ஆனால் சத்யன் அன்று முழுவதும் “ அம்மா பாப்பா எப்பம்மா வரும்” என்று கேட்கும் மகனை சமாதானம் செய்ய வழியின்றி தவிப்பதை குறும்புடன் பார்த்து சிரிப்பார் கிருபா
யார் கண்பட்டதோ அவர்களின் சந்தோஷம் நாளுக்கு நாள் தேய ஆரம்பித்தது,, அடிக்கடி சோர்ந்து விழும் மனைவியை எண்ணி வருந்தும் கிருபா, ஒருநாள் மயங்கி விழுந்த மனைவியை கதறியபடியே மருத்துவமனைக்கு தூக்கிச்சென்றார்
அவள் போகாமல் நின்று அவனையே திகைப்புடன் பார்த்தாள்,, அவன் சொன்னதன் அர்த்தம் புரியாத குழப்பம் அவள் முகத்தில் தெரிந்தது
அவன் தன் முகத்தையே உற்று பார்த்தது மான்சிக்கு சங்கோஜமாக இருந்தது,, மெல்ல தலைகுனிந்து “ சார் நான் கிளம்பட்டுமா?” என்றாள் மெல்ல
அவனது கோபம் கார்த்திக்குக்கு பழகி விட்டபடியால் “ சரிங்க பாஸ்,, அனிதாகிட்ட இதைப்பற்றி பேசுறேன்,, இப்போ சாப்பாடு வந்துருச்சு அதை மொதல்ல கவனிப்போம்” என்று கார்த்திக் சமாதானம் செய்யவும்,
தன் நெஞ்சில் இருந்த அனிதாவின் முகத்தை அனைத்துக்கொண்டு ” சரி விடும்மா,, போகப்போக எல்லாம் சரியாயிடும்,, எனக்கு தெரிஞ்சு பாஸ்க்கு முன்னவிட இப்போ எவ்வளவோ கோபம் எல்லாம் குறைஞ்சிருக்கு,, இன்னும் கொஞ்சநாள் ஆனா எல்லாம் சரியாயிடும் பாரு” என்று ஆறுதல் சொன்னான்
அவளை பார்த்தும் ஏற்பட்ட அதிர்ச்சியை மறைக்க மறுபடியும் கம்பியூட்டர் பக்கம் திரும்பிக்கொண்டான் சத்யன்.,, காலையில் ரயில்நிலையத்தில் பார்த்து சத்யனின் கவனத்தை கவர்ந்த அதே பெண்தான் அனிதாவுடன் வந்திருந்தாள்
இயல்பிலேயே சத்யன் பெண்களை தவறாக சிந்திக்க மாட்டான்,, பணிரெண்டு வயதுக்கு முன்பு அவன் தாயின் வளர்ப்பும் சரி,, அதன்பிறகு இந்த பதினாறு வருடமாக அவனை கவனித்துக் கொள்ளும் பாட்டியின் வளர்ப்பும் சரி அவனை பெண்களை மதிக்க மட்டுமே கற்றுக்கொடுத்தது,, அதுமட்டுமில்லாமல் அவனுக்கும் மூன்று தங்கைகள் இருந்தார்கள்,, அவன் அதைப்பற்றி பேச மறுத்தாலும் உண்மை அதுதான்,,
சில்லென்று குத்தூசியை போல் முதுகெலும்பை ஊடுருவும் குளிர்ந்த காற்று வீசும் அதிகாலை,, அந்த குளிருக்கு பயந்து மரங்களும் செடி கொடிகளும் கூட தலையசைக்க மறுத்து சத்தமின்றி அமைதி காக்க… சில்வண்டுகளின் ரீங்காரத்தை தவிர அவ்வப்போது ஒன்றிரண்டு வாகனங்களின் சத்தமும் மட்டுமே கேட்டது
தனது இரண்டு பிள்ளைகளின் படிப்பிலும் வளர்ச்சியிலும் கவனமாக இருக்கும் வாசுகிக்கு மேலும் சுமையாக இருக்க வேண்டாமென்று சத்யன் தனது மனைவி மகனுடன் பக்கத்திலேயே வீடு கட்டிக் கொண்டு தனியாக வந்துவிட்டான்….
“ம் ம் புரியுது செபாஸ்ட்டியன்… ஆனா அதை நாம முன்னாடியே செய்திருக்கனும்…. இப்போ ரொம்ப கிட்டத்தில் வந்தப்பிறகு அனத்தீஸியா பயண்படுத்தினால் மான்சியின் நிலைமையில் வேறு விதமாகிவிட வாய்ப்புண்டு….