் உன்னை கல்யாணம் பண்ணிக்க சொல்லவே இல்லையே, அப்புறம் எதுக்கு என்னை சாக்கு வைக்கிற, நீ பண்ணா பண்ணலேன்னா பிரம்மச்சாரியா இரு எனக்கென்ன வந்துச்சு” என்று பாட்டி பற்றில்லாதது போல் பேசினாலும் அவர் முகத்தில் இருந்த மலர்ச்சி அவருடைய சந்தோஷத்தை பறைசாற்றியது

சத்யன் பாட்டியின் அருகில் போய் அமர்ந்து “ பாட்டி உங்க மனசு எனக்கு தெரியும், மொதல்ல இவளை பிடிச்சுருக்கா சொல்லுங்க” என்று பாட்டி கையை பிடித்துக்கொண்டு கெஞ்சினான்



“ சரி உனக்கு இவளை எத்தனை நாளா தெரியும்?”

“ அன்னிக்கு உங்களை ரயிலேத்த வந்தேனே அப்பத்துலேருந்து தெரியும் பாட்டி, அப்புறம் மறுநாள் நம்ம மில்லுக்கே வேலைக்கு வந்தா, அனிதா வேலை கேட்டது இவளுக்குத்தான்” என்றான் சத்யன்

Leave a Comment

Ads Blocker Image Powered by Code Help Pro

Ads Blocker Detected!!!

We have detected that you are using extensions to block ads. Please support us by disabling these ads blocker.

Powered By
Best Wordpress Adblock Detecting Plugin | CHP Adblock
error: read more !!