
நான் மீண்டும் அவளை சமாதானப்படுத்தினேன். பின் “என்ன சரண் இது? இப்படி ஒரு அக்காவும் அத்தானும் கிடைக்க நீ குடுத்து வச்சிருக்கனும். ஆனா நீ ஏன் இப்டி பண்ற? காலாண்டு பரிட்சையில நீ ஒரு பரிட்சையில கூட பாஸ் பண்ணல..
அவங்க கனவுல மண்ண அள்ளி போடுற மாதிரி இப்டி பண்ணுனா அவங்களால எப்படி தாங்கிக்க முடியும்?” என்று சரணிடம் அறிவுரை சொல்ல அவன் கிணத்தில் போட்ட கல் மாதிரிஅப்படியே உட்கார்ந்திருந்தான்.
பின்னர் அவன் அக்கா கொஞ்சம் அழுகையை குறைத்துக்கொண்டு “டீச்சர் எனக்காக ஒரு ஹெல்ப் பண்ண முடியுமா?” என்று கேட்டாள்.
“என்னம்மா? எதுவா இருந்தாலும் சொல்லு. என்னால முடிஞ்சத செய்றேன்..” என்றேன்.




கவிலில் இருந்து
காலை